6.20.2009

மாற்றுக் கருத்தும் மனிதர்களும்



கவிதை
எழுதுவதென்று
முடிவெடுத்து விட்டேன்..

காதலைப் பற்றி
எழுதினேன்...
இந்தக் கருமாந்திரத்தை
எழுதாதே
என்றார்கள்..

கடவுளைப்பற்றி
எழுதினேன்
கடவுளே இல்லை
என்றார்கள்...

காமத்தைப் பற்றி
எழுதினேன்
உனக்கு அனுபவ
அறிவு கம்மி
தம்பி
என்றார்கள்


அரசியலைப் பற்றி
எழுதினேன்
அரசியல் ஒரு
சாக்கடை என்றார்கள்..


இப்படி இன்னும்
பல- எல்லாமே
எதிர்க்கப் பட்டன...

சரி ,
எதப் பற்றி
எழுதுவதாம்
என்றேன்...

மாற்றுக் கருத்தை
எழுது என்றார்கள்..

அப்படி என்றால்
என்ன என்றேன்..

காதல்- கருமாந்திரம்
அரசியல்- சாக்கடை
கடவுள் -இல்லை
காமம்- நிறைய அனுபவித்துச் சொல்லு

இப்படி இன்னும்
பல மாற்றுக்
கருத்துக்கள்
சொன்னார்கள்..

இப்போது நான்
நிறுத்தி விட்டேன்
கவிதைகளை..

7 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய்? என்ன ஆச்சு ? உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....
Hi! I am first.

geevanathy said...

நிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்
கொஞ்சு(ச)ம் க(வி)தைகளுக்காக..

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

என்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய்? என்ன ஆச்சு ? உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....
Hi! I am first.//

ஐயோ கவிதைங்க ...
இதப் பொய் சீரியஸா எடுத்துகிட்டு

நன்றி ஜெஸ்வன்த்தி

மயாதி said...

த.ஜீவராஜ் said...

நிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்
கொஞ்சு(ச)ம் க(வி)தைகளுக்காக..//

ஐயோ அது கவிதை அண்ணா !

நன்றி

thamizhparavai said...

நீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...?!...

மயாதி said...

தமிழ்ப்பறவை said...

நீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...?!//

வாருங்கள் நண்பா !
நன்றிகள்

thamizhparavai said...

உங்கள் தளத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறேன் தவறவிட்ட முத்துக்களைச் சேகரிக்க...