12.12.2009

வாழ்க்கை நிறையைக் கவிதை(உரையாடல் போட்டிக்காக)

பிள்ளையார்
சுழியையையும்
ஏமாற்றிவிட்டு
வந்துவிடுகின்றன
எழுத்துப்
பிழைகள்...

...........................................

மரண பயத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மரணிக்கிறது
மனசு...

..........................................
பார்வையற்றவன்
பார்க்கிறான்....
கைபிடித்து
வீதிகடக்க
உதவும்
கையில்
முளைக்கும்
அன்புக்
கண்களால்....

...........................................

மலிவு விலையில்
வாங்கிய
அரிசியை
எப்படித்தான்
அரித்தாலும்....
வந்துவிடுகின்ற
கல்லைக்
காரணம் காட்டி
தொடங்குகிற
சண்டையே
அன்றைக்கு
அவன்
குடிக்கக் காரணம்
ஆகிவிடுகின்றது...
குடிக்கிற காசைக்
கொடுத்திருந்தால்
அடுத்த நாளாவது
நல்ல சோறு
சமைத்திருப்பாள்
எல்லோருக்கும்
சேர்த்து


.........................................

சாமியைத்தேடிப்
போனவன்
சாமியாகிப்போனான்
சாமியைக்
கானும்முன்னே

............................................




பூக்கத்தான்
செய்கிறது
விதவையின்
வீட்டு முற்றத்தில்
இருக்கும்
ரோஜாச் செடியும்...

***************************

சாந்தி
முகூர்த்தத்தில்
உருவாகும்
குழந்தைக்கும்
செவ்வாய் தோஷம்...


**************************

தடுக்கி
விழும்போது
அம்மா
என்றுதான்
அழைக்கிறது
அனாதையில்லத்தில்
இருக்கும்
குழந்தையும்....


*************************
வாழாவெட்டியின்
உடலிலும்
இன்னும் இருக்கிறது
உயிர்


**************************

முந்தியவை

வாழ்க்கை நிறையக் கவிதை


வாழ்க்கை நிறைய கவிதை





11.30.2009

sms கவிதைகள்

வெட்கத்தில் தொலைந்தேன்
கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்



நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்



எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...



ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...



முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...



காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...




11.28.2009

சுடுகாட்டில் இருந்து எழுதியவை !

சுடுகாட்டில்
பூக்கும்
பூக்களிலும்
வாசம் ....

****************

மயான
அமைதியில்
திடீரென
கேட்டன
ஒப்பாரிகள்...
ஒரு
பேய்
இறந்து போய்
இருந்தது...

*******************

ஒரு
உடல்
எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம்
கொஞ்சமாய்
வெளியேறியது
ஒரு பேய்


**********************

பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`


*************************`
ஒவ்வொருவரினுள்ளும்
ஒரு பேய்
இருக்கிறது
உயிரைச்சுவாசித்துக்
கொண்டு...
உயிர்பிரியும்
போது
அதுவும்
பிரிந்து
போகிறது....

********************
சுடலை
வைரவரை
வணங்கிவிட்டு
ஊருக்குள்
நுழைந்தது
ஒரு பேய்...
வைரவருக்கு
சடங்கு வைத்துக்
கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்...

பேயை
விரட்டச்சொல்லி


************************

படுகொலை
செய்யப்பட்ட
நிறையத் தமிழர்கள்
புதைக்கப் பட்டார்கள்
ஒரு குழிக்குள்...

ஒரு சிறிய
அகதிமுகாமில்
நிறையப்பேரை
அடைத்துவைத்து
பயிற்சிதந்தது
இதற்குத்தானா ...


***********************

உடலே
கிடைக்காமல்
சிதறிச்
செத்துப்போன
ஒரு உயிர்
தேடி அழைகிறது
தன் கல்லறையை




*************************

உலகம்
நிரம்பி
விட்டதால்
அடுத்த
பிறவிக்கான
வெயிட்டிங் லிஸ்டில்
நிறையப்
பேய்கள்...


தொடரும்....


முந்திய பேய்க்கவிதைகள்!

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html

http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html

11.26.2009

ஒரு காதல் கவிதை

என்னையறியாமல்
உறங்கியபோது
நீ வந்தாய் !
இமைகளைத்தாண்டி
வெளியேறியது
கண்கள் ....

***********************
வருகின்ற
அலைகளுக்குத்
திரும்பிபோக
மனசில்லை
கடற்கரையில்
நீ ....


***********************
நீ
பூசிக்கொண்டாய்
புனிதமானது
திருநீறு


*********************
இதுவரை
முடிந்து போன
என்
ஒவ்வொரு
ஜென்மத்தின்
மரணத்தின்
போதும்...
அடுத்த
ஜென்மத்திலாவது
உன்னோடு
வாழ வேண்டும்
என்று
வேண்டிக்கொண்டுதான்
செத்தேன்..


இந்த
ஜென்மத்தில்
முடிவெடுத்து
விட்டேன்
இறப்பதேயில்லை
என்று



************************
உன்னோடு
வாழாத
நாட்களை
வரவுவைக்க
மறுக்கிறது
வாழ்க்கை

*************************


11.23.2009

தலைப்பை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்

தீ
சாப்பிட்டுக்
கொண்டிருந்தது
மெழுகுவர்த்தியை...

எவரின்
உதவியும்
இல்லாததால்
தன்னைத்தானே
அழித்து
திரியை
சின்னதாக்கி
தீயோடு
சண்டை
போட்டுக்கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி

கடைசியில்
மெழுகுவர்த்தி
வென்று விடும்
தீ
செத்துவிடும்

மெழுகுவர்த்தியின்
இறந்துபோன
எச்சங்களாவது
கிடக்கும்
சிதறல்களாக

எச்சமே
இல்லாமல்
இறந்து போயிருக்கும்
தீ.......

11.22.2009

பசியின் சிதறல்கள்

எனக்குப்
பசியில்லாததால்
பழுதாகிக்
கொண்டிருந்தது
பையிலிருந்த
சாப்பாடு...
பக்கத்திலிருப்பவனுக்கோ
பசி


*********************************

குழந்தையின்
பசியைப் போக்க
அம்மா பால்
கொடுத்தாள்
அம்மாவின்
பசியைப் போக்க
குழந்தை
சிரித்தது....

*************************
பசியை
வெளிப்படுத்தும்
குழந்தையின்
மொழி
அழுகை

மனிதனுக்கு
அழக் கற்றுக்
கற்றுக்
கொடுகிறது
பசி

அதுதான்
சிரிக்கும்
விலங்கு
மனிதன்
என்றாலும்
எல்லா
மனிதர்களாலும்
சிரிக்க
முடியாது
ஆனால்
அழ முடியும்..


*******************************

முகூர்த்த
நேரத்திற்காக
ஆவலோடு
காத்திருந்தார்கள்
தாலி
கட்டும்போது
வாழ்த்துவதற்காகல்ல
அதற்குப்பிறகுதான்
சாப்பாடு


***************************

11.19.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

பெண்களின்
கற்பை
அழித்தாலும்
ஆண்களின்
கற்பினைக்
காப்பாற்றி
விடுகின்றன
ஆணுறைகள்


*******************

நிலவைபார்த்துச்
சாப்பிடப்
பழகிய
குழந்தை...
நிலவைப்
பார்த்துச்
ஏமாறுகிறது
சாப்பாடு
எங்கே?

******************

கடவுளே
இல்லையென்று
வாதிட்டுவிட்டு
கோயிலுக்குப்
போனான்
மன்னிப்புக்
கேட்க...


*****************

பசியில்
அழுகின்ற
குழந்தைக்கு
பாசத்தை
ஊட்டிக்கொண்டிருந்து
வெற்றுச்
சூப்பி...

