1.31.2010

கவிதை

எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

பகுத்தறிவு

அறிவாளி
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...

ஆறாவது அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு

வெளி

உனக்கும்
எனக்கும்
இடையே
எதுவும்
இல்லை
காதலைத்
தவிர ...

அனுதாபம்

பக்கத்து
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது

தேடல்

எதைப்பற்றி
கவிதை எழுதலாம்
என்று
தேடித் தேடிக்
களைத்த பின்பு
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
தேடல்

விட்டில் பூச்சி

என் விளக்கின்
வெளிச்சத்திற்கு
விட்டில் பூச்சிகள்
வந்துவிடும்
என்ற
அச்சத்தில்
ஜன்னல் கதவுகள்
எல்லாவற்றையும்
மூடிவைத்துவிட்டு
கவிதை
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
விட்டில் பூச்சி!

வெளிச்சம்
கிடைக்காததால்
இருபத்திநாலு
மணிநேரத்திற்கு
முன்னமே இறந்து
விழுந்தன
விட்டில்
பூச்சிகள்...

மரணத்தின் உண்மை

மரணம் பற்றிய
என்
சந்தேகங்கள்
தீர்ந்தது
நான்
மரணித்தபோது...

அழகான கவிதை

கழிப்பறையில்
இருந்து
யோசிக்கும்போதும்
கிடைக்கிறது
அழகான
கவிதை....

காற்றுக்குத் தீனி

உன் எழுத்துப்
பிழைகளை
மன்னிக்கும்
தமிழ்

*****************

பிள்ளையார்
சுழி
போட்டாய்
பிள்ளையாரே
வந்து
குடிகொண்டுவிட்டார்...


**************************
நீ
மீண்டும் மீண்டும்
தொட வேண்டும்
என்பதற்காகவே
தொடும்போதெல்லாம்
வாடாமல்
இருக்கிறது
தொட்டச்சினுங்கி



*********************
உன்னோடு
இருக்கும்
நேரங்களை
பத்திரப்படுத்துகிறது
என் கடிகாரம்


***********************
காற்றுக்குத்
தீனி போடுகின்றன
உன் கூந்தல்
பின்னலில்
சிக்காத சில
தலை மயிர்கள்...


************************
ஏதாவது
கோபத்தில்
உன்னைத் திட்டுவோம்
என்று தேடும் பொது
ஓடி ஒளிந்துகொள்கின்றன
வார்த்தைகள்...


****************************
உனக்குப்
பிடிக்காதவனாய்
இருப்பதைவிட
மரணித்து மரணித்து
உயிர்த்தெழுவேன்
உனக்குப்
பிடித்தவனாய்
பிறக்கும்வரை...

1.25.2010

?????

காதல்
கடல்
காமம்
துளி

வாழ்க்கை
மிதக்கிறது.....


காமம்
கடல்
காதல்
துளி

வாழ்க்கை
மூழ்கிவிட்டது ...

1.24.2010

உரிமை

என் வீடு
என்றுதான்
சொல்லிக்கொள்கிறேன்

எனக்கு வரும்
கடிதங்களில் கூட
இந்த வீட்டின்
முகவரிதான்
இருக்கிறது

வெளியில் சென்று
அலுப்புத்தட்டினால்
நம்ம
வீட்டுக்குப் போவோம்
அப்பா!
என்றுதான்
அடம் பிடிக்கின்றன...
குழந்தைகள்


வேலை முடிந்து
திரும்பும் போது
என் வீட்டுக்குப்
போகின்றேன்
என்றுதான்
நண்பர்களிடம்
சொல்லிவிட்டுப்
புறப்படுகின்றேன்...



எனது எனது
என்றுதான்
என் மனைவியும்
ஒவ்வொரு
பூச்செடியையும்
முற்றத்தில்
பராமரித்து
அழகு பார்க்கிறாள்...

இப்படி
என் வீடென்று
சொல்லிக்கொண்டாலும்....
இந்த வீட்டிலேயே
நான்
விருந்தாளியாகிப்
போகின்றேன்
வீட்டுக் காரன்
வாடகை கேட்டு
வரும்போது..

1.23.2010

காரணம்



ஏதாவது
காரணம்
கிடைத்துவிடுகின்றது
குடிப்பதற்கு...

காரணம் மட்டும்
போதுமானதாய்
இல்லை...

வறுத்த கோழி
சில சிக்கிரட்
சோடா -என
இன்னும் சிலவும்
தேவைப்படுகின்றது...

குடித்து
முடிக்கும்போது
எல்லாம்
முடிந்துபோக
காரணம் மட்டும்
அப்படியே
இருக்கிறது
அடுத்தநாள்
குடிப்பதற்காக...