8.10.2010

சும்மா !!!!!!

காற்றடிக்கும்
போதெல்லாம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
தண்ணியில் ....

காற்று
இல்லாமலேயே
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
அவன்
தண்ணியில்...

..........................................................

வேலைக்குப்
போகும் அவசரத்தில்
கிளம்பவேண்டியிருக்கிறது
வீட்டில்
நிறைய வேலைகளை
விட்டுவிட்டு....


...............................................................

அவளும்
நண்பர்கள் என்று
நிறையப் பேரை
அறிமுகப்படுத்திவிட்டாள்

நானும் நண்பிகள்
என்று
நிறையப்பேரை
அறிமுகப்படுத்தி விட்டேன் !

அவர்களில்
ஒருவனையேனும்
காதலித்திருக்கமாட்டாலோ
என்று நான்
நினைத்ததைப்போல

இவள்களில்
ஒருத்தியையேனும்
காதலித்திருக்கமாட்டாரோ
என்று
அவளும்
ஒருவேளை
நினைத்திருப்பாளோ.....!

.............................................................


கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்....