**************************

கொஞ்சமாய்
கிடைக்கும்
அரிசியில்
அதிகமாய்க்
கலந்து
சமைக்கும்
பாசமே
நிறையப்பேரின்
பசியை
ஆற்றுகிறது...
ஏழை
வீட்டில்

***************


சிக்னல்
நிறுத்தத்தில்
பிச்சை
கேட்கும்
சிறுவனின்
பசியின்
அவசரம்
புரியாமல்....
பேர்சை
எடுப்பதற்குள்
விழுந்துவிடுகிறது
பச்சை
விளக்கு


**********************

புது வருடத்தில்
புது மனிதனாய்
வாழ
சாபதமெடுததேன்..
கதவைத்
தட்டினான்
பழைய
கடன்காரன்


************************


11.18.2009

ஒரு காதல் கவிதை

உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...


......................................

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

**********************

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......

***********************


நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது


***********************

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...


**********************



11.17.2009

விபரீதமான சில கவிதைகள்




வன்முறை


ரசிப்பதற்காய்
அடைத்து
வைத்த
குருவியின்
குஞ்சுகள்
அனாதைகள்....


விர()க்தி

குடம்
குடமாய்
பால்
ஊற்றினார்கள்
சாமி
அழுதுகொண்டிருந்தது
பசியோடு
கன்றுகள்


அபலைகள்

அனாதை
இல்லத்தில்
அம்மாக்களும்
அப்பாக்களும்
இல்லாத
குழந்தைகள்....

முதியோர்
இல்லத்தில்
பிள்ளைகள்'
இருக்கும்
அம்மாக்களும்
அப்பாக்களும்



விபச்சாரியின் வேண்டுகோள் !

கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!



அழுக்கு

உங்கள்
கண்களில்
இருக்கும்
அழுக்கினை
அகற்றி
விடுங்கள்
எல்லோரும்
அழகுதான்


மூட நம்பிக்கை

ஆத்திகத்திற்கும்
நாத்திகத்திற்கும்
இடையே
ஒரே ஒரு
வேறுபாடுதான்
கற்களை
கடவுளாக்கிப்
பார்ப்பது
ஆத்திகம்
கடவுளை
கற்களாக்கிப்
பார்ப்பது
நாத்திகம்...



கடவுளுக்கு
நான்
கொடுத்த
நேர்த்திக்
கடன்தான்
வாழ்க்கையில்
நான் கொடுத்த
முதல்
லஞ்சம்


ஆதிக்கம்

அப்பன்
பெயர் தெரியாத
குழந்தைகள்
என்று
குழந்தைகள்
தண்டிக்கப்பட
அப்பாக்கள்
தப்பித்து
விடுகிறார்கள்


சேமிப்பு

என்னை
அறியாமல்
தூங்கிப்
போனாலும்
விடியும் போது
நான்
இருக்கிறேன்
நானாக..


வாழ்க்கை

நான்
வாழ்ந்து
முடிக்கும்
முன்பே
என்
வாழ் நாளின்
ஒவ்வொரு
நாட்களும்
முடிந்து
போகிறது



முகவரி

அகதி முகாமில்
பிறக்கும்
குழந்தைக்கு
வீடு
அகதி முகாம்


பாசம்

பசியில்
அழுகின்ற
குழந்தையின்
வாயில்
வேறு
வழியில்லாமல்
வெற்றுச்
சூப்பியை
வைக்கும் போது
தூங்கிப் போன
குழந்தைகள்
சிலவேளை
நடிக்கலாம்
தூங்குவதைப் போல..
அம்மாக்கள்
கவலைப் படக்கூடாது
என்பதற்காக


11.08.2009

சின்னதா சில கவிதைகள்

ஒரு விபச்சாரியின் நியாயம்

கற்பின்
விலையைத்
தீர்மானிக்கும்
பசி


கற்பை
புனிதமாக்கி
பக்தனாக
இருந்தாலும்
பசிக்கு
அடிமையாகத்தான்
இருக்க
வேண்டும்

**********************


ஒரு காதல் கவிதை

கடவுள்
எத்தனை
அழகான
கவிதைகளை
படைத்திருந்தாலும்
எழுத்துப் பிழை
இல்லாமல்
எழுதிய
முதல் கவிதை
நீ.....

*************************


சின்னதா ஒரு கற்பனை

ஒரு துளியையேனும்
வீணாக்காமல்
குடித்துக் கொண்டிருந்தது
மண்
பெய்து கொண்டிருந்து
மழை ....


**************************

திருவிழா]

பண்டிகையில்
மிஞ்சியதை
அடுத்தநாள்
குப்பையில்
கொட்டினார்கள்...
பிறந்தது
தெருவோரக்
குழந்தைகளுக்குப்
பண்டிகை



********************




11.01.2009

சீரியஸா ஆனால் சின்னதா மூன்று கவிதை

அம்மா

முதல் முறை
குழந்தை அழுதது
அம்மா சிரித்தாள்
மீண்டும் மீண்டும்
அழுதது
அம்மா மரித்தாள்
**************************************

தடுக்கி விழுந்த
குழந்தைக்கு
வலிக்கவில்லை
ஆனாலும்
அழுதது...
ஆனால்
அம்மாவுக்கு
வலித்தது



செருப்பு

சுமையாகிப்போனது
அறுந்த
செருப்பு

*****************************************

புதிய செருப்பை
கழற்றிவிட்டு
கோயிலுக்குள்
போனேன்...
அடிக்கடி
வெளியே வந்து
போனது
மனசு


***************************************

காதல்

கோபத்தில்
என்
தொலைபேசி
அழைப்பை
மறுத்தாய்...
எனக்கும்
கோபித்துக்
கொள்ள
ஒரு
காரணம்
கிடைத்துவிட்டது

கோபங்கள்தானே
பிரிந்திருக்கிற
நம்மை
சிலவேளைகளில்
சேர்த்துவைக்கிறது...

கோபத்தை
தீர்த்துக்
கொள்வதற்காகவே
அடிக்கடி
சந்தித்துக்
கொள்கிறோம்


10.29.2009

சின்னதாய் ஒரு கவிதை (மீள் பதிவு )


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் வழிகிறது
உன் கண்களில்...
கண்ணீர்








என்
முரட்டு உதடுகள்
உன்னைக் காயப்படுத்திவிடுமோ
என்ற அச்சத்தில்தான்
இன்னும்
முத்தமிடாமல் இருக்கின்றன....

10.19.2009

பேய்க் கவிதைகள் ( தைரியமானவங்க மட்டும் வாங்க ) )

நீ காதலிக்கவில்லை
என்ற சோகத்தில்
செத்துப் போனேன்!

என்ன பயன்?

நீ இறந்த
பின்பாவது
என்னைக்
காதலிப்பாய்
என்ற
நம்பிக்கையில்
அதே சோகத்தோடு
காத்திருக்கிறேன்.

***************************

நான் இறந்தபின்பும்
உயிர்வாழ்வதாய்
நடித்துக்
கொண்டிருக்கிறேன்
எனக்குள்
உயிர்வாழும்
உன்னையும்
சேர்த்து
புதைத்து
விடுவார்கள்
என்ற பயத்தில்

**********************************
நான்
இறந்த பின்பு
உன்னைப்பற்றி
எல்லோரிடமும்
சொன்னேன்!
எல்லோரும்
கவலைப்படுகிறார்கள்
உன்னைப்பார்க்காமலே
இறந்து விட்டதாக


*****************************

என்னைக்
கொலை
செய்தபின்புகூட
என்னை
எடுத்துப் போக
முடியவில்லை
எமனால்....
எமனல்ல
எவன் வந்தாலும்
எனைப்
பிரிக்க முடியாது
உன்னிலிருந்து....

