6.24.2009

ஒரு குழந்தைப் பிறப்பு

காதல் பிறக்கும் நேரம்...

உனனைப் பார்த்த
ஒரு கணத்தில்
பிறந்தது...
பிறந்ததில் இருந்த
நான் சுமந்த
காதல்


குழந்தை
பிறக்கும் போது
வலி...
காதல்
பிறந்த பின்பு
வலி


குழந்தை
பிறப்பின்
முதல் அத்தாட்சி
முதல் அழுகை...
காதல் பிறப்பின்
முதல்
அத்தாட்சி
உன் முதல்
மௌனம்...


குழந்தை
கொஞ்சம்
கொஞ்சமாகத்தான்
கதைக்கப்
பழகும்...
காதலும்
அப்படித்தான்!

இப்போதுதான்
பேசப் பழுகுகிறது
காதல் ....
அதுதான்
மௌனமாகவே
இருக்கிறாய்...


குழந்தையின்
அழுகைகள்
அம்மாவின்
பால் சுரப்பை
தூண்டிவிடும்....
காதலின்
அழுகை
என் கவிதைச்
சுரப்பைத்
தூண்டிவிடும்


குழந்தையை
நெஞ்சில் போட்டுத்
தாலாட்டுவேன்
காதலை
நெஞ்சுக்குள்ளேயே
வைத்துத்
தாலாட்டுவேன்!


குழந்தையைத்
தத்தெடுக்கலாம்
யாராலும்
காதலைத்
தத்தெடுக்க
முடியாது...

உடலுறவு
தேவையில்லை
மனங்களின்
உறவு போதும்
காதல்
பிறக்க...


காதல்
உனக்கும்
எனக்கும்
கல்யாணத்திற்கு
முன்னமே
பிறந்த குழந்தை...


நம்
குழந்தையை
இப்படி
அனாதையாய்
விட்டுச்
செல்கிறாயே!




15 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//குழந்தை
பிறப்பின்
முதல் அத்தாட்சி
முதல் அழுகை...
காதல் பிறப்பின்
முதல்
அத்தாட்சி
உன் முதல்
மௌனம்...//

உண்மை

அப்துல்மாலிக் said...

காதலையும் குழந்தையையும் ஒப்பிட்ட விதம் அருமை

ம்ம்

ஆ.சுதா said...

காதல்
உனக்கும்
எனக்கும்
கல்யாணத்திற்கு
முன்னமே
பிறந்த குழந்தை...//

பிட்டித்த வரி!

Anonymous said...

nice comparisam.....

மழலையும் மனமும் மிகச் சிறப்பா ஒப்பிட்டு சொல்லியிருக்கப்பா....

காதலும் குழந்தையும் அழகான இரண்டு வசந்தம் காலம்...

ஷைலஜா said...

அழகிய கவிதை! காதலும் குழந்தையும் இருப்பதால் மேலும் அழகாய்!

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

//குழந்தை
பிறப்பின்
முதல் அத்தாட்சி
முதல் அழுகை...
காதல் பிறப்பின்
முதல்
அத்தாட்சி
உன் முதல்
மௌனம்...//

உண்மை //

நன்றி வசந்த்

மயாதி said...

அபுஅஃப்ஸர் said...

காதலையும் குழந்தையையும் ஒப்பிட்ட விதம் அருமை

ம்ம்

June 24, ௨//

நன்றி நண்பரே

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

காதல்
உனக்கும்
எனக்கும்
கல்யாணத்திற்கு
முன்னமே
பிறந்த குழந்தை...//

பிட்டித்த வரி!//

நன்றி நண்பரே

மயாதி said...

தமிழரசி said...

nice comparisam.....

மழலையும் மனமும் மிகச் சிறப்பா ஒப்பிட்டு சொல்லியிருக்கப்பா....

காதலும் குழந்தையும் அழகான இரண்டு வசந்தம் காலம்...//

நன்றி அக்கா !

மயாதி said...

ஷைலஜா said...

அழகிய கவிதை! காதலும் குழந்தையும் இருப்பதால் மேலும் அழகாய்!//

நன்றி தோழி

நாணல் said...

//குழந்தையின்
அழுகைகள்
அம்மாவின்
பால் சுரப்பை
தூண்டிவிடும்....
காதலின்
அழுகை
என் கவிதைச்
சுரப்பைத்
தூண்டிவிடும்


குழந்தையை
நெஞ்சில் போட்டுத்
தாலாட்டுவேன்
காதலை
நெஞ்சுக்குள்ளேயே
வைத்துத்
தாலாட்டுவேன்!//

migavum rasithen... azhagana karpanai..

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு மாயாதி!

மயாதி said...

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு மாயாதி!

June 25, 2009 5:45 அம//

நன்றி

மயாதி said...

நன்றி நாணல்...

"உழவன்" "Uzhavan" said...

//குழந்தையின்
அழுகைகள்
அம்மாவின்
பால் சுரப்பை
தூண்டிவிடும்....
காதலின்
அழுகை
என் கவிதைச்
சுரப்பைத்
தூண்டிவிடும்//

அழகு