10.29.2009

சின்னதாய் ஒரு கவிதை (மீள் பதிவு )


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் வழிகிறது
உன் கண்களில்...
கண்ணீர்








என்
முரட்டு உதடுகள்
உன்னைக் காயப்படுத்திவிடுமோ
என்ற அச்சத்தில்தான்
இன்னும்
முத்தமிடாமல் இருக்கின்றன....

10.19.2009

பேய்க் கவிதைகள் ( தைரியமானவங்க மட்டும் வாங்க ) )

நீ காதலிக்கவில்லை
என்ற சோகத்தில்
செத்துப் போனேன்!

என்ன பயன்?

நீ இறந்த
பின்பாவது
என்னைக்
காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
அதே சோகத்தோடு
காத்திருக்கிறேன்.

***************************

நான் இறந்தபின்பும்
உயிர்வாழ்வதாய்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
எனக்குள்
உயிர்வாழும்
உன்னையும்
சேர்த்து
புதைத்து
விடுவார்கள்
என்ற பயத்தில்

**********************************
நான்
இறந்த பின்பு
உன்னைப்பற்றி
எல்லோரிடமும்
சொன்னேன்!
எல்லோரும்
கவலைப்படுகிறார்கள்
உன்னைப்பார்க்காமலே
இறந்து விட்டதாக


*****************************

என்னைக்
கொலை
செய்தபின்புகூட
என்னை
எடுத்துப் போக
முடியவில்லை
எமனால்....
எமனல்ல
எவன் வந்தாலும்
எனைப்
பிரிக்க முடியாது
உன்னிலிருந்து....

***************************

உன்னை
மறந்து
கொண்டு
உயிர்வாழ்வதைவிட...
நினைத்துக்
கொண்டு
இறப்பது மேல் !

***************************

என் உடலை
எரித்து விட்டார்கள்
பரவாயில்லை
எனக்கு உயிர்
மட்டும் போதும்
உன் உடலின்
ஒரு மூலையில்
இருந்து
வாழ்ந்து விட்டுப்
போகிறேன்

************************

என்னை
எரிக்கும்
முன்பு...
நீ வருவாய்
என்று
பார்த்த்திருந்தேன்
பெண்கள்
சுடுகாட்டுக்கு
வரக்கூடதென்று
உன்னைத்
தடுத்து விட்டார்கள்
நீ இல்லாத
சுடுகாட்டில்
நான் எரிய
மாட்டேன் என்று
எழுந்து
வந்துவிட்டேன்

******************************


என் கல்லறையில்
வைக்கப்படும்
பூக்களையெல்லாம்
சேமித்துக்
கொண்டிருக்கிறேன்!
என்றோ
ஒருநாள்
நீ வரும்போது
தருவதற்காய்....

*****************************

முந்திய பேய்க் கவிதைகள் ,

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html


10.16.2009

பிணத்தோடு உறவு கொண்டுவிட்டு......

1.
ஒரு மணிநேரம்தான்
பேரம்.
அந்த ஒரு
மணிநேரம்
தற்காலிகமாக
செத்துப்போனாள்!
பிணத்தோடு
உறவுகொண்டுவிட்டு
பணத்தைக்
கொடுத்துவிட்டு
புறப்பட்டான்....
போனதும்
அவள்
அவசரமாய்
உயிர்த்தெழுந்தாள் ...
பசியோடு
வீட்டில்
பலபேர்.



************************************

2.

முடிந்து
போய் விட்டாள்.
கொடுத்த
பணத்திற்கான
இன்பம்
இப்போது
அவனிடம்
இல்லை.


*********************************

3.