***************************

உன்னை
மறந்து
கொண்டு
உயிர்வாழ்வதைவிட...
நினைத்துக்
கொண்டு
இறப்பது மேல் !

***************************

என் உடலை
எரித்து விட்டார்கள்
பரவாயில்லை
எனக்கு உயிர்
மட்டும் போதும்
உன் உடலின்
ஒரு மூலையில்
இருந்து
வாழ்ந்து விட்டுப்
போகிறேன்

************************

என்னை
எரிக்கும்
முன்பு...
நீ வருவாய்
என்று
பார்த்த்திருந்தேன்
பெண்கள்
சுடுகாட்டுக்கு
வரக்கூடதென்று
உன்னைத்
தடுத்து விட்டார்கள்
நீ இல்லாத
சுடுகாட்டில்
நான் எரிய
மாட்டேன் என்று
எழுந்து
வந்துவிட்டேன்

******************************


என் கல்லறையில்
வைக்கப்படும்
பூக்களையெல்லாம்
சேமித்துக்
கொண்டிருக்கிறேன்!
என்றோ
ஒருநாள்
நீ வரும்போது
தருவதற்காய்....

*****************************

முந்திய பேய்க் கவிதைகள் ,

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html


10.16.2009

பிணத்தோடு உறவு கொண்டுவிட்டு......

1.
ஒரு மணிநேரம்தான்
பேரம்.
அந்த ஒரு
மணிநேரம்
தற்காலிகமாக
செத்துப்போனாள்!
பிணத்தோடு
உறவுகொண்டுவிட்டு
பணத்தைக்
கொடுத்துவிட்டு
புறப்பட்டான்....
போனதும்
அவள்
அவசரமாய்
உயிர்த்தெழுந்தாள் ...
பசியோடு
வீட்டில்
பலபேர்.



************************************

2.

முடிந்து
போய் விட்டாள்.
கொடுத்த
பணத்திற்கான
இன்பம்
இப்போது
அவனிடம்
இல்லை.


*********************************

3.

சின்ன வீட்டுக்கு
இல்லை
ஒரு வீடு

10.14.2009

ஒரு குழந்தையை சந்தோசப்படுத்த வாருங்கள்

ஆபத்து வந்தாலோ அல்லது தாங்க முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ `` கடவுளே என்றுதான் ஆத்திகர்கள் அழைப்பார்கள். நாத்திகர்கள் எப்படி அழைப்பார்கள்? நானும் கடவுளைத்தான் துணைக்கழைப்பது வழக்கம். ஆனாலும் சிலவேளைகளில் கடவுளோடு ஆத்திரம் ஏற்படும் பொழுதுகளில், என்னடா இந்தக்கடவுள் என்று அழுத்துக் கொள்ளும் பொழுதுகளில் உதவியாக இருக்குமே , அதுதான் கேட்கிறேன் என் நாத்திக நண்பர்களே !
ஆபத்து வேளைகளில் யாரை அழைக்கிறீர்கள்.

..........................................................................................................................................................................
கடவுளும் சாதாரண மனிதர்களைப்போல தவறு விடுகிறானே என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒரு குழந்தை வயது வெறும் 12 .
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண ஒரு பிள்ளையாக , சுட்டியாக இருந்தது. திடீரென தன் கேட்கும் திறனை இழந்தது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியர்களுக்கே சவாலாக அமைந்தது அந்தக் குழந்தையின் நோய்.

என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தர்கள், குழந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தன் புலன்களை இழந்தது.கேட்கும் திறனைத்தொடர்ந்து பார்க்கும் திறனும் குறையத் தொடங்கியது.

அப்போதுதான் குழந்தைக்கு உலகத்திலேயே வெறும் சில நூறு பேர்களுக்கே ஏற்பட்டு இருக்கும் ஒரு அரிதான நோய் ஏற்பட்டு இருப்பதை வைத்தியர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன பயன் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத அந்த நோய் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இங்கே கடவுள் யாரைத் தண்டிக்கிறான்

அந்தக் குழந்தையையா?

அந்தக் குழந்தையின் உறவினர்களையா?

யாரென்றே தெரியாத அந்தக் குழந்தைக்காக கவலைப் படும் உங்களையா?

*******************************************************************************

சில காலங்களுக்கு முன் ஓடியாடித்திரிந்த அந்தக் குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் திறன்களை இழந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தன் உணவை விழுங்கும் திறனையும் இழந்து போனது. பசித்தால் வாய்திறந்து சொல்ல முடியாது, வயிற்றைத் தட்டிக் காட்டும். வாயினால் விழுங்க முடியாது, மூக்கின் ஊடாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயின் ஊடாக திரவ சாப்பாடுகளை மட்டுமே வழங்க முடியும் .

மூக்கின் உள்ளே ஒரு தும்பு போனாலே படும் அவஸ்தைகள் நாம் அறிவோம். இந்தக்க் குழந்தைக்கோ மூக்கின் ஊடான ஒரு தடித்த குழாய்தான் சாப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று வயிற்றின் ஊடாக ஒரு குழாயை செலுத்தி நிரந்தரமாக அக்குழாயின் ஊடாக சாப்பாடு வழங்குவதற்கான ஒரு சத்திர சிகிச்சை நடைபெறப்போகிறது.

அதற்கு முன்பு, நேற்று அந்தக் குழந்தை தன் குறைந்து போன பார்வைப்புலத்தோடு வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.

இதை நான் இன்டர் நெட்டில் போடவா எல்லோரும் பார்ப்பார்கள் என்று எழுத்தின் மூலமாக கேட்டேன் . அந்த நேரத்தில் பூரிப்படைந்த அந்த பிஞ்சு மனசு உடனடியாக மேலும் மூன்று படங்களை வரைந்து கொடுத்தது சில மணி நேரங்களில். அப்போது அந்தப் படங்கள் அழகாக இருக்கிறது என்று சைகையிலே சொன்னேன் , தன் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாத அந்தப் பிள்ளை அந்தப் படங்களை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டது .

அந்தப் படங்களை நீங்களும் பாருங்கள். அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள். சத்திர சிகிச்சை முடிந்து வலியோடு வருகின்ற அந்த குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு துளி சந்தோசத்தையாவ்து கொடுக்கும்.

அந்தக் குழந்தையால் தமிழை வாசிக்க முடியாது, ஆகவே தயவு செய்து ஆங்கிலத்திலே சிறு குறிப்பாக இந்த ஓவியங்கள் ``அழகாக இருக்கிறது `` போன்று சிறிய வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போங்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தையால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , அதுவரை அது இப்படி சந்தோசம் தரும் சிறு சிறு விடயங்களையாவது பார்க்கட்டும்.

அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையின் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தோசத்தையாவது கொடுக்கும்.

















10.13.2009

வாழ்க்கை நிறையக் கவிதை

``அம்மா தாயே``
பிச்சை போடு
என்பதைக்கேட்டு
சந்தோஷப்படுகிறது
மலடி என்றே
அழைக்கப்படும்
ஒருவளின்
மனசு

***********************

தற்கொலை
செய்யாமல்
வாழத்தெரியாத
ஒருவனால்
தற்கொலை
செய்தபின்பு
கூட
வாழமுடியவில்லை

************************

காதலிக்கும் போது!
கவிதை
எழுதத் தெரிந்தவர்கள்
நல்ல கவிஞர்களாகிறார்கள்
தெரியாதவர்கள்
நல்ல ரசிகர்களாகிறார்கள்

*********************************

விரக்தியோடு
கவிதை
எழுதத்
தொடங்கினேன்
விரக்தி
கவிதையாகிப்போனது

****************************

அழுகின்ற
குழந்தைக்கு
பால் கொடுத்துவிட்டு
புறப்பட்டாள்...
கருக்கலைக்க
அழுதது
ஒரு குழந்தை
உள்ளே!

