6.12.2009

எல்லோருக்கும் தாஜ்மஹால்



தாஜ்மகால்
காதலின் கோயில்
அவ்வளவுதான்....

பணக்கார
அரசர்கள் கட்டிய
கோயிலில்தான்
ஏழைப் பக்தர்கள்
சாமியை
தரிசிக்கிறார்கள்

கோயில் கட்டும்
அரசனுக்கு மட்டுமென்று
வரத்தை
கட்டுப்படுத்துவதில்லை
சாமி...


ஏழைக் காதலர்களே
தாஜ்மகாலை
தரிசித்துவிடுங்கள்
போதும்..
தாஜ்மகால்
கட்டுபவர்
என்றுமட்டும்
வரத்தை
கட்டுப்படுத்துவதில்லை
காதலும்...

அதையும்விட
ஆசை என்றால்
பூசலார் போல
மனதிலே
கட்டிக்கொள்ளுங்கள்
ஒரு
தாஜ்மஹால்...

பி.கு- பூசலார் என்பவர் மனதிலே கோயில் கட்டி சாமியை குடியேற்றியவர் என்றுசைவ சமய நம்பிக்கை.

10 comments:

S.A. நவாஸுதீன் said...
This comment has been removed by the author.
மயாதி said...

S.A. நவாஸுதீன் said...
//தாஜ்மகால் என்றாலே எனக்கு ஒரு தமிழ் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

"ஆம்பளைதான் தாஜ்மகால் கட்டி வச்சாண்டா
எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா"//


இதற்கு என்னைவிட தமிழரசி அக்கா பதில் சொன்னா நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்...
அங்கேயே கேட்டு பதில் சொல்லி விடுகிறேன் அண்ணா.

S.A. நவாஸுதீன் said...

தமிழுக்கு பயந்துதான் உடனே Delete பண்ணிட்டேன். ஹா ஹா ஹா

S.A. நவாஸுதீன் said...

அத நீங்க இவ்ளோ சீக்கிரம்
Copy/Paste பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலப்பா

S.A. நவாஸுதீன் said...

அத நீங்க இவ்ளோ சீக்கிரம்
Copy/Paste பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலப்பா. செமையா மாட்டிவிட்டுட்டீகளே.ஹா ஹா ஹா

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

அத நீங்க இவ்ளோ சீக்கிரம்
Copy/Paste பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கலப்பா. செமையா மாட்டிவிட்டுட்டீகளே.ஹா ஹா ஹா//

கொஞ்சம் பொறுங்க அண்ணா நாங்களும் துணைக்கு இருக்கம் தானே.
அக்கா வந்து என்னதான் சொல்லுறா பார்ப்பமே?

Anonymous said...

நவாஸ்..ஆம்பள கட்டிவெச்சான் பொம்பளை கட்டவெச்சா....
ஹஹஹஹ்ஹ

பெரிசா வித்தியாசம் இல்லை....ட டி தான்....

ஹஹஹஹஹ....

ஆனால் அந்த ஆண் காதலிக்கலைன்னா எந்த அழகுக்குமே அழகில்லை.......

Anonymous said...

ஹப்பாடா தம்பியையும் காப்பாத்தியாச்சி.....

ஃப்ரண்ட் கிட்டயும் நல்லப் பேரு வாங்கியாச்சு.....

escape தமிழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்

மயாதி said...

வந்துட்டீங்களா அக்கா! நன்றி அக்கா ..
உங்களுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு? இருந்தாலும் இந்த நவாஸ் அண்ணாதான் உங்கள பார்த்து சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு பயப்படுகிறார்...
ஹா ஹா ஹா....

Anonymous said...

http://ezhuthoosai.blogspot.com/2009/04/blog-post_29.html#comments

hey intha page paruppa ithuvum tajmahal kavithai thaan.....