காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.
இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.
ஒரு சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வந்திருக்கும் நேரத்தில் வலிப்பு வந்தால் ,
முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.
அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .
ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
febrile fits எந்த வயதினருக்கு ஏற்படும்?
பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் .
(இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)
ஒருமுறை febrile fits வந்தால் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?
30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.
febrile fitsயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு நோய் ஏற்படலாமா?
மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
ஒருமுறை febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு மறு முறை காய்ச்சல் வரும் போது தாய் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?
ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.
குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)
அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.
அவையாவன ,
- ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
- மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
- மெல்லியஆடைஅணிவித்தல்
febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு அதை தடுப்பதற்காக ஏதாவது மருந்துகள் கொடுக்கப் பட வேண்டுமா?
வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும்.
( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)
febrile fits ஏற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப் படும் போது ஏதாவது முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா?
febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.
ஒரு பிள்ளைக்கு வலிப்பு வரும் போது அருகில் இருப்பவர்கள் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நடைமுறைகள் என்ன ?
முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .
பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)
நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)
வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).
இது பற்றிய சரியான நடைமுறையை ஒவ்வொரு தாயும் வைத்தியரிடம் கேட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இது ஒரு உயிர் காக்கும் செயமுறையாகும்.
பி.கு- இந்த இடுகை ஒரு பதிவரின் தேவை அறிந்து , அவருக்காக இடப்படுகிறது.
உண்மை தான்