*********************

அழிந்து போ
என்று
சூனியம்
செய்கிறார்கள்....
ஒருவேளை
அழித்தல் கடவுளின்
அவதாரமோ!

*******************

கள்ளக்காதலியுடன்
சல்லாபம்
செய்யும்
மனதில்
அமர்ந்து
அவஸ்த்தைப்படுத்துகிறது
ஒரு கவலை
``என் மனைவியும்
இப்படி
இருப்பாளோ ?``

****************************

வாழ்வதற்கு
நான்
தயார்
வாழ்க்கை
தயாரா?
என்னைக் காப்பாற்ற
முடியாமல்
தடுமாறும்
வாழ்க்கையைக்
காப்பாற்றவே
நான்
வாழ்கிறேன்!

*********************

விதம் விதமாய்
சாப்பாடு
இருந்தாலும்
பேர்சில்
இருக்கும்
பட்ஜெட்டுக்கு
ஏற்பவே
சாப்பாட்டை
ஓடர் செய்யும்
எனக்கு
நாவடக்கம்
இல்லை
என்று
எப்படிச் சொல்வது

************************

சிலுவையில்
அறையுங்கள்
நானும்
கடவுளாகனும்
என்றவனால்
மீண்டும்
உயிர்த்தெழ
முடியவில்லை


10.07.2009

பஸ்சில் பயணிக்கும் ஒரு காதல் கதை



நீயும்
நானும்
ஒரு பஸ்
வண்டியில்
பயணித்துக்
கொண்டிருந்தோம்...


ஓட்டுனருக்கு
எல்லோரும்
திட்டிக்கொண்டிருந்தார்கள்
மெதுவாக
ஓட்டுவதாகச்
சொல்லி...
நான் மட்டும்
வேகமாக
ஓட்டுவதாகச்
சொல்லி
திட்டிக்கொண்டிருந்தேன்!


நடத்துனர்
எங்கே போக
வேண்டும்
என்றதற்கு
உன் மனதிற்குள்
என்றுவிட்டேன்!


எல்லோரையும்
போல
பஸ் டிக்கெட்டை
பத்திரப் படுத்திக்
கொண்டேன் !
பரிசோதகருக்குப்
பயந்தல்ல...
உன்னோடு
பயணித்த
இந்த
டிக்கெட்டைவிட
நல்ல
ஞாபகச்சின்னம்
வேறென்ன
இருக்க
முடியும்...



பஸ் வண்டி
ஒவ்வொரு
நிறுத்தத்திலும்
தன் பயணத்தைப்
புதுப்பித்துக்
கொண்டது...
நீயும்
ஒவ்வொரு
புன்னகையின்
முடிவிலும்
உன் மௌனத்தைப்
புதுப்பித்துக்
கொண்டாய் ...


நீ என்னைப்
பார்ப்பதே
இல்லையே
என்று
கவலைப்
பட்டுக்கொன்டிருந்தேன் !
பிக்பொக்கட் காரன்
என் பேசை
எடுத்ததை
காட்டிக்கொடுத்து
நிரூபித்துவிட்டாய்
நீயும்
என்னைப்பார்க்கிறாய்....

புரிந்து கொண்டேன்
உன்னைப்போலத்தான்
எனக்கும்
நேரே பார்க்க
தைரியம்
இல்லையென்பதையும் !

ஒன்று மட்டும்
புரியவில்லை
எப்படி
நான் பார்க்காத
நேரத்தைச்
சரியாக
கண்டுபிடித்து
நீ பார்க்கிறாய்..?

திருட்டுத்தனமாய்
மௌனத்தில்-பேசத்
தெரிந்ததைப்போல
திரும்பியிருந்தே
திருட்டுத்தனமாய்
பார்க்கவும்
தெரிந்திருக்கிறது
உனக்கு


உன் வீட்டை
அண்மிக்க
அண்மிக்க
என் ஆயுளை
அண்மிக்கிற
அவதி -
இன்னும் கொஞ்ச
நேரத்தில்
இறங்கி விடுவாயே!


இருந்தாலும்
எல்லோரையும்
போல உன்
பயணப் பையை
மட்டும்
எடுத்துக்கொண்டு
நீ இறங்கவில்லை
கூடவே
என்னையும்
எடுத்த்க்கொண்டு
இறங்கினாய்...

புரிந்துகொள்!
உன்னோடான
என் வாழ்வின்
பயணம்
என்றும்
முடிந்து
விடுவதில்லை ...




10.03.2009

அழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...

அழகு
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...

நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....

மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....



தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....

என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...








நெருப்புச் சுவாசம்





நெருப்பையே

சுவாசமாக்கும்...
உங்கள்
விதியையே
மாற்றி -
எழுதும்....
இந்த
வெள்ளை நிறப்
பென்சில்

************************************



முதலில்
ஆட்கொள்ளும்
பிறகு
ஆளையே
கொள்ளும்
பாசக் கயிற்றின்
பரிணாம
வளர்ச்சி
சின்னதாய்
ஒரு
சிகரெட் !

************************

தூக்கிப்போட்டு
கவ்விப் பிடித்தால்
ஆண்மைக்கு
ஸ்டைலாத்தான்
இருக்கும்
ஆனால்
அந்த ஆண்மையே
அழித்துவிடும் ...


வீரியத்தைக்
குறைத்துவிடும்
வீரியம் கொஞ்சம்
குறைந்த
இந்த
சயனைட்டுக்
குப்பிகள்...


**********************************

ரத்தக்குழாயை
அடைத்து
இதயத்துடிப்பை
நிறுத்தும்...

புற்று நோயாய்
மூச்சுக்குழாயை
அடைக்கும் ...

விந்துக்களின்
எண்ணிக்கை
மட்டுமல்ல
உன் வீரியத்தையே
குறைக்கும்....

இதற்குமப்பால்
உழைக்கிறேதெல்லாம்
உன் உதட்டில்
சிக்கிரெட்டாய்
புகைந்தால்...

உன் குழந்தை
உதட்டில்
வெற்று
சூப்பியை
சூப்பித்தான்
ஏமாந்து கொண்டிருக்கும் !





9.23.2009

தமிழரசி - ஒரு கவிதை

நட்புக்கு
நீ நம்பிக்கை

அன்புக்கு
நீ அட்சயபாத்திரம்

கவிதைக்கு
நீ கலங்கரைவிளக்கம்

தமிழுக்கோ
நீ அரசிமட்டுமல்ல
உயிரும்கூட .....

உனக்கு
ஒரு நாள்தான்
பிறந்தநாள்
தமிழுக்கோ
நீ கவிதை
எழுதும்
ஒவ்வொருநாளும்
பிறந்தநாள்....

உன்
வீட்டுத்தோட்டத்தில்
பூக்களுக்குப்
பதிலாய்
கவிதைகள்தான்
பூத்துக்
குலுங்க்குகின்றனவோ!

உன் எழுத்துக்கள்
அலங்கரிப்பது
வார்த்தைகளை
மட்டுமல்ல
வாழ்க்கையையும்தான் ...

எத்தனை பேர்
எழுத்துக்களை
வாசித்தாலும்
எழுத்துக்களுக்கே
தங்களை
உச்சரிக்கக்
கற்றுக்கொடுத்தது
உன்
எழுத்தோசையல்லவா!

உன்
எழுத்துக்களில்
பின்நவீனத்துவம்
இல்லை...
ஆனாலும்
பின் நாகரீகத்துவம்
இருக்கிறது !

எல்லோரும்
ஓட்சிசனை
உள்ளெடுத்து
காபனீரொட்சைத்தான்
வெளிவிடுவோம்...
நீயோ
உள்ளெடுப்பது
எதையானாலும்
வெளியிடுவது
கவிதைகளையல்லவா....


உனக்கு
கவிதை பிடிக்குமோ
இல்லையோ!
கவிதைகளுக்கு
உன்னைப்
பிடித்திருக்கிறது
அதுதான்
நீ எழுதும்
எல்லாமே
கவிதையாகிப்போகிறது...

உன்னைப்போல
எங்களைப்போல
உன் பிறந்தநாளை
கவிதைகளும்
கூடிக் -
கொண்டாடிக்கொண்டிருக்கிறது


உன் வீட்டை
விட்டு கொஞ்சம்
வெளியே
வந்துபார்
எல்லா
நட்சத்திரங்களும்
இன்று ஒளி
வீசுவதற்குப்
பதிலாய்
என்
கவிதைகளை
வீசிக்கொண்டிருக்கும்
உனக்கு
பிறந்தநாள்
பரிசாய்...

அபூர்வமாய்
கிடைத்த
நேரத்தில்
அவசரமாய் தர
இதைவிட
வேறு பரிசு
இல்லை
என்னிடத்தில்...

தமிழே நீ
வாழ்க .....
தமிழர்களைக்
காப்பாற்றத்தான்
யாருமில்லை
தமிழைக்
காப்பாற்றவாவது
நீ வாழ்க!!!!!!!!!!!









9.19.2009

நீ உதிர்த்த(சு)வை


எத்தனையோ
அழகான
பெண்களைப்
பார்த்த
போதெல்லாம்
காதலிக்கவே
மாட்டேன்
என்று காதலோடு
அடம்பிடித்துக்
கொண்டிருந்தேன்!
பாழாய்ப் போன
காதல்
கடைசியில்
உன்னை அனுப்பி
என்னைப்
பழிவாங்கி
விட்டது.....

************************

கடவுளுக்கு
நிறைய
அவதாரம்
காதலுக்கு
ஒரே ஒரு
அவதாரம்
நீ....

************************

உன்னைப் பார்த்த
நொடியில்
இறந்து போய்....
என்
வாழ்க்கையின்
மீதி நாட்களை
உன்னோடு
வாழ்வதற்காக
சேமித்து விட்டேன்!
வா
உயிர்பெற்று
மீதியை
வாழ்ந்து முடிக்க
வேண்டும் ...


*********************

நீ வெட்டிப்
போடும்
நகம்
முளைக்கிறது
கவிதையாய்...
யார் சொன்னது
நகங்களுக்கு
உயிர்-
இல்லையென்று...


************************

நீ சூடிக்
கொள்வதற்காய்
ஒரு
பூப்பறித்தாய்
நீ பறித்த
பூ மீண்டும்
ஒருதடவை
மலர்ந்தது...
பறிக்காத
பூக்கள்
அந்தியாகும்
முன்னே
வாடிப்போகின....

*********************



உனக்கு பரிசு
வாங்குவதற்காய்
கடைகளில்
ஏறி இறங்கும்
போதெல்லாம்
கடைசியில்
என்னையே
வாங்கி
வருகின்றேன்....

********************

நான்
மற்றவர்களைப்போல
கவிதை
எழுதும் கவிஞன்
அல்ல
கவிதைகளை
கண்டுபிடிக்கும்
கவிஞன்
உன் ஒவ்வொரு
அசைவிலும்
ஒளிந்திருக்கும்
கவிதைகளைக்
கண்டு பிடிக்கும்
கவிஞன்...

*********************

பாடம் சொன்ன
ஆசிரியரே
பாடத்தை
மறப்பதுபோல
எனக்கு காதலிக்க
கற்றுக் -
கொடுத்துவிட்டு
நீ
மறந்து போனாயே!

**********************

எனக்குள்
இருக்கும்
என்னையெல்லாம்
எடுத்தெறிந்து
கொண்டிருக்கிறேன்
உன்னைச்
சேமிக்க
இடம் போதாததால்.....



9.01.2009

வாழ்க்கை நிறையப் பொய்



நிஜங்கள்
என்னை
காட்டிக்கொடுக்கின்றன
பொய்கள்தான்
காப்பாற்றி விடுகின்றன....



உண்மை
சொல்வதை விடவும்
பொய் சொல்லவே
அதிகம்
தைரியம் தேவை
என்றாலும்....
எந்தக் கோழையும்
சுலபமாய்ச்
சொல்லிவிடுகிறான்
பொய்யை....


காதலைச் சொல்ல
தைரியம்
இல்லாதவர்களுக்கு
கூட
இதுவரை
காதலிக்கவேயில்லை
என்று
பொய் சொல்ல
தைரியம்
எப்படியோ
வந்துவிடுகிறது


குடித்து விட்டு
வீட்டுக்கு
வந்து
சொன்னேன்...
நண்பனுக்காகவே
கொஞ்சம்
குடித்தேன்!
அந்த நண்பன்
வீட்டிலும்
அதே பொய்....


பொய் சொல்லிவிட்டு
கடவுளே
மன்னித்துவிடு
என்று
வேண்டும்போது
எந்தக் கடவுளும்
இதுவரை வந்து
மன்னிப்புக்
கொடுக்காவிட்டாலும்
செய்த பிழை
நீங்கி விட்டதாய்
சந்தோசப்படுகிறது
மனசு....
இதற்காகவே
ஆத்திகனாக
இருக்கிறார்கள்
நிறையப் பேர்


மற்றவர்களோடு
இருக்கும் போது
சொல்கிற
பொய்களை
எண்ணி
தனிமையில்
இருக்கும் போது
வருத்தப்படுகிற
சாதாரண
மனிதன்தான்
நானும் ...

எத்தனை
மனிதர்களை
பொய் சொல்லி
ஏமாற்றி இருந்தாலும்
என்
மனச்சாட்சியை
ஒருமுறை கூட
ஏமாற்ற
முடிந்ததில்லை...


கவிதைக்கு
மட்டுமல்ல
வாழ்க்கைக்கும்
பொய் அழகு
சிலவேளைகளில்....


பொய்
சொல்வெதெல்லாம்
ஒரு
பொழைப்பா
என்று
திட்டுபவர்களே
கொஞ்சம்
சொல்லித்தாருங்கள்
பொய்
சொல்லாமல்
வாழ்வெதப்படி....?










8.29.2009

என் காதல் பக்கம்



கொஞ்சம் கொஞ்சமாய்
பழகிய
வாழ்க்கை....
ஒரு நொடி
விபத்தில்
முடிந்துபோகலாம்....


கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து
வைத்த
நட்பு
ஒரு வார்த்தையில்
முடிந்துபோகலாம்


கொஞ்சம் கொஞ்சமாய்
சேர்த்து வைத்த
மானம்
ஒரு குற்றத்தில்
முடிந்துபோகலாம்


கொஞ்சம் கூட
சேமிக்கவில்லை
முடிந்து போனது
ஏதோ ஒன்று!
உன் பார்வையில்...


உயிரும்
இருக்கிறது
உடலும்
அப்படியேதான்
இருக்கிறது...
வாழத்தான்
முடியவில்லை


இத்தனை நாளாய்
உயிரும் உடலும்தான்
`நான்` என்றிருந்தேன்
இரண்டுக்கும் அப்பாலும்
`நான் ` இருக்கிறேன்
என்று
நீதான்
வெளிப்படுத்தினாய்....