சின்ன வீட்டுக்கு
இல்லை
ஒரு வீடு

10.14.2009

ஒரு குழந்தையை சந்தோசப்படுத்த வாருங்கள்

ஆபத்து வந்தாலோ அல்லது தாங்க முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ `` கடவுளே என்றுதான் ஆத்திகர்கள் அழைப்பார்கள். நாத்திகர்கள் எப்படி அழைப்பார்கள்? நானும் கடவுளைத்தான் துணைக்கழைப்பது வழக்கம். ஆனாலும் சிலவேளைகளில் கடவுளோடு ஆத்திரம் ஏற்படும் பொழுதுகளில், என்னடா இந்தக்கடவுள் என்று அழுத்துக் கொள்ளும் பொழுதுகளில் உதவியாக இருக்குமே , அதுதான் கேட்கிறேன் என் நாத்திக நண்பர்களே !
ஆபத்து வேளைகளில் யாரை அழைக்கிறீர்கள்.

..........................................................................................................................................................................
கடவுளும் சாதாரண மனிதர்களைப்போல தவறு விடுகிறானே என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒரு குழந்தை வயது வெறும் 12 .
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண ஒரு பிள்ளையாக , சுட்டியாக இருந்தது. திடீரென தன் கேட்கும் திறனை இழந்தது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியர்களுக்கே சவாலாக அமைந்தது அந்தக் குழந்தையின் நோய்.

என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தர்கள், குழந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தன் புலன்களை இழந்தது.கேட்கும் திறனைத்தொடர்ந்து பார்க்கும் திறனும் குறையத் தொடங்கியது.

அப்போதுதான் குழந்தைக்கு உலகத்திலேயே வெறும் சில நூறு பேர்களுக்கே ஏற்பட்டு இருக்கும் ஒரு அரிதான நோய் ஏற்பட்டு இருப்பதை வைத்தியர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன பயன் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத அந்த நோய் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இங்கே கடவுள் யாரைத் தண்டிக்கிறான்

அந்தக் குழந்தையையா?

அந்தக் குழந்தையின் உறவினர்களையா?

யாரென்றே தெரியாத அந்தக் குழந்தைக்காக கவலைப் படும் உங்களையா?

*******************************************************************************

சில காலங்களுக்கு முன் ஓடியாடித்திரிந்த அந்தக் குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் திறன்களை இழந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தன் உணவை விழுங்கும் திறனையும் இழந்து போனது. பசித்தால் வாய்திறந்து சொல்ல முடியாது, வயிற்றைத் தட்டிக் காட்டும். வாயினால் விழுங்க முடியாது, மூக்கின் ஊடாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயின் ஊடாக திரவ சாப்பாடுகளை மட்டுமே வழங்க முடியும் .

மூக்கின் உள்ளே ஒரு தும்பு போனாலே படும் அவஸ்தைகள் நாம் அறிவோம். இந்தக்க் குழந்தைக்கோ மூக்கின் ஊடான ஒரு தடித்த குழாய்தான் சாப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று வயிற்றின் ஊடாக ஒரு குழாயை செலுத்தி நிரந்தரமாக அக்குழாயின் ஊடாக சாப்பாடு வழங்குவதற்கான ஒரு சத்திர சிகிச்சை நடைபெறப்போகிறது.

அதற்கு முன்பு, நேற்று அந்தக் குழந்தை தன் குறைந்து போன பார்வைப்புலத்தோடு வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.

இதை நான் இன்டர் நெட்டில் போடவா எல்லோரும் பார்ப்பார்கள் என்று எழுத்தின் மூலமாக கேட்டேன் . அந்த நேரத்தில் பூரிப்படைந்த அந்த பிஞ்சு மனசு உடனடியாக மேலும் மூன்று படங்களை வரைந்து கொடுத்தது சில மணி நேரங்களில். அப்போது அந்தப் படங்கள் அழகாக இருக்கிறது என்று சைகையிலே சொன்னேன் , தன் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாத அந்தப் பிள்ளை அந்தப் படங்களை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டது .

அந்தப் படங்களை நீங்களும் பாருங்கள். அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள். சத்திர சிகிச்சை முடிந்து வலியோடு வருகின்ற அந்த குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு துளி சந்தோசத்தையாவ்து கொடுக்கும்.

