9.23.2009

தமிழரசி - ஒரு கவிதை

நட்புக்கு
நீ நம்பிக்கை

அன்புக்கு
நீ அட்சயபாத்திரம்

கவிதைக்கு
நீ கலங்கரைவிளக்கம்

தமிழுக்கோ
நீ அரசிமட்டுமல்ல
உயிரும்கூட .....

உனக்கு
ஒரு நாள்தான்
பிறந்தநாள்
தமிழுக்கோ
நீ கவிதை
எழுதும்
ஒவ்வொருநாளும்
பிறந்தநாள்....

உன்
வீட்டுத்தோட்டத்தில்
பூக்களுக்குப்
பதிலாய்
கவிதைகள்தான்
பூத்துக்
குலுங்க்குகின்றனவோ!

உன் எழுத்துக்கள்
அலங்கரிப்பது
வார்த்தைகளை
மட்டுமல்ல
வாழ்க்கையையும்தான் ...

எத்தனை பேர்
எழுத்துக்களை
வாசித்தாலும்
எழுத்துக்களுக்கே
தங்களை
உச்சரிக்கக்
கற்றுக்கொடுத்தது
உன்
எழுத்தோசையல்லவா!

உன்
எழுத்துக்களில்
பின்நவீனத்துவம்
இல்லை...
ஆனாலும்
பின் நாகரீகத்துவம்
இருக்கிறது !

எல்லோரும்
ஓட்சிசனை
உள்ளெடுத்து
காபனீரொட்சைத்தான்
வெளிவிடுவோம்...
நீயோ
உள்ளெடுப்பது
எதையானாலும்
வெளியிடுவது
கவிதைகளையல்லவா....


உனக்கு
கவிதை பிடிக்குமோ
இல்லையோ!
கவிதைகளுக்கு
உன்னைப்
பிடித்திருக்கிறது
அதுதான்
நீ எழுதும்
எல்லாமே
கவிதையாகிப்போகிறது...

உன்னைப்போல
எங்களைப்போல
உன் பிறந்தநாளை
கவிதைகளும்
கூடிக் -
கொண்டாடிக்கொண்டிருக்கிறது


உன் வீட்டை
விட்டு கொஞ்சம்
வெளியே
வந்துபார்
எல்லா
நட்சத்திரங்களும்
இன்று ஒளி
வீசுவதற்குப்
பதிலாய்
என்
கவிதைகளை
வீசிக்கொண்டிருக்கும்
உனக்கு
பிறந்தநாள்
பரிசாய்...

அபூர்வமாய்
கிடைத்த
நேரத்தில்
அவசரமாய் தர
இதைவிட
வேறு பரிசு
இல்லை
என்னிடத்தில்...

தமிழே நீ
வாழ்க .....
தமிழர்களைக்
காப்பாற்றத்தான்
யாருமில்லை
தமிழைக்
காப்பாற்றவாவது
நீ வாழ்க!!!!!!!!!!!









9.19.2009

நீ உதிர்த்த(சு)வை


எத்தனையோ
அழகான
பெண்களைப்
பார்த்த
போதெல்லாம்
காதலிக்கவே
மாட்டேன்
என்று காதலோடு
அடம்பிடித்துக்
கொண்டிருந்தேன்!
பாழாய்ப் போன
காதல்
கடைசியில்
உன்னை அனுப்பி
என்னைப்
பழிவாங்கி
விட்டது.....

************************

கடவுளுக்கு
நிறைய
அவதாரம்
காதலுக்கு
ஒரே ஒரு
அவதாரம்
நீ....

************************

உன்னைப் பார்த்த
நொடியில்
இறந்து போய்....
என்
வாழ்க்கையின்
மீதி நாட்களை
உன்னோடு
வாழ்வதற்காக
சேமித்து விட்டேன்!
வா
உயிர்பெற்று
மீதியை
வாழ்ந்து முடிக்க
வேண்டும் ...


