9.04.2011

ஒரு காதலின் கதை

உயிர் உடலுக்குள்
காதல் உயிருக்குள்

சொல்லிக்கொண்டு
வருவதில்லை
வந்தபின்பு
எவ்வளவு
சொன்னாலும்
போவதில்லை
காதல்

என்னை மறந்துவிடு
என்று இலகுவாகச்
சொல்லிவிட்டாய்
அவ்வளவு இலகுவாக
மறக்க
முடியுமென்றால்
அது காதலே
இல்லை

எனக்கு
காதலிக்க மட்டும்தான்
தெரியும்
காதலை அழிக்கவல்ல

நான் உன்னோட
வாழ நினைத்தது
நான்
வாழ்வதற்காக அல்ல
உன்னை
வாழ வைப்பதற்காக


உன்னைப் பார்த்த
என் கண்கள்
எங்கே பார்த்தாலும்
அங்கே
கவிதை முளைக்கிறது

நீ வெளியே
வந்தால்
வெள்ளிக்கிழமை
தங்கக் கிழமை
ஆகிப்போகிறது

நீ
1,2,3,4...
எழுதியதைப்
பார்த்தபின்புதான்
வார்த்தைகளால்
மட்டுமல்ல
வெறும் இலக்கங்களாலும்
கவிதை
எழுதலாம் என்று
அறிந்து கொண்டேன்

உயிர்வாழ
உணவு
தேவையில்லை
நீ வருகின்ற
கனவு போதும்


எத்தனையோ
வருடங்களுக்குப்
பின்பு கூட
நாம் சந்திக்கலாம்
அப்போதுகூட
நான்
வாழ்ந்துகொண்டிருக்கிறேனோ
இல்லையோ
கட்டாயமாய்
உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன்