5.14.2012

அம்மா -என் முதல் காதலி ....




















இவை நேற்று நான் எனது முகப்புப் புத்தக பக்கத்தில் பிரசுரித்தவை .
எனது முகப்புப் புத்தக பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக்குங்கள் .

5.08.2012

காதல்வாசி

அழகுதேசத்தின்

மகுடம்

நீ



வசீகரமானது

புன்னகை

மட்டுமல்ல -உன்

முறைப்புக்க்களும்தான்



நீ

முறைக்கும்போது

பயம் வரவில்லை

பாசம்தான்

வருகிறது ....



எல்லோர்

கையிலும்

ரேகை இருக்கும்

உன் கையில்

மட்டும் தோகை

இருக்கிறது




உன்

ஒற்றைப்

பார்வையில்

உலகமெல்லாம்

பூ பூக்கும்



உன் கண்களில்

மட்டும் கடவுள்

கண்ணீர்ச் சுரப்பிகளுக்குப்

பதிலாக

கவிதைச்சுரப்பிகளை

வைத்துவிட்டான்



கடலில்

மட்டுமல்ல

உன் கண்ணிலும்

முத்து விளையும்



உனக்காக

அழும்போதுமட்டும்

எனக்கு

கண்ணீருக்குப்

பதிலாக

பன்னீர் வருகிறது



ஐயர் சொன்ன

பிழையான

மந்திரத்தால்

கும்பாபிஷேகத்தின்

போதுகுடியேறாத

சாமி

நீ கோயிலுக்குப்

போனபோது

குடி ஏறிவிட்டது



நீ பாடப்போகும்

தேவாரத்திகாக

காத்துக்கொண்டிருக்கிறது

சாமி

மௌனவிரதம்

இருந்து

ஏமாற்றி விடாதே



உனக்குக்

குத்திவிடுமே

என்பதற்காக

முட்களையெல்லாம்

உதிர்த்துவிட்டு

பூக்களோடு மட்டும்

காத்திருக்கின்றது

என் வீட்டில்

ரோஜாச் செடி




உன்னைப்பார்க்க

கண்கள்

தேவையில்லை

என் மனது

போதும் ...



உலகத்தில் இருக்கும்

அத்தனை

மொழிகளும்

உன் வாயில்

வந்து தவமிருக்கின்றன

நீ பேசிவிடவேண்டும்

என்பதற்காக



பேசப் பேச

தமிழ்

இனிக்கும்

நீ பேசாமல்

இருந்தாலும்

தமிழ் இனிக்கும்



காதலுக்கும்

ஒரு சாமி

கண்டுபிடிக்கவேண்டும்



பிள்ளையார்

சுழிபோல்

அந்தச்சாமியின்

சுழி போட்டு

என் கவிதைகளை

எழுதவேண்டும்



எனக்குத்

தாய்மொழி

தமிழ்

காதலிமொழி

கவிதை



உன்னைப்

பார்க்கும்போது

பேசவரவில்லை

கவிதைதான்

வருகிறது



உனக்கு

மேக்கப் போட

வந்தவள்

குழம்பிப் போனால்

ஒரு பெண்ணை

இதற்குமேல்

எப்படி

அழகாக்க முடியும்



உன்னைப்

பார்த்த கணத்திலிருந்து

காதலின்

ஆஸ்த்தான

கவிஞனாகி விட்டேன்



வெல்வதல்ல

தோற்பதுதான்

வீரம்

காதலில்



உன் வீட்டு

விலாசத்தை மட்டும்

எல்லோரும்

இலகுவாகச்

சொல்லுவார்கள்

`காதல் நாயகி,

143 ,காதல் இல்லம் ,

காதல் வீதி,

காதலூர் ,

காதல் நாடு .`



எவ்வளவுதான்

அழகான பெண்

என்றாலும்

சூப்பர் பிகருடா

என்று சொல்லும்

பையன்கள்

உன்னைப்பார்த்து

மட்டும்தான்

சூப்பர் அழகுடா

என்று சொல்லுகிறார்கள்



நீ கவலைப்படாதே

உன் கவலைகளுக்கான

காரணத்தை என்னிடம்

சொல்லிவிடு

உனக்குப் பதிலாக

நான் கவலைப்பட்டுக்

கொள்கிறேன்



கடவுள் இல்லாத

ஊரில் மட்டுமல்ல

காதல் இல்லா

ஊரிலும்

குடியிருக்க வேண்டாம்



இறந்தபின்பு

சொர்க்கத்திற்குப்போக

வேண்டுமா

நரகத்திற்குப்

போகவேண்டுமா

என்றால்

உன் மனதிற்குள்

போகவேண்டும்

என்பேன் ...



நீ என்னைப்

பார்த்துவிட்டுப்

போன அந்தக்

கணத்தில்

என் வாழ்க்கை

தொடங்கியதா

முடிந்துபோனதா

தெரியாமல் இன்னும்

குழம்பிப் போய்

இருக்கிறேன்



மௌனமே

உன் வார்த்தையானால்

மரணமே

என் வாழ்க்கையாகும்



எனது முகப்புப் புத்தக பக்கத்தையும் லைக் பண்ணுங்கள் நண்பர்களே

https://www.facebook.com/pages/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/214863035244094?bookmark_t=page