******************************


நீ பொக்கிஷம்!

பொத்தி வைக்க
முடியாமல்
கொட்டிவிடுகிற
கவிதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
நீயோ
`பொறுக்கி` என்று
திட்டுகிறாய்
மற்றவர்களோ
கவிஞன்
என்கிறார்கள்...

************************


எத்தனை
முறைதான்
சேமிப்பது....
இடம் போதாமல்
உன் அழகு
நிரம்பி வழிகிறது
என் கண்களில்


நான்
சிவனாகப்
பிறந்திருக்கலாம்
நெற்றிக் கண்ணாவது
கொஞ்சம்
இடம் தந்து
உதவியிருக்கும்....

************************


நீ காதலைப்
பிரசவித்துவிட்டு
காதலிக்காமல்
போய் விட்டாய்....


நம் காதல்
`குழந்தையை`
வாழ
வைப்பதற்காகவேனும்
உயிவாழ
வேண்டிய
கட்டாயத்தில்
இருக்கிறேன்
நான்

***********************


என்
கவிதை மொட்டுக்கள்
காத்திருக்கின்றன!


நீ வருகின்றாய்
பூக்கின்றன
நீ போகின்றாய்
வாடிப்போகின்றன .....


பசி வந்தால்
பத்தும் பறக்கும்
நீ வந்தால்
பசியும்
பறக்கும்....


நீ
வரும் போது
என்னை கொண்டு
வருகின்றாய்
போகும்போது
கொன்று
போகின்றாய்

*********************


நான் என்பது
நரகம்...
நீ இல்லாமல்

சொர்க்கத்தில்
இருப்பவர்கள் கூட
மீண்டும்
பிறக்க
ஆசைப்படுகிறார்கள்
நீ இருக்கின்ற
உலகத்தை விடவா
சொர்க்கம்.....

*********************


நீ
பறித்த
பூ
இறுதிவரை
வாடவேயில்லை....
நீ பறிக்காத
பூ வாடிவிட்டது
நீ
பறிக்கவில்லை
என்ற
ஏக்கத்தில்...


பூவாக
இருந்தாலும்
ஆணாக
இருந்தாலும்
வாடித்தான்
போகவேண்டியிருக்கு
காதலில் ......

*****************













8.10.2009

ஒரு காதல் கடிதம்



நீ
எங்கேயோ
இருந்தாலும்
இங்கேதான்
இருக்கிறாய்.....

நீயோ
தொலைத்துவிட
துடிக்கின்றாய்
நானோ
காப்பாற்றிவிட
துடிக்கிறேன்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை....

தூரங்களில்
தொலைவதல்ல
தூரங்களை
தொலைப்பதுதான்
காதல்


************************

உன்னைப்
பத்திரப்படுத்துவதற்காகவே
பக்கத்தில்
வைத்திருக்க
ஆசைப்படுகிறேன்....

நீ உறங்கும்
பொழுதுகளில்
விழித்திருப்பேன்
உன்
உறக்கம் களையாமல்
பார்த்துக்கொள்வதற்காக...

******************************

புன்னகையை
தொலைப்பது
வதம்...

உன் புன்னகையில்
தொலைவது
வரம்...

******************

உன் ஒருநாள்
சந்தோஷத்திற்காக
என் ஆயுளின்
சந்தோசத்தையே
அடகு வைப்பேன்...

******************

உன் மௌனங்களில்
தற்கொலை செய்யும்
வார்த்தைகளை
காப்பாறிக்
கொள்வதற்காகவே
நான் கவிதை
எழுதக் கற்றுக்கொண்டேன்...


*********************
என்றோ
இறந்துவிட்ட
என்னுள்
என்றோ
உனக்காக
சேமித்து
வைத்த
உயிர்த்துளிதான்
இன்னும்
துடித்துக் கொண்டிருக்கிறது...

நீ காதலித்து விடுவாய்
என்ற நம்பிக்கையில்தான்
இன்னும் உயிர்வாழ்ந்து
கொண்டிருக்கிறது
காதல்....

****************************

எனக்கு
ஆயுசு
இரண்டு

எனக்கான என்
வாழ்க்கை
முடிந்து போனாலும்
உனக்கான
என் வாழ்க்கை
தொடரும்......


இப்படிக்கு
காதலிப்பவர்கள்
எல்லோரும்.




8.04.2009

கேள்வி பதில்


அஜீரணம்

கழிந்து
போகின்ற
ஒவ்வொரு நாளும்
என் ஆயுளின்
ஒரு நாள்
என்று
தெரிந்தாலும்
ஒரு நாளைக்கூட
என்னால்
சேமிக்க
முடிந்ததில்லை...


காரணம்


நேற்று
நாளை
இரண்டிலும்
இன்றுபோல்
இருபத்தி நாலு
மணிதான்....

இருந்தாலும்
நேற்றில்
நாளையில்
இருக்கும்
ஒரு நிமிஷத்தைக்கூட
கூட
இன்றில்
கண்டு பிடிக்க
முடியவில்லை...

7.04.2009

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு

அநேகமானோர் வலிப்பு ஏற்பட்ட நபரை நேரிலே பார்த்த அனுபவம் பெற்றிருக்கலாம்,அல்லது சினிமாவிலாவது கட்டாயம் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டாலே அவருக்கு காக்காய் வலிப்பு(எபிலெப்சி/epilepsy )நோய்தான் இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.

காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.

இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.

ஒரு சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வந்திருக்கும் நேரத்தில் வலிப்பு வந்தால் ,

முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.

அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .

ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

febrile fits எந்த வயதினருக்கு ஏற்படும்?

பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் .
(இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)

ஒருமுறை febrile fits வந்தால் மீண்டும் வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா?

30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.

febrile fitsயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காக்காய் வலிப்பு நோய் ஏற்படலாமா?

மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.

ஒருமுறை febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு மறு முறை காய்ச்சல் வரும் போது தாய் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.

குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)

அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.

அவையாவன ,

  1. ஈரமானதுணியினால்குழந்தையைதுடைத்தல்
  2. மின்விசிறியின்கீழ்குழந்தையைபடுக்கவைத்தல்
  3. மெல்லியஆடைஅணிவித்தல்

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு அதை தடுப்பதற்காக ஏதாவது மருந்துகள் கொடுக்கப் பட வேண்டுமா?

வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும்.
( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)

febrile fits ஏற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப் படும் போது ஏதாவது முன் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமா?

febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.

ஒரு பிள்ளைக்கு வலிப்பு வரும் போது அருகில் இருப்பவர்கள் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய நடைமுறைகள் என்ன ?

முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .

பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)

நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)

வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).

இது பற்றிய சரியான நடைமுறையை ஒவ்வொரு தாயும் வைத்தியரிடம் கேட்டு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. இது ஒரு உயிர் காக்கும் செயமுறையாகும்.


பி.கு- இந்த இடுகை ஒரு பதிவரின் தேவை அறிந்து , அவருக்காக இடப்படுகிறது.








ஓரினச் சேர்க்கையும் நம் எழுத்தாளர்களும்

இப்போது தமிழ் மண முகப்பை திறந்தாலே பிரதான விடயமாக தெரிவது ஓரினச்சேர்க்கை சம்பந்தமான தலைப்புக்களே.

ஆச்சரியமாக இருக்கிறது!

சில வருடங்களுக்கு முன் இப்படி வெளிப்படையாக இத்தனை பேரால் இந்த விடயம் துணிந்து கதைக்கப்பட்டதா?

பல வருடங்களுக்கு முன் இவ்வளவு பெரியளவில் பேசாவிட்டாலும் ஆண்டவன் காலத்திலேயே ஓரினச் சேர்க்கை இருந்ததற்கான சான்றுகளை பட்டியலிட்டே பல இடுகைகள் இப்போது இடப்படுகின்றன.
இருந்திருக்கலாம்!
ஆனால் அவை ரகசியமாகவே இருந்திருக்கும். இப்போதும் அப்படி ரகசியமாகவே இருந்து விட்டுப் போகட்டுமே? என் இதை அம்பலமாக்கி அதற்கு ஒரு சமூக அந்தஸ்தை உருவாக்க முனைகிறீர்கள்.

உண்மையில் வெளிநாட்டவர்களிடம் இருக்கும் அத்தனை மாற்று பாலியல் வழிமுறைகளும் எம் சமூகத்திலும் இருக்கின்றன, ஆனால் அவற்றை வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி அங்கிகாரம் பெற்று நெடு நாட்களுக்குப் பிறகே நம்வர்கள் பேசத்தொடங்கி உள்ளார்கள். இவ்வாறு நம்வர்களையும் பேச வைத்த துணிச்சல் நம் எழுத்தாளர்களையும் , சினிமாவையுமே சாரும்.

ஒரு சினிமாவில் வடிவேல் `` நீ அவனா?`` என்று கேட்ட வசனம் எந்தளவிற்கு பிரபலமானது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் , அதே போல் மொழி திரைப்படத்தில் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட ஓரினச்சேர்க்கை பற்றிய காட்சிகள் போன்ற காட்சிகளையும் நாம் ரசித்தோம். இப்படிப் பட்டகாட்சிகள் இப்போது சர்வசாதரணமாக படங்களிலே வரத்தொடங்கி விட்டன.

அதேபோல நம் எழுத்தாளர்களும் சர்வ சாதாரணமாக இதைப்பற்றி எழுதத் தொடங்கிவிட்டார்கள்.
உதாரணத்திற்காக ஒன்று ,

//ஒரு மாதுவின் துணை இல்லாமல் இரண்டு ஆண்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மதுவின் துணையாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள், " வேறு மாதிரி' ஆட்களாக இருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. ஆனால், எங்களுடைய சந்திப்புக்கான செலவு, மாதம் ஒன்றரை லட்சம்.//

இது ஒரு பிரபலத்தின் கதையின் சிறு பகுதி.

அதேபோல் பயர் என்றொரு படம் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது, அப்போது அந்தப் படம் வெளிவந்த பொழுது இருந்த எதிர்ப்பு இப்போது வெளியடப்படும் அதே கருத்துள்ள ஒரு படத்திற்கு நிச்சயமாக இருக்காது.

அந்தளவிற்கு நாம் முன்னேறி விட்டோம் என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாமா?

ஓரினச் செக்கை சம்பந்தமான எந்த ஒரு படைப்பையும்( பயர் உட்பட) பார்த்தபோது நான் உணர்ந்து கொண்டது, ஓரினச் சேர்க்கை பற்றிய அவர்களின் கருத்தை சிறப்பான படைப்பாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கை பற்றி அவர்கள் அறிந்திருப்பது ஒரு பக்கம்தான் , அதற்கு இன்னுமொரு கொடுமையான முகமும் இருக்கிறது என்பதை, நிச்சயமாக இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் கூட மறுக்க முடியாது.

இவர்கள் எல்லோரும் கையில் எடுத்துக் கொள்வது ,மருத்துவ ஆதாராங்களை.
மருத்துவத்தின் படி ஓரினச்சேர்க்கை என்பது மன நோயோ அல்லது மருத்தவரிடம் காட்டப்பட வேண்டிய விடயமோ இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
இதை மையமாக வைத்துதான இன்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பேசும் அனைவரும் வாதிடுகிறார்கள்.

ஆனால் இவர்களுக்குத் தெரியுமா?

ஆண் பெண் புணர்தலின் போது எயிட்ஸ் தொற்றுவதை விட ஓரினச் சேர்க்கையின் போது தொற்றுவதற்கான சந்தர்ப்பம் எத்தனையோ மடங்கு அதிகம்.

மற்றது, ஆண் பெண் உறவின் போது எயிட்சை தடுப்பதற்காக இல்லாவிட்டாலும் கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்காகவேனும் கொண்டம் பயன்படுத்துவார்கள். அது அவர்களை அறியாமலேயே எயிட்ஸ் பரவுதலை தடுக்கலாம். ஆனால் இந்த ஓரினச் சேர்க்கை மனிதர்களுக்கு கர்ப்பம் என்றொரு பயமே இல்லை, ஆக இவர்களுக்கு எயிட்ஸ் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி கொண்டம் பாயன்படுத்தும் போது இந்தியா வல்லரசாக ஆகும் முன் எயிட்ஸ் அரசாக மாறிவிடும்.

எயிட்ஸ் என்பதை தாண்டி மற்ற எல்லாவிதமான பாலியல் தொற்றும் ஓரினச் சேர்க்கையில் ஏற்படும்.

இவர்களுக்கு மலவாயில் புற்று நாய் இவர்களுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் gay bowel syndrom எனும் நாய் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கு ஏற்படலாம்.

மற்றும் ஓரினச் சேர்க்கை செய்யும் நபர்களின் இடையே போதைப் பழக்கமும் சர்வ சாதரணமாக இருக்கின்றது.


இது எது பற்றியும் அறியாமலேயே அல்லது அறிந்திருந்தாலும் இவற்றை தவிர்த்து , ஓரினச் சேர்க்கை என்பதும் ஒரு உணர்வுதான் அவற்றை நாம் மதிக்க வேண்டும் என்பது போலவே இவர்களின் படைப்பும் இருக்கிறது.

அதற்கப்பால் இந்தப் படைப்பாளிகளின் சமூகப் பார்வையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது. இவர்கள் அறிந்திருப்பது ஓரினச்சேர்க்கை என்பது ஒரே நிலையில் இருக்கும் ஆணுக்கும் ஆணுக்கும் அல்லது பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவு என்றுதான் . இவ்வாறு மட்டும் இருந்தால் பரவாய் இல்லை , எல்லோரும் சகித்துக் கொள்ள பழகிவிடுவார்கள்.
இன்று கள்ளக் காதலர்கள் வெளிப்படையாக செய்கின்ற சில்மிசங்களைச் சகித்துக் கொள்வதைப்போல , ஒரு ஆணும் ஆணும் அல்லது ஒரு பெண்ணும் பெண்ணும் பீச்சிலும் , பஸ்சிலும் செய்கின்ற சில்மிசங்களையும் சகித்துக் கொள்வார்கள்.

ஆனால் இதற்கு அப்பாலும் இது மாபெரும் கலாச்சாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை ஒரு துளி கூட யோசிப்பதாக இவர்களின் படைப்புக்களில் காட்டவில்லை.

குறிப்பாக குழந்தைகளோடு உறவு கொள்ளவே விரும்பும் அநேகமான பெரிய மனிதர்கள் ஓரினச் சேர்க்கை வாதிகள். ஆக , நீங்கள் ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்குவதன் மூலம் ஓரினச் சேர்க்கை வாதிகளின் எண்ணிக்கையைக் அதிகரித்து விட்டால், சீரழியப் போவது நம் குழந்தைகளும்தான் .

மற்றும் ஒரு பெண் பிள்ளையை ஒரு ஆண் திருட்டுத் தனமாக கடத்திப் போய் துஷ்பிரயோகம் செய்வது என்பது , கடினமானது, மற்றவர்களால் இலகுவாக இன் காணப்பட்டு தடுக்கப் படக்கூடியது .
ஆனால் ஒரு ஆண் ஒரு ஆண் பிள்ளையை ஏமாற்றிக் கொண்டு போய் துஷ் பிரயோகம் செய்வதை இனங்கண்டு தடுப்பது என்பது சாத்தியம் குறைவானது.

