6.25.2009

இழப்புக்கள்

வேலை முடித்து
வீட்டுக்கு
வரும் பொழுதில்


மனைவி தரும்

புன்னகை.....

தேநீர் வாசம்...

வீட்டில் உள்ளோர்க்கு
தெரியாமல்
திருட்டு முத்தம்....

இப்படிப் பல
தவறிப் போவதால்
விடுமுறை
தினத்தையும்
ஞாயிற்றுக்
கிழமையையும்

வெறுக்கிறது
மனசு

6 comments:

ஆ.சுதா said...

நல்ல மனசு!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இது யார் சொன்னது? தப்பு ..தப்பு
வேலைக்குப் போய் வந்தால் தான் இத்தனையும் கிடைக்குமா? ஜோக் தானே?

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல மனசு!!//

நன்றி..

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

இது யார் சொன்னது? தப்பு ..தப்பு
வேலைக்குப் போய் வந்தால் தான் இத்தனையும் கிடைக்குமா? ஜோக் தானே?//

அப்படி இல்லையா ?
எனக்குத் தெரியாதே ! நான் சின்னப் பையனாக்கும்..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//விடுமுறை
தினத்தையும்
ஞாயிற்றுக்
கிழமையையும்

வெறுக்கிறது
மனசு //

அப்ப விடுமுறை நாள்ல என்ன செய்வீக? :-)

maruthamooran said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பரே…………
இதுபோல மற்றொரு பதிவு இங்கி கிளிக்கவும் ..........
http://cherankrish.blogspot.com/2009/06/blog-post_23.html