பிள்ளையார் சுழியையையும் ஏமாற்றிவிட்டு வந்துவிடுகின்றன எழுத்துப் பிழைகள்...
...........................................
மரண பயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் மரணிக்கிறது மனசு...
.......................................... பார்வையற்றவன் பார்க்கிறான்.... கைபிடித்து வீதிகடக்க உதவும் கையில் முளைக்கும் அன்புக் கண்களால்....
...........................................
மலிவு விலையில் வாங்கிய அரிசியை எப்படித்தான் அரித்தாலும்.... வந்துவிடுகின்ற கல்லைக் காரணம் காட்டி தொடங்குகிற சண்டையே அன்றைக்கு அவன் குடிக்கக் காரணம் ஆகிவிடுகின்றது... குடிக்கிற காசைக் கொடுத்திருந்தால் அடுத்த நாளாவது நல்ல சோறு சமைத்திருப்பாள் எல்லோருக்கும் சேர்த்து
என்னையறியாமல் உறங்கியபோது நீவந்தாய் ! இமைகளைத்தாண்டி வெளியேறியது கண்கள் ....
*********************** வருகின்ற அலைகளுக்குத் திரும்பிபோக மனசில்லை கடற்கரையில் நீ ....
*********************** நீ பூசிக்கொண்டாய் புனிதமானது திருநீறு
********************* இதுவரை முடிந்துபோன என் ஒவ்வொரு ஜென்மத்தின் மரணத்தின் போதும்... அடுத்த ஜென்மத்திலாவது உன்னோடு வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டுதான் செத்தேன்..
இந்த ஜென்மத்தில் முடிவெடுத்து விட்டேன் இறப்பதேயில்லை என்று
************************ உன்னோடு வாழாத நாட்களை வரவுவைக்க மறுக்கிறது வாழ்க்கை
ரசிப்பதற்காய் அடைத்து வைத்த குருவியின் குஞ்சுகள் அனாதைகள்....
விர(ப)க்தி
குடம் குடமாய் பால் ஊற்றினார்கள் சாமி அழுதுகொண்டிருந்தது பசியோடு கன்றுகள்
அபலைகள்
அனாதை இல்லத்தில் அம்மாக்களும் அப்பாக்களும் இல்லாத குழந்தைகள்....
முதியோர் இல்லத்தில் பிள்ளைகள்' இருக்கும் அம்மாக்களும் அப்பாக்களும்
விபச்சாரியின்வேண்டுகோள் !
கொடுக்கிற காசிற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள் மார்பினை மட்டும் கசக்கி விடாதே குழந்தைக்காக சேர்த்து வைத்திருக்கிற சில துளி பாலையும் வீணாக்கி விடாதே!
அழுக்கு
உங்கள் கண்களில் இருக்கும் அழுக்கினை அகற்றி விடுங்கள் எல்லோரும் அழகுதான்
மூடநம்பிக்கை
ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடுதான் கற்களை கடவுளாக்கிப் பார்ப்பது ஆத்திகம் கடவுளை கற்களாக்கிப் பார்ப்பது நாத்திகம்...
கடவுளுக்கு நான் கொடுத்த நேர்த்திக் கடன்தான் வாழ்க்கையில் நான் கொடுத்த முதல் லஞ்சம்
ஆதிக்கம்
அப்பன் பெயர் தெரியாத குழந்தைகள் என்று குழந்தைகள் தண்டிக்கப்பட அப்பாக்கள் தப்பித்து விடுகிறார்கள்
சேமிப்பு
என்னை அறியாமல் தூங்கிப் போனாலும் விடியும் போது நான் இருக்கிறேன் நானாக..
வாழ்க்கை
நான் வாழ்ந்து முடிக்கும் முன்பே என் வாழ் நாளின் ஒவ்வொரு நாட்களும் முடிந்து போகிறது
முகவரி
அகதி முகாமில் பிறக்கும் குழந்தைக்கு வீடு அகதி முகாம்
பாசம்
பசியில் அழுகின்ற குழந்தையின் வாயில் வேறு வழியில்லாமல் வெற்றுச் சூப்பியை வைக்கும் போது தூங்கிப் போன குழந்தைகள் சிலவேளை நடிக்கலாம் தூங்குவதைப் போல.. அம்மாக்கள் கவலைப் படக்கூடாது என்பதற்காக
நீ இறந்த பின்பாவது என்னைக் காதலிப்பாய் என்ற நம்பிக்கையில் அதே சோகத்தோடு காத்திருக்கிறேன்.
