5.31.2009

கொஞ்சும் கவிதை நிறைய காதல் ..

வைத்தியர்
சொன்னார்
என் இதயத்தில்
ஓட்டையாம்..
ஐயோ !
நீ
வீழ்ந்து விடப்
போகிறாயே...


கொலுசு ...
கால்தடம்...
நீ குப்பை
கொட்டும்
குப்பைத்தொட்டி...
இப்படி
எல்லாவற்றையும்
பேசப் பழக்கிய
நீ
எப்போது
பேசப் போகிறாய் !


நீ நட்ட
ரோஜா செடி
பூ
பூக்கும்
முன்னமே
பூக்கத்தொடங்கி
விட்டது
கவிதைகளை


நிலாவில்
ஒட்சிசன்
தேவையில்லை ...
எனக்கு
நீ
உனக்கு
நான்
போதும் ...
வா
குடியேறுவோம்


செருப்பு
சீப்பு
மட்டுமல்ல
கடிகாரம் கூட
கடிக்கிறது
உனக்காக
காத்திருக்கும்
போது


இரவில்
அண்ணாந்து
வானம்
பார்க்க
பிடிக்கவில்லை
ஒரு
நட்சத்திரம் கூட
உன்னைப்போல
அழகாய்
இல்லை...


அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்


23 comments:

sakthi said...

வைத்தியர்
சொன்னார்
என் இதயத்தில்
ஓட்டையாம்..
ஐயோ !
நீ
வீழ்ந்து விடப்
போகிறாயே...

யப்பா சூப்பர்ப்

sakthi said...

இரவில்
அண்ணாந்து
வானம்
பார்க்க
பிடிக்கவில்லை
ஒரு
நட்சத்திரம் கூட
உன்னைப்போல
அழகாய்
இல்லை...

அருமை

sakthi said...

அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்

அழகு

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்//

//நீ நட்ட
ரோஜா செடி
பூ
பூக்கும்
முன்னமே
பூக்கத்தொடங்கி
விட்டது
கவிதைகளை
//

இவையிரண்டும் என்னைக் கவர்ந்தன.

-ப்ரியமுடன்
சேரல்

மயாதி said...

வீட்டுக்கு வரும் போது வெறும் கையோடு வராமல் வாழ்த்தோடு வாறீங்க பாருங்க அங்கதான் இன்னும் தமிழன் உயிர் வாழுறான்...
நன்றிகள் சேரல் மற்றும் ஷக்தி ...

S.A. நவாஸுதீன் said...

வைத்தியர்
சொன்னார்
என் இதயத்தில்
ஓட்டையாம்..
ஐயோ !
நீ
வீழ்ந்து விடப்
போகிறாயே...

மயாதி, வரிகளில் நான் விழுந்துட்டேங்க. சூப்பர்

S.A. நவாஸுதீன் said...

கொலுசு ...
கால்தடம்...
நீ குப்பை
கொட்டும்
குப்பைத்தொட்டி...
இப்படி
எல்லாவற்றையும்
பேசப் பழக்கிய
நீ
எப்போது
பேசப் போகிறாய் !

அழகிய கொஞ்சல்

S.A. நவாஸுதீன் said...

நீ நட்ட
ரோஜா செடி
பூ
பூக்கும்
முன்னமே
பூக்கத்தொடங்கி
விட்டது
கவிதைகளை

காதலும் பூத்துக் குலுங்குகிறது உங்கள் வரிகளில்

S.A. நவாஸுதீன் said...

செருப்பு
சீப்பு
மட்டுமல்ல
கடிகாரம் கூட
கடிக்கிறது
உனக்காக
காத்திருக்கும்
போது

அசத்தல்

S.A. நவாஸுதீன் said...

அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்

போஸ்ட்மேன்கிட்ட உஷாரா இருக்கணும்னு அர்த்தம்.

மயாதி said...

என்ன S.A. நவாஸுதீன் என்னை விட நீங்க ரொம்ப அதிகமாக பாதிக்கபட்டிருக்கிங்க போல..?
சரி சரி நல்லது நடக்கும்.
சும்மா ஒரு கடிக்கு சொன்னன் சீரியஸ் ஆகாதிங்க ...

தொடர்ந்தும் உங்கள் வாழ்த்துக்கள் என்னை வளப்படுத்தட்டும் நண்பா....

நட்புடன் ஜமால் said...

\\எல்லாவற்றையும்
பேசப் பழக்கிய
நீ
எப்போது
பேசப் போகிறாய் !\\

மிகவும் இரசித்தேன்

geevanathy said...

அருமையாக இருக்கிறது மயாதி


////நீ நட்ட
ரோஜா செடி
பூ
பூக்கும்
முன்னமே
பூக்கத்தொடங்கி
விட்டது
கவிதைகளை///


உங்கள் தோட்டத்தில் நிறையவே பூத்திருக்கிறது ரோஜாக்கள் கவிதைகளாக வண்ணத்துப் பூச்சிகளுக்கு கொண்டாட்டம்