*********************

நீ வெட்டிப்
போடும்
நகம்
முளைக்கிறது
கவிதையாய்...
யார் சொன்னது
நகங்களுக்கு
உயிர்-
இல்லையென்று...


************************

நீ சூடிக்
கொள்வதற்காய்
ஒரு
பூப்பறித்தாய்
நீ பறித்த
பூ மீண்டும்
ஒருதடவை
மலர்ந்தது...
பறிக்காத
பூக்கள்
அந்தியாகும்
முன்னே
வாடிப்போகின....

*********************



உனக்கு பரிசு
வாங்குவதற்காய்
கடைகளில்
ஏறி இறங்கும்
போதெல்லாம்
கடைசியில்
என்னையே
வாங்கி
வருகின்றேன்....

********************

நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவிதைகளை
கண்டுபிடிக்கும்
கவிஞன்
உன் ஒவ்வொரு
அசைவிலும்
ஒளிந்திருக்கும்
கவிதைகளைக்
கண்டு பிடிக்கும்
கவிஞன்...

*********************

பாடம் சொன்ன
ஆசிரியரே
பாடத்தை
மறப்பதுபோல
எனக்கு காதலிக்க
கற்றுக் -
கொடுத்துவிட்டு
நீ
மறந்து போனாயே!

**********************

எனக்குள்
இருக்கும்
என்னையெல்லாம்
எடுத்தெறிந்து
கொண்டிருக்கிறேன்
உன்னைச்
சேமிக்க
இடம் போதாததால்.....



9.01.2009

வாழ்க்கை நிறையப் பொய்



நிஜங்கள்
என்னை
காட்டிக்கொடுக்கின்றன
பொய்கள்தான்
காப்பாற்றி விடுகின்றன....



உண்மை
சொல்வதை விடவும்
பொய் சொல்லவே
அதிகம்
தைரியம் தேவை
என்றாலும்....
எந்தக் கோழையும்
சுலபமாய்ச்
சொல்லிவிடுகிறான்
பொய்யை....


காதலைச் சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கூட
இதுவரை
காதலிக்கவேயில்லை
என்று
பொய் சொல்ல
தைரியம்
எப்படியோ
வந்துவிடுகிறது


குடித்து விட்டு
வீட்டுக்கு
வந்து
சொன்னேன்...
நண்பனுக்காகவே
கொஞ்சம்
குடித்தேன்!
அந்த நண்பன்
வீட்டிலும்
அதே பொய்....


பொய் சொல்லிவிட்டு
கடவுளே
மன்னித்துவிடு
என்று
வேண்டும்போது
எந்தக் கடவுளும்
இதுவரை வந்து
மன்னிப்புக்
கொடுக்காவிட்டாலும்
செய்த பிழை
நீங்கி விட்டதாய்
சந்தோசப்படுகிறது
மனசு....
இதற்காகவே
ஆத்திகனாக
இருக்கிறார்கள்
நிறையப் பேர்


மற்றவர்களோடு
இருக்கும் போது
சொல்கிற
பொய்களை
எண்ணி
தனிமையில்
இருக்கும் போது
வருத்தப்படுகிற
சாதாரண
மனிதன்தான்
நானும் ...

எத்தனை
மனிதர்களை
பொய் சொல்லி
ஏமாற்றி இருந்தாலும்
என்
மனச்சாட்சியை
ஒருமுறை கூட
ஏமாற்ற
முடிந்ததில்லை...


கவிதைக்கு
மட்டுமல்ல
வாழ்க்கைக்கும்
பொய் அழகு
சிலவேளைகளில்....


பொய்
சொல்வெதெல்லாம்
ஒரு
பொழைப்பா
என்று
திட்டுபவர்களே
கொஞ்சம்
சொல்லித்தாருங்கள்
பொய்
சொல்லாமல்
வாழ்வெதப்படி....?