6.29.2010

உதிர்ந்தவை


வானத்தை
அளந்தது
தூரம்....

...........................................

சிறகொடிந்தது
தெரியாமல்
பறக்கும் குருவிக்கு
சிறகு
கொடுக்கிறது
காற்று...

..........................................


எத்தனை
கடிகார முள்
குத்தியும்
காயப்படாமல்
இருக்கிறது
காலம்...

............................................

செருப்பில்லாத
குழந்தையின்
காலை குத்திவிடாமல்
முறிந்து விழுந்தன
முட்கள்...

...............................................


நிமிடங்களாக
செலவழிப்பதால்
இன்னும் பெரிதாக
ஒரு முள் .....
மணித்தியாலயங்களாக
செலவழிப்பதால்
சிறிதாகிப்போனது
மறு முள் .....










6.20.2010

மௌனத்தில் கொட்டிக் கிடக்கும் வார்த்தைகள் .....

உதடுகள்
மௌனமானாலும்
உடம்பு முழுவதும்
வாய்
முளைக்கும்
காதலுக்கு

........................................

என்
ரகசியங்களை
சேமித்து வைக்கின்றேன்
உன்
மௌனத்தில்...

................................................


உன்
மௌனத்தை
கொஞ்சம்
கட்டி வையேன்
இப்படி
வார்த்ததைகள்
வந்து
கொட்டுகின்றனவே!

................................................

நீ
மௌனிக்கும்
போதுதான்
புரிந்துகொண்டேன்
மௌனத்திற்கு
பூக்கத்தான்
தெரியும்
பேசத் தெரியாது...

.........................................

உலகத்தில்
அதிகம்
பேசப்படும்
மொழி
எதுவென
ஆசிரியர்
கேட்டார்
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைச் சொல்ல
நீ மட்டும்
மௌனமாய்
இருந்தாய்
சரியென்பதைப் போல
ஆசிரியரும்
விட்டு விட்டு
வேறுபாடம்
நடத்தத்
தொடங்கினார்...

..............................................

உன் வார்த்தைகளை
ரசிக்கலாம்
மௌனத்தை
அனுபவிக்கலாம்...


..................................................