6.22.2009

காதல் வழிகிறது




பட்டினி கிடந்தே
மெலிந்து போன
ஈழத்துக்
குழந்தைகள் போல...
உன் பார்வையின்றி
மெலிந்து
கிடக்கிறது
காதல்



கல்லில்
சாமியை
வணக்குவது போல்
உன்னில்
காதலை
வணங்குகிறேன்..



இனி
உன்னை
கண்ணாடியில்
பார்க்காதே
என்
கவிதைகளில்
பார்...



ஓசோன்
படையில்
ஓட்டை போட்டு
உன்னை ரசிக்கிறது
சூரியன்..



அகதி முகாமில்
அடைபட்ட
அகதிக்கு
நிவாரணம் தாங்கி
வரும் லொறி
போல...
எனக்கு
நீ காதலை
தாங்கி
வருகிறாய்...

2 comments:

பாலமுருகன் said...

வழிவது காதல் மட்டுமல்ல . ஈழத்தின் சோகமும் தான்

balamurugan said...

வழிவது காதல் மட்டுமல்ல . ஈழத்தின் சோகமும் தான்