3.17.2011

நினைவே கவிதையாய்

நிறையப் பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய்


நினைப்பதும் ஒரு
பசிதான்
என்ன எவ்வளவு
நினைத்தாலும்
அது அடங்குவதில்லை

சாமியை நினைத்தால்
தியானம்
உன்னை நினைத்தால்
ஞானம்

காதலிப்பதைப் போல
இலகுவான வேலை
இல்லை
காதலிக்க வைப்பதைப்போல
கடினமான
வேலையும் இல்லை


எனக்கு வாழ்வதில்
எந்தக் கஷ்டமும்
இல்லை
உன்னை நினைத்தாலே
போதும்
அதேபோல்
சாவதிலும் எந்த
கஷ்டமும் இல்லை
உன்னை
மறந்தாலே போதும்


நான் எப்போதும்
தற்கொலை
செய்ய நினைத்ததே
இல்லை -உன்னை
எனக்குக்
காட்டிய
இந்த வாழ்க்கையை
எப்படி என்னால்
கொலை செய்ய
முடியும் ...