6.25.2009

நாயும் பொண்ணும்



நாயும்
பொண்ணும்

ஹலோ அம்மா ,
நான் ஆகாஷ் கதைக்கிறன் . நீங்க அனுப்பிய பொண்ணின் படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட, பெரிய காது, சின்ன கழுத்து, பட்டிக் காடுமாதிரி நீண்ட கூந்தல்.
சீ சீ இந்தப் பொண்ண எப்படியம்மா நான் கலியாணம் கட்டுறது?
வேண்டாம் என்று சொல்லிடுங்க.

ஹாய் அரவிந்தன்,
நான் ஆகாஷ் கதைக்கிறன். நீ மெயிலில் அனுப்பிய படத்தைப் பார்த்தேன்.
கருப்பா, நீண்ட மூஞ்சியோட , பெரிய காது, சின்ன கழுத்து, நீளமா வால், பியூட்டிபுல் நாய்க் குட்டி மச்சான் .
இப்பவே அட்வானன்ஸ் கொடுத்துடு.


நாயும் மனிதனும்


வீட்டுக்காரி -
டேய் ராமு ...
எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நாய்க்கு பழைய சோறு வைக்க வேண்டாமென்று.

ராமு-
இல்லையம்மா , நேற்றுத்தான் சமைச்சது கொஞ்சம் பழுதாகாத மாதிரி அதுதான்...
சரி ....சரியம்மா இனி வைக்கமாட்டேன். இதை அப்படியே குப்பையில போட்டு விடுறேன்

வீட்டுக்காரி -
குப்பையிலா? அப்படியே ஓரமா வை.
யாராவது அம்மா தாயே என்று கத்திக் கொண்டு வருவானுகள் ...
கொடுக்கலாம்.

பி.கு- இங்கு ராமு என்பது கணவன் என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல.

No comments: