6.18.2009

பேனாக்கள் பேசும்!




பேனாக்கள்
பேசும்!

மனிதர்கள்
மனங்களைக்
காயப்படுத்துவதைப்
போல் ...
பேனாக்கள்
பேப்பரைக்
காயப்படுத்தாமலேயே
பேசும்..


கக்கியதெல்லாம்
உண் `மை`
என்றாலும்
கடைசியில்
குப்பைத்
தொட்டிக்குத்தான்
போகின்றன
வெற்றுப்
பேனாக்கள்...
மனிதர்களும்
அப்படித்தான்!





பேனாவும்
சுவைக்கும்..
காதலைப்பற்றி
எழுதினால்
இனிக்கும்....

கண்ட கண்ட
கருமத்தையெல்லாம்
எழுதினால்
கசக்கும்

அநியாயத்தை
எழுதினால்
கோபத்தில்...
உறை (ரை) க்கும் ..


உங்கள்
பேனாக்களுக்கு
உறை (ரை) க்கட்டும்...
அல்லது
இனிக்கட்டும்...

5 comments:

ஆபிரகாம் said...

கண்ட கண்ட
கருமத்தையெல்லாம்
எழுதினால்
கசக்கும்
////
அதுதான் விசைப் பலகைல தட்டச்சுறீங்களா??

Venkatesh Kumaravel said...

மு.மேத்தா வாசனை!
:D

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நீரோடை போல் தெளிவாய், ஆழகாய் இருக்கிறது ...

தமிழ் said...

நல்ல இருக்கிறது

sakthi said...

கக்கியதெல்லாம்
உண் `மை`
என்றாலும்
கடைசியில்
குப்பைத்
தொட்டிக்குத்தான்
போகின்றன
வெற்றுப்
பேனாக்கள்...
மனிதர்களும்
அப்படித்தான்!

ஆஹா அருமை இந்த வரிகள்