அந்தக் குழந்தையால் தமிழை வாசிக்க முடியாது, ஆகவே தயவு செய்து ஆங்கிலத்திலே சிறு குறிப்பாக இந்த ஓவியங்கள் ``அழகாக இருக்கிறது `` போன்று சிறிய வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போங்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தையால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , அதுவரை அது இப்படி சந்தோசம் தரும் சிறு சிறு விடயங்களையாவது பார்க்கட்டும்.

அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையின் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தோசத்தையாவது கொடுக்கும்.

















10.13.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

``அம்மா தாயே``
பிச்சை போடு
என்பதைக்கேட்டு
சந்தோஷப்படுகிறது
மலடி என்றே
அழைக்கப்படும்
ஒருவளின்
மனசு

***********************

தற்கொலை
செய்யாமல்
வாழத்தெரியாத
ஒருவனால்
தற்கொலை
செய்தபின்பு
கூட
வாழமுடியவில்லை

************************

காதலிக்கும் போது!
கவிதை
எழுதத் தெரிந்தவர்கள்
நல்ல கவிஞர்களாகிறார்கள்
தெரியாதவர்கள்
நல்ல ரசிகர்களாகிறார்கள்

*********************************

விரக்தியோடு
கவிதை
எழுதத்
தொடங்கினேன்
விரக்தி
கவிதையாகிப்போனது

****************************

அழுகின்ற
குழந்தைக்கு
பால் கொடுத்துவிட்டு
புறப்பட்டாள்...
கருக்கலைக்க
அழுதது
ஒரு குழந்தை
உள்ளே!

*********************

அழிந்து போ
என்று
சூனியம்
செய்கிறார்கள்....
ஒருவேளை
அழித்தல் கடவுளின்
அவதாரமோ!

*******************

கள்ளக்காதலியுடன்
சல்லாபம்
செய்யும்
மனதில்
அமர்ந்து
அவஸ்த்தைப்படுத்துகிறது
ஒரு கவலை
``என் மனைவியும்
இப்படி
இருப்பாளோ ?``

****************************

வாழ்வதற்கு
நான்
தயார்
வாழ்க்கை
தயாரா?
என்னைக் காப்பாற்ற
முடியாமல்
தடுமாறும்
வாழ்க்கையைக்
காப்பாற்றவே
நான்
வாழ்கிறேன்!

*********************

விதம் விதமாய்
சாப்பாடு
இருந்தாலும்
பேர்சில்
இருக்கும்
பட்ஜெட்டுக்கு
ஏற்பவே
சாப்பாட்டை
ஓடர் செய்யும்
எனக்கு
நாவடக்கம்
இல்லை
என்று
எப்படிச் சொல்வது

************************

சிலுவையில்
அறையுங்கள்
நானும்
கடவுளாகனும்
என்றவனால்
மீண்டும்
உயிர்த்தெழ
முடியவில்லை


10.07.2009

பஸ்சில் பயணிக்கும் ஒரு காதல் கதை



நீயும்
நானும்
ஒரு பஸ்
வண்டியில்
பயணித்துக்
கொண்டிருந்தோம்...


ஓட்டுனருக்கு
எல்லோரும்
திட்டிக்கொண்டிருந்தார்கள்
மெதுவாக
ஓட்டுவதாகச்
சொல்லி...
நான் மட்டும்
வேகமாக
ஓட்டுவதாகச்
சொல்லி
திட்டிக்கொண்டிருந்தேன்!


நடத்துனர்
எங்கே போக
வேண்டும்
என்றதற்கு
உன் மனதிற்குள்
என்றுவிட்டேன்!


