10.01.2011

வாழ்க்கை நிறையக் கவிதை

அழாமல்
கவலைகளைக்
கொண்டாட
கவிதைகள்
கைகொடுக்கின்றன

கன்னத்
தை வருடும்
கண்ணீர்த்துளியை விட
தனிமையில்
நல்ல
நண்பன் இல்லை

கவலைகளை
ரசிக்கப்பழகாவிட்டால்
வாழ்க்கையின்
பெரும்பகுதி
ரசிப்பதற்குஎதுவும்
இல்லாமலேயே
கழிந்து விடும்

என் ஒவ்வொரு
கவலையிலும்
ஒளிந்திருக்கும்
நான்
தொலைத்த
சந்தோசத்தைக்
கண்டு பிடித்தே
என்
கவலைகளைப்
போக்கிக் கொள்கிறேன்

வாழ்க்கை நிறையக் கவிதை

தனிமையை

நேசிக்க

வைக்கும்

இரவுக்கு

நன்றி...


ஒரு

ஏகாந்தத்திற்குள்ளும்

ஒளிந்திருக்கலாம்

ஒரு மாபெரும்

புரட்சியின்

இரைச்சல் ...


யதார்த்த

முரண்பாடுகளிலும்

முளைக்கலாம்

ஒரு ............!


உழைத்துக்

கொண்டிருக்கும்

விழிப்புலன்

அற்றவனைப்

பார்த்தபோது

வெட்கித்

தலைகுனிந்தது

என் விழி...


சாவதில் ஒன்றும்

பயமில்லை

எனக்கு

ஆனால்

அதற்கு முன்

வாழ வேண்டும்

காத்திருத்தல்

எந்த ஒரு
கணத்திலும்
உனக்கும்
என் மீது
காதல் வரலாம்
அந்தக் கணம்
என்
மரணமாகக் கூட
இருக்கலாம் .....