***************************
நான் இறந்தபின்பும் உயிர்வாழ்வதாய் நடித்துக் கொண்டிருக்கிறேன் எனக்குள் உயிர்வாழும் உன்னையும் சேர்த்து புதைத்து விடுவார்கள் என்ற பயத்தில்
********************************** நான் இறந்த பின்பு உன்னைப்பற்றி எல்லோரிடமும் சொன்னேன்! எல்லோரும் கவலைப்படுகிறார்கள் உன்னைப்பார்க்காமலே இறந்து விட்டதாக
*****************************
என்னைக் கொலை செய்தபின்புகூட என்னை எடுத்துப் போக முடியவில்லை எமனால்.... எமனல்ல எவன் வந்தாலும் எனைப் பிரிக்க முடியாது உன்னிலிருந்து....
***************************
உன்னை மறந்து கொண்டு உயிர்வாழ்வதைவிட... நினைத்துக் கொண்டு இறப்பது மேல் !
***************************
என் உடலை எரித்து விட்டார்கள் பரவாயில்லை எனக்கு உயிர் மட்டும் போதும் உன் உடலின் ஒரு மூலையில் இருந்து வாழ்ந்து விட்டுப் போகிறேன்
************************
என்னை எரிக்கும் முன்பு... நீ வருவாய் என்று பார்த்த்திருந்தேன் பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடதென்று உன்னைத் தடுத்து விட்டார்கள் நீ இல்லாத சுடுகாட்டில் நான் எரிய மாட்டேன் என்று எழுந்து வந்துவிட்டேன்
******************************
என் கல்லறையில் வைக்கப்படும் பூக்களையெல்லாம் சேமித்துக் கொண்டிருக்கிறேன்! என்றோ ஒருநாள் நீ வரும்போது தருவதற்காய்....
ஆபத்து வந்தாலோ அல்லது தாங்க முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ `` கடவுளே என்றுதான் ஆத்திகர்கள் அழைப்பார்கள். நாத்திகர்கள் எப்படி அழைப்பார்கள்? நானும் கடவுளைத்தான் துணைக்கழைப்பது வழக்கம். ஆனாலும் சிலவேளைகளில் கடவுளோடு ஆத்திரம் ஏற்படும் பொழுதுகளில், என்னடா இந்தக்கடவுள் என்று அழுத்துக் கொள்ளும் பொழுதுகளில் உதவியாக இருக்குமே , அதுதான் கேட்கிறேன் என் நாத்திக நண்பர்களே ! ஆபத்து வேளைகளில் யாரை அழைக்கிறீர்கள்.
.......................................................................................................................................................................... கடவுளும் சாதாரண மனிதர்களைப்போல தவறு விடுகிறானே என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.
ஒரு குழந்தை வயது வெறும் 12 . ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண ஒரு பிள்ளையாக , சுட்டியாக இருந்தது. திடீரென தன் கேட்கும் திறனை இழந்தது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியர்களுக்கே சவாலாக அமைந்தது அந்தக் குழந்தையின் நோய்.
என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தர்கள், குழந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தன் புலன்களை இழந்தது.கேட்கும் திறனைத்தொடர்ந்து பார்க்கும் திறனும் குறையத் தொடங்கியது.
அப்போதுதான் குழந்தைக்கு உலகத்திலேயே வெறும் சில நூறு பேர்களுக்கே ஏற்பட்டு இருக்கும் ஒரு அரிதான நோய் ஏற்பட்டு இருப்பதை வைத்தியர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன பயன் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத அந்த நோய் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
இங்கே கடவுள் யாரைத் தண்டிக்கிறான்
அந்தக் குழந்தையையா?
அந்தக் குழந்தையின் உறவினர்களையா?
யாரென்றே தெரியாத அந்தக் குழந்தைக்காக கவலைப் படும் உங்களையா?
சில காலங்களுக்கு முன் ஓடியாடித்திரிந்த அந்தக் குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் திறன்களை இழந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தன் உணவை விழுங்கும் திறனையும் இழந்து போனது. பசித்தால் வாய்திறந்து சொல்ல முடியாது, வயிற்றைத் தட்டிக் காட்டும். வாயினால் விழுங்க முடியாது, மூக்கின் ஊடாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயின் ஊடாக திரவ சாப்பாடுகளை மட்டுமே வழங்க முடியும் .
மூக்கின் உள்ளே ஒரு தும்பு போனாலே படும் அவஸ்தைகள் நாம் அறிவோம். இந்தக்க் குழந்தைக்கோ மூக்கின் ஊடான ஒரு தடித்த குழாய்தான் சாப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று வயிற்றின் ஊடாக ஒரு குழாயை செலுத்தி நிரந்தரமாக அக்குழாயின் ஊடாக சாப்பாடு வழங்குவதற்கான ஒரு சத்திர சிகிச்சை நடைபெறப்போகிறது.
அதற்கு முன்பு, நேற்று அந்தக் குழந்தை தன் குறைந்து போன பார்வைப்புலத்தோடு வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.
இதை நான் இன்டர் நெட்டில் போடவா எல்லோரும் பார்ப்பார்கள் என்று எழுத்தின் மூலமாக கேட்டேன் . அந்த நேரத்தில் பூரிப்படைந்த அந்த பிஞ்சு மனசு உடனடியாக மேலும் மூன்று படங்களை வரைந்து கொடுத்தது சில மணி நேரங்களில். அப்போது அந்தப் படங்கள் அழகாக இருக்கிறது என்று சைகையிலே சொன்னேன் , தன் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாத அந்தப் பிள்ளை அந்தப் படங்களை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டது .
அந்தப் படங்களை நீங்களும் பாருங்கள். அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள். சத்திர சிகிச்சை முடிந்து வலியோடு வருகின்ற அந்த குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு துளி சந்தோசத்தையாவ்து கொடுக்கும்.
அந்தக் குழந்தையால் தமிழை வாசிக்க முடியாது, ஆகவே தயவு செய்து ஆங்கிலத்திலே சிறு குறிப்பாக இந்த ஓவியங்கள் ``அழகாக இருக்கிறது `` போன்று சிறிய வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போங்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தையால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , அதுவரை அது இப்படி சந்தோசம் தரும் சிறு சிறு விடயங்களையாவது பார்க்கட்டும்.
அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையின் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தோசத்தையாவது கொடுக்கும்.
நீயும் நானும் ஒரு பஸ் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தோம்...
ஓட்டுனருக்கு எல்லோரும் திட்டிக்கொண்டிருந்தார்கள் மெதுவாக ஓட்டுவதாகச் சொல்லி... நான் மட்டும் வேகமாக ஓட்டுவதாகச் சொல்லி திட்டிக்கொண்டிருந்தேன்!
நடத்துனர் எங்கே போக வேண்டும் என்றதற்கு உன் மனதிற்குள் என்றுவிட்டேன்!
எல்லோரையும் போல பஸ் டிக்கெட்டை பத்திரப் படுத்திக் கொண்டேன் ! பரிசோதகருக்குப் பயந்தல்ல... உன்னோடு பயணித்த இந்த டிக்கெட்டைவிட நல்ல ஞாபகச்சின்னம் வேறென்ன இருக்க முடியும்...
பஸ் வண்டி ஒவ்வொரு நிறுத்தத்திலும் தன் பயணத்தைப் புதுப்பித்துக் கொண்டது... நீயும் ஒவ்வொரு புன்னகையின் முடிவிலும் உன் மௌனத்தைப் புதுப்பித்துக் கொண்டாய் ...
நீ என்னைப் பார்ப்பதே இல்லையே என்று கவலைப் பட்டுக்கொன்டிருந்தேன் ! பிக்பொக்கட் காரன் என் பேசை எடுத்ததை காட்டிக்கொடுத்து நிரூபித்துவிட்டாய் நீயும் என்னைப்பார்க்கிறாய்....
புரிந்து கொண்டேன் உன்னைப்போலத்தான் எனக்கும் நேரே பார்க்க தைரியம் இல்லையென்பதையும் !
ஒன்று மட்டும் புரியவில்லை எப்படி நான் பார்க்காத நேரத்தைச் சரியாக கண்டுபிடித்து நீ பார்க்கிறாய்..?
உன்வீட்டை விட்டுகொஞ்சம் வெளியே வந்துபார் எல்லா நட்சத்திரங்களும் இன்றுஒளி வீசுவதற்குப் பதிலாய் என் கவிதைகளை வீசிக்கொண்டிருக்கும் உனக்கு பிறந்தநாள் பரிசாய்...
அபூர்வமாய் கிடைத்த நேரத்தில் அவசரமாய்தர இதைவிட வேறுபரிசு இல்லை என்னிடத்தில்...
தமிழே நீ வாழ்க ..... தமிழர்களைக் காப்பாற்றத்தான் யாருமில்லை தமிழைக் காப்பாற்றவாவது நீ வாழ்க!!!!!!!!!!!
எத்தனையோ அழகான பெண்களைப் பார்த்த போதெல்லாம் காதலிக்கவே மாட்டேன் என்று காதலோடு அடம்பிடித்துக் கொண்டிருந்தேன்! பாழாய்ப் போன காதல் கடைசியில் உன்னை அனுப்பி என்னைப் பழிவாங்கி விட்டது.....
************************
கடவுளுக்கு நிறைய அவதாரம் காதலுக்கு ஒரே ஒரு அவதாரம் நீ....
************************
உன்னைப் பார்த்த நொடியில் இறந்து போய்.... என் வாழ்க்கையின் மீதி நாட்களை உன்னோடு வாழ்வதற்காக சேமித்து விட்டேன்! வா உயிர்பெற்று மீதியை வாழ்ந்து முடிக்க வேண்டும் ...
*********************
நீ வெட்டிப் போடும் நகம் முளைக்கிறது கவிதையாய்... யார் சொன்னது நகங்களுக்கு உயிர்- இல்லையென்று...
************************
நீ சூடிக் கொள்வதற்காய் ஒரு பூப்பறித்தாய் நீ பறித்த பூ மீண்டும் ஒருதடவை மலர்ந்தது... பறிக்காத பூக்கள் அந்தியாகும் முன்னே வாடிப்போகின....
*********************
உனக்கு பரிசு வாங்குவதற்காய் கடைகளில் ஏறி இறங்கும் போதெல்லாம் கடைசியில் என்னையே வாங்கி வருகின்றேன்....
********************
நான் மற்றவர்களைப்போல கவிதை எழுதும் கவிஞன் அல்ல கவிதைகளை கண்டுபிடிக்கும் கவிஞன் உன் ஒவ்வொரு அசைவிலும் ஒளிந்திருக்கும் கவிதைகளைக் கண்டு பிடிக்கும் கவிஞன்...
*********************
பாடம் சொன்ன ஆசிரியரே பாடத்தை மறப்பதுபோல எனக்கு காதலிக்க கற்றுக் - கொடுத்துவிட்டு நீ மறந்து போனாயே!
**********************
எனக்குள் இருக்கும் என்னையெல்லாம் எடுத்தெறிந்து கொண்டிருக்கிறேன் உன்னைச் சேமிக்க இடம் போதாததால்.....
நிஜங்கள் என்னை காட்டிக்கொடுக்கின்றன பொய்கள்தான் காப்பாற்றி விடுகின்றன....
உண்மை சொல்வதை விடவும் பொய் சொல்லவே அதிகம் தைரியம் தேவை என்றாலும்.... எந்தக் கோழையும் சுலபமாய்ச் சொல்லிவிடுகிறான் பொய்யை....
காதலைச் சொல்ல தைரியம் இல்லாதவர்களுக்கு கூட இதுவரை காதலிக்கவேயில்லை என்று பொய் சொல்ல தைரியம் எப்படியோ வந்துவிடுகிறது
குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சொன்னேன்... நண்பனுக்காகவே கொஞ்சம் குடித்தேன்! அந்த நண்பன் வீட்டிலும் அதே பொய்....
பொய் சொல்லிவிட்டு கடவுளே மன்னித்துவிடு என்று வேண்டும்போது எந்தக் கடவுளும் இதுவரை வந்து மன்னிப்புக் கொடுக்காவிட்டாலும் செய்த பிழை நீங்கி விட்டதாய் சந்தோசப்படுகிறது மனசு.... இதற்காகவே ஆத்திகனாக இருக்கிறார்கள் நிறையப் பேர்
மற்றவர்களோடு இருக்கும் போது சொல்கிற பொய்களை எண்ணி தனிமையில் இருக்கும் போது வருத்தப்படுகிற சாதாரண மனிதன்தான் நானும் ...
எத்தனை மனிதர்களை பொய் சொல்லி ஏமாற்றி இருந்தாலும் என் மனச்சாட்சியை ஒருமுறை கூட ஏமாற்ற முடிந்ததில்லை...
கவிதைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொய் அழகு சிலவேளைகளில்....
பொய் சொல்வெதெல்லாம் ஒரு பொழைப்பா என்று திட்டுபவர்களே கொஞ்சம் சொல்லித்தாருங்கள் பொய் சொல்லாமல் வாழ்வெதப்படி....?
அநேகமானோர் வலிப்பு ஏற்பட்ட நபரை நேரிலே பார்த்த அனுபவம் பெற்றிருக்கலாம்,அல்லது சினிமாவிலாவது கட்டாயம் பார்த்திருக்கலாம். ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டாலே அவருக்கு காக்காய் வலிப்பு(எபிலெப்சி/epilepsy )நோய்தான் இருக்கிறது என்று நம்மவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள்.
காக்காய் வலிப்பு எனும் நோய் தவிர இன்னும் பல விதமான நோய்களிலேயும் வலிப்பு ஏற்படலாம். வலிப்பு ஏற்பட்டவர்களுக்கெல்லாம் காக்காய் வலிப்பு எனும் நோயில் வரும் என்ற தவறான கருத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.
இந்த இடுகையில் நான் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சலோடு ஏற்படுகின்ற வலிப்பு(febrile fits ) பற்றி சில விடயங்களை சொல்கிறேன்.
முதலாவதாக நீங்கள் சிந்திக்க வேண்டியது அது மூளைக்காய்ச்சலாகவும் இருக்கலாம் . ஏனென்றால் மூளைக்காய்ச்சளில் காய்ச்சலோடு வலிப்பு வரும்.
அடுத்ததாக அது காய்ச்சலோடு வரும் சாதரண வலிப்பாக இருக்கலாம். அநேகமான சந்தர்ப்பத்திலே சிறு பிள்ளைக்கு காய்ச்சல் வரும் போது அது febrile fits ஆகத்தான் இருந்தாலும், நாம் முதலில் மூளைக்காய்ச்சளைச் சிந்திப்பது , மூளைக்காய்ச்சல் மிகவும் ஆரம்பக்கட்டத்திலே இனங்காணப்பட்டு சுகமாக்கப் பட வேண்டியது என்பதாலே .
ஆகவே முதன் முறையாக உங்கள் பிள்ளைக்கு காய்ச்சலோடு வலிப்பு வந்தால் அது மூளைக்காய்ச்சல் அல்ல என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அந்தக் குழந்தை வைத்தியரிடம் அழைத்துப் போகப்பட வேண்டும். வைத்தியர் அது மூளைக் காய்ச்சல் அல்ல வெறுமனே சாதரண காய்ச்சலோடு வருகின்ற வலிப்பே(febrile fits ) என்று சொல்வாரானால் நீங்கள் எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
febrile fits எந்தவயதினருக்குஏற்படும்?
பிறந்து ஆறு மாதத்தில் இருந்து 5-6 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கே ஏற்படும் . (இந்த வயதெல்லைகளுக்கு அப்பாற்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சலோடு வலிப்பு ஏற்படலாம் என்றாலும் , அவர்களுக்கு சற்று அதிகமான மருத்துவக் கண்காணிப்பு வழங்கப் பட வேண்டும்)
ஒருமுறை febrile fits வந்தால்மீண்டும்வருவதற்கானசந்தர்ப்பம்உள்ளதா?
30 வீதமான குழந்தைகளுக்கு மீண்டும் காய்ச்சல் வரும் சந்தர்ப்பத்திலே febrile fits வரலாம்.
மிகவும் அரிதாகவே ஏற்படும்(2%) . அதாவது febrile fits ஏற்படும் பட்சத்தில் பெற்றோர் காக்காய் வலிப்பு நோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
ஒருமுறை febrile fits ஏற்பட்டகுழந்தைக்குமறுமுறைகாய்ச்சல்வரும்போதுதாய்கவனிக்கவேண்டியவிடயங்கள்என்ன?
ஏற்கனவே சொன்னது போல மீண்டும் காய்ச்சல் ஏற்படும்போது மீண்டும் ஒருமுறை febrile fits வருவதற்கான சந்தர்ப்பம் உள்ளதால், தாய் சற்று கவனம் எடுப்பது நல்லது.