எல்லோரையும்
போல
பஸ் டிக்கெட்டை
பத்திரப் படுத்திக்
கொண்டேன் !
பரிசோதகருக்குப்
பயந்தல்ல...
உன்னோடு
பயணித்த
இந்த
டிக்கெட்டைவிட
நல்ல
ஞாபகச்சின்னம்
வேறென்ன
இருக்க
முடியும்...



பஸ் வண்டி
ஒவ்வொரு
நிறுத்தத்திலும்
தன் பயணத்தைப்
புதுப்பித்துக்
கொண்டது...
நீயும்
ஒவ்வொரு
புன்னகையின்
முடிவிலும்
உன் மௌனத்தைப்
புதுப்பித்துக்
கொண்டாய் ...


நீ என்னைப்
பார்ப்பதே
இல்லையே
என்று
கவலைப்
பட்டுக்கொன்டிருந்தேன் !
பிக்பொக்கட் காரன்
என் பேசை
எடுத்ததை
காட்டிக்கொடுத்து
நிரூபித்துவிட்டாய்
நீயும்
என்னைப்பார்க்கிறாய்....

புரிந்து கொண்டேன்
உன்னைப்போலத்தான்
எனக்கும்
நேரே பார்க்க
தைரியம்
இல்லையென்பதையும் !

ஒன்று மட்டும்
புரியவில்லை
எப்படி
நான் பார்க்காத
நேரத்தைச்
சரியாக
கண்டுபிடித்து
நீ பார்க்கிறாய்..?

திருட்டுத்தனமாய்
மௌனத்தில்-பேசத்
தெரிந்ததைப்போல
திரும்பியிருந்தே
திருட்டுத்தனமாய்
பார்க்கவும்
தெரிந்திருக்கிறது
உனக்கு


உன் வீட்டை
அண்மிக்க
அண்மிக்க
என் ஆயுளை
அண்மிக்கிற
அவதி -
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
இறங்கி விடுவாயே!


இருந்தாலும்
எல்லோரையும்
போல உன்
பயணப் பையை
மட்டும்
எடுத்துக்கொண்டு
நீ இறங்கவில்லை
கூடவே
என்னையும்
எடுத்த்க்கொண்டு
இறங்கினாய்...

புரிந்துகொள்!
உன்னோடான
என் வாழ்வின்
பயணம்
என்றும்
முடிந்து
விடுவதில்லை ...




10.03.2009

அழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...

அழகு
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...

நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....

மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....



தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....

என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...








நெருப்புச் சுவாசம்





நெருப்பையே

சுவாசமாக்கும்...
உங்கள்
விதியையே
மாற்றி -
எழுதும்....
இந்த
வெள்ளை நிறப்
பென்சில்

************************************



முதலில்
ஆட்கொள்ளும்
பிறகு
ஆளையே
கொள்ளும்
பாசக் கயிற்றின்
பரிணாம
வளர்ச்சி
சின்னதாய்
ஒரு
சிகரெட் !

************************

தூக்கிப்போட்டு
கவ்விப் பிடித்தால்
ஆண்மைக்கு
ஸ்டைலாத்தான்
இருக்கும்
ஆனால்
அந்த ஆண்மையே
அழித்துவிடும் ...


வீரியத்தைக்
குறைத்துவிடும்
வீரியம் கொஞ்சம்
குறைந்த
இந்த
சயனைட்டுக்
குப்பிகள்...


**********************************

ரத்தக்குழாயை
அடைத்து
இதயத்துடிப்பை
நிறுத்தும்...

புற்று நோயாய்
மூச்சுக்குழாயை
அடைக்கும் ...

விந்துக்களின்
எண்ணிக்கை
மட்டுமல்ல
உன் வீரியத்தையே
குறைக்கும்....

இதற்குமப்பால்
உழைக்கிறேதெல்லாம்
உன் உதட்டில்
சிக்கிரெட்டாய்
புகைந்தால்...

உன் குழந்தை
உதட்டில்
வெற்று
சூப்பியை
சூப்பித்தான்
ஏமாந்து கொண்டிருக்கும் !