ஓரினச் சேர்க்கை என்னும் செயற்பாடு அதிகமாக நடைபெறும் சந்தர்ப்பம் ராணுவத்தில் இருக்கும் படை வீரர்களுக்கிடையேயும் , விடுதிகளில் தங்கி உள்ள பெண்கள் / ஆண்களுக்கிடையேயும் (இது என் கணிப்பல்ல கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில்).

ராணுவத்தில் இருக்கும் ஓரினச் சேர்க்கைவாதிகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு ஆய்வில் , அவர்கள் ராணுவ சேவைக்கு உரிய மன நிலைமை அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓரினச் சேர்க்கை செய்வோரின் மனநிலைமை, மற்றவர்களிடம் இருந்து ஏதோ ஒருவகையில் வேறுபடத்தான் செய்கிறது.

யார் சொன்னாலும் , சொல்லாவிட்டாலும் எமது சமூகத்திலும் ஒரினச்செர்ககி இருக்கத்தான் செய்தது. இவ்வளவு காலமும் ரகசியமாக இருந்த இந்த செயற்பாட்டுக்கு எமது சமூகத்திலேயே அங்கிகாரம் தாருங்கள் என்று போராடும் அளவிற்கு காரணம் நமது படைப்பாளிகளே.

ஒரு விடயம் தொடர்ச்சியாக எதிர்க்கப்படும் போதும் , திரும்ப திரும்ப எழுதப் பட்டால் அதுவே மக்கள் மனதில் பதிந்து போய் விடும். பிறகு மக்களும் அந்த விடயத்தை வெளிப்படையாக பேசத்தொடங்கி விடுவார்கள். அதுதான் இப்போது இந்த ஓரினச் சேர்க்கை விடயத்தில் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவே ஓரினச் சேர்க்கை பற்றி எழுதும் நபர்களே, படம் பன்னுபவர்களே!

நீங்கள் வெறுமனே ஓரினச்சேர்க்கை செய்து சந்தோசமாக இருக்கும் நபர்களின் உணர்வுகளை மட்டும் அறிந்து வைத்துக்கொண்டு , இது பற்றி பேசுவதை விட்டு, ஓரினச் சேர்க்கை காரணமாக சீரழிந்து போன நபர்களின் அனுபவங்களையும் அறிந்து விட்டு பேசினீர்களே ஆனால் மட்டுமே உங்களால் அந்த விடயத்தை நேர்த்தியாக பேசமுடியும்.

அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது நூறு வீதம் சரி என்றே வைத்துக் கொள்வோம்.அதற்காக அவர்களின் உணர்வை மதித்து சமூக அந்தஸ்தை வழங்கி அந்த மனநிலையை இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தி சீராக வாழ்பவர்களையும் சீரழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்.


குறிப்பாக தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று முத்திரை குத்திக் கொண்டு கடவுளே ஓரினச் சேர்க்கை செய்யும் போது மக்கள் என் செய்ய முடியாது என்று வாதிடும் நபர்களே !
நீங்கள் கடவுளை எதிர்ப்பது உங்கள் உரிமைய ஆனால் ஓரினச்சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்க நினைப்பது எந்த வகையில் நியாயம் .

இறுதியாக ஒரு கேள்வி!!!!!!!!!!!

ஓரினச் சேர்க்கை போல்தான் , இன்செஸ்ட்(incest) () எனப்படுவதும் ஒரு மாற்று பாலியல் செயற்பாடுதான். இதைப்பற்றியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டவர்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளார்கள். சில காலங்களில் அவர்கள் இதற்கும் அங்கிகாரம் தேவை என்று போராடலாம்.
(பிணங்களோடு உறவு கொள்ளும் மனிதர்கள் என்ற http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_9503.html இந்தப் பதிவையும் பாருங்கள்)

இப்போது ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் தேடும் பகுத்தறிவு வாதிகளே! ஓரினச்சேர்க்கை கருத்துக்களை சமூகத்திற்குள் விதிக்கும் எழுத்தாளர்களே!

இன்செஸ்ட் என்பதற்கு ஏதாவது ஒரு வெளிநாடு அங்கிகாரம் வழங்கினால் நீங்களும் அதற்கு அங்கிகாரம் வேண்டும் என்று போராடுவீர்களா?

இன்செஸ்ட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத உறவுகளோடு உறவு வைத்தலைக் குறிப்பது. அதாவது தாய் மகன் உறவு, அப்பா மகள் உறவு, சகோதரன் சகோதரி உறவு கொள்ளுதல்.

இந்த விடயத்திகும் அங்கிகாரம் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இப்போதே நம்மவர்கள் வெளிப்படையாக , தந்தை மகள் உறவு பற்றி பேசுகிறோம்.

// மகளை வன்புணர்ச்சி செய்யப் போனதால்தான், அவரது முதல் மனைவி அவரை அடித்து விரட்டினார். //

இது இப்போது வெளிப்படையாக பேசப்படும் ஒரு விடயம். இது உண்மையா பொய்யா என்று ஒரு துளி கூட எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொல்வது, இப்படியே நாம் வெளிப்படையாகப் பேசத் தொடங்குவது, கொஞ்சம் கொஞ்சமாக பெருகி ஒருகாலத்தில் அதற்கும் அங்கிகாரம் வேண்டும் என்ற ஒரு நிலைக்கு நம் சமூகத்தை கொண்டு விடலாம்.

அப்போது பயர் என்ற ஓரினச் சேர்க்கை என்ற உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய படம் போல் , தாய் மகன் உறவு கொள்வதை சிறப்பாக வெளியிடும் ஒரு படமோ, அல்லது வடிவேல் தன மகள் முறையான பெண்ணோடு உறவு கொள்வது போல் ஒரு நகைச்சுவைக் காட்சியோ எடுக்கப்பட்டால் ஆச்சரியம் இல்லை.

கொஞ்ச காலத்திற்கு முன் ஓரினச் சேர்க்கைய எதிர்த்தது போல இந்தப் படங்களையும் எதிர்ப்போம், பிறகு திடீரென ஒருநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் இப்படி விருப்பப் பட்டு தகாத உறவு வைப்பதும் தவறு இல்லை என்று( இன்று ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்கி உள்ளத்தைப் போல) .

அப்போது நம் பகுத்தறிவு வாதிகள் என்று எழுதும் நண்பர்கள் பார்வதியும் முருகனும் உறவு வைத்து இருந்தார்கள் என்று சான்று பகிரத் தொடங்குவார்கள்.

ஓரினச் சேர்க்கை செய்பவர்களின் உணர்வை நாம் மதிக்க வேண்டு என்று கேட்பவர்களே!
அப்படியானால் இன்செஸ்ட் நடைமுறையில் உள்ளவர்களின் உணர்வையும் நாம் மதிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கத்தானே செய்யும்.

இறுதியாக இரண்டு விஞ்ஞானக் கருத்துக்களும் என் கருத்தும்....

உடலுறவு (sex) சென்பது இனங்களின் நிலவுகைக்கு அத்தியாவசியமானது, தனி மனிதர்களின் நிலவுகைக்கு அல்ல.

தன் இனத்தைப் பேருக்கும் வல்லமை உள்ளதே தனியன் எனப்படும். அப்படியானால் இனம் பேருக்கும் வல்லமை இல்லாத ஓரினச் சேர்க்கை செய்யும் நண்பர்கள் சனியன் என்றா சொல்லப்படும் .