குறிப்பாக காய்ச்சல் அதிகமாகாத படி கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்காக பரசிட்டமோல் எனப்படும் மருந்து இலகுவாக கடையிலே பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையின் நிறைகேற்ப எவ்வளவு பரசிட்டமோல் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ( பரசிட்டமோல் மருந்தும் வைத்தியர் அறிவுறித்திய அளவுக்கே கொடுக்கப் பட வேண்டும். அளவுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டால் அதுவும் நஞ்சாகி குழந்தையின் ஈரலை பாதிக்கலாம்)
அதேபோல் ,தாய் இயற்கையான சில வழிமுறைகளிலே குழந்தையின் காய்ச்சல் ( உடல் வெப்ப நிலை) அதிகரிக்காமல் கவனித்துக் கொள்ள முடியும்.
வலிப்பைத் தடுப்பதற்காக எந்த ஒரு மருந்தும் தொடர்ச்சியாக கொடுக்கப் படவேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் , சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வருபோழுது febrile fits வராமல் தடுப்பதற்க்காக சில மருந்துகள் பயன்படுத்தப் படலாம். இவை ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனையுடனேயே வழங்கப் படவேண்டும். ( எல்லாக் குழந்தைகளுக்கும் வழங்கப் பட வேண்டியதில்லை)
febrile fits ஏற்பட்ட குழந்தைக்கு எலாவிதமான தடுப்போசிகளும் வழங்கப்பட வேண்டும். ஆனாலும் தடுப்போசி போடுவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனை பெறப்பட வேண்டும். சிறு மேலதிக கவனிப்பும் சில தடுப்போசிகளுக்குத் தேவைப்படலாம். சில தடுப்போசிகள் சற்று பிற் போட வேண்டி வரலாம். ஆகவே வைத்தியரின் ஆலோசனை பெறுவது முக்கியமானது.
ஒருபிள்ளைக்குவலிப்புவரும்போதுஅருகில்இருப்பவர்கள்செய்யவேண்டியமுதல்உதவிபற்றிவீட்டில்இருப்பவர்கள்அனைவரும்அறிந்துவைத்திருக்கவேண்டியநடைமுறைகள் என்ன ?
முதலில் பிள்ளையை ஒரு பாதுகாப்பான இடத்தில் படுக்க வைக்க வேண்டும் .
பிளையின் மூச்சுகுழாய் அடிபடாமல் இருக்க இடதுபுறம் சரிவாக படுக்க வைக்க வேண்டும் அதாவது பிள்ளையை இடதுபுறமாக பக்கவாட்டில் படுகவைகவேண்டும் (மல்லாக்க படுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்)
நமது சினிமாப் படங்களில் காட்டுவதைப் போல கையிலேயோ அல்லது வாயிலோயோ இரும்பு துண்டை வைப்பதை தவிர்க்க வேண்டும்.(இரும்பை கையில் வைத்தவுடன் வலிப்பு சுகமாவது போல் படங்களில் காட்டப்படுவது வெறும் கற்பனையே, அதற்கும் மேல் இரும்பை கையில் வைக்கும் போது பாதிப்பு ஏற்படலாமே தவிர எந்தவகையிலும் நன்மை ஏற்படாது)
வலிப்பு 5நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் .( அப்போதும் முடிந்தளவு பிள்ளையை இடது புறமாக சரித்த நிலையிலேயே கொண்டு செல்ல வேண்டும்).
//ஒரு மாதுவின் துணை இல்லாமல் இரண்டு ஆண்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மதுவின் துணையாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள், " வேறு மாதிரி' ஆட்களாக இருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. ஆனால், எங்களுடைய சந்திப்புக்கான செலவு, மாதம் ஒன்றரை லட்சம்.//
இது ஒரு பிரபலத்தின் கதையின் சிறு பகுதி.
அதேபோல் பயர் என்றொரு படம் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்தது, அப்போது அந்தப் படம் வெளிவந்த பொழுது இருந்த எதிர்ப்பு இப்போது வெளியடப்படும் அதே கருத்துள்ள ஒரு படத்திற்கு நிச்சயமாக இருக்காது.
ஓரினச் செக்கை சம்பந்தமான எந்த ஒரு படைப்பையும்( பயர் உட்பட) பார்த்தபோது நான் உணர்ந்து கொண்டது, ஓரினச் சேர்க்கை பற்றிய அவர்களின் கருத்தை சிறப்பான படைப்பாக்கி இருக்கிறார்கள். ஆனால் ஓரினச் சேர்க்கை பற்றி அவர்கள் அறிந்திருப்பது ஒரு பக்கம்தான் , அதற்கு இன்னுமொரு கொடுமையான முகமும் இருக்கிறது என்பதை, நிச்சயமாக இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களால் கூட மறுக்க முடியாது.
இவர்கள் எல்லோரும் கையில் எடுத்துக் கொள்வது ,மருத்துவ ஆதாராங்களை. மருத்துவத்தின் படி ஓரினச்சேர்க்கை என்பது மன நோயோ அல்லது மருத்தவரிடம் காட்டப்பட வேண்டிய விடயமோ இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை மையமாக வைத்துதான இன்று ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பேசும் அனைவரும் வாதிடுகிறார்கள்.
ஆனால் இவர்களுக்குத் தெரியுமா?
ஆண் பெண் புணர்தலின் போது எயிட்ஸ் தொற்றுவதை விட ஓரினச் சேர்க்கையின் போது தொற்றுவதற்கான சந்தர்ப்பம் எத்தனையோ மடங்கு அதிகம்.
மற்றது, ஆண் பெண் உறவின் போது எயிட்சை தடுப்பதற்காக இல்லாவிட்டாலும் கர்ப்பம் தரிப்பதை தடுப்பதற்காகவேனும் கொண்டம் பயன்படுத்துவார்கள். அது அவர்களை அறியாமலேயே எயிட்ஸ் பரவுதலை தடுக்கலாம். ஆனால் இந்த ஓரினச் சேர்க்கை மனிதர்களுக்கு கர்ப்பம் என்றொரு பயமே இல்லை, ஆக இவர்களுக்கு எயிட்ஸ் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி கொண்டம் பாயன்படுத்தும் போது இந்தியா வல்லரசாக ஆகும் முன் எயிட்ஸ் அரசாக மாறிவிடும்.
எயிட்ஸ் என்பதை தாண்டி மற்ற எல்லாவிதமான பாலியல் தொற்றும் ஓரினச் சேர்க்கையில் ஏற்படும்.
இவர்களுக்கு மலவாயில் புற்று நாய் இவர்களுக்கு வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல் gay bowel syndrom எனும் நாய் ஓரினச் சேர்க்கை ஆண்களுக்கு ஏற்படலாம்.
மற்றும் ஓரினச் சேர்க்கை செய்யும் நபர்களின் இடையே போதைப் பழக்கமும் சர்வ சாதரணமாக இருக்கின்றது.
அவர்களின்உணர்வுகள்மதிக்கப்படவேண்டும்என்றுநீங்கள்சொல்லுவதுநூறுவீதம்சரிஎன்றேவைத்துக்கொள்வோம்.அதற்காகஅவர்களின்உணர்வைமதித்துசமூக அந்தஸ்தைவழங்கிஅந்தமனநிலையை இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தி சீராகவாழ்பவர்களையும்சீரழிக்கநினைப்பதுஎந்தவகையில்நியாயம்.
அப்போதுபயர்என்ற ஓரினச் சேர்க்கை என்ற உணர்வை சிறப்பாக வெளிப்படுத்திய படம்போல் , தாய்மகன்உறவுகொள்வதை சிறப்பாக வெளியிடும் ஒருபடமோ, அல்லதுவடிவேல்தனமகள்முறையானபெண்ணோடுஉறவுகொள்வதுபோல்ஒருநகைச்சுவைக்காட்சியோஎடுக்கப்பட்டால்ஆச்சரியம்இல்லை.
கொஞ்சகாலத்திற்குமுன்ஓரினச்சேர்க்கையஎதிர்த்ததுபோலஇந்தப்படங்களையும்எதிர்ப்போம், பிறகுதிடீரெனஒருநாள்உயர்நீதிமன்றம்தீர்ப்புவழங்கும்இப்படிவிருப்பப்பட்டுதகாதஉறவுவைப்பதும்தவறுஇல்லைஎன்று( இன்று ஓரினச் சேர்க்கைக்கு அங்கிகாரம் வழங்கி உள்ளத்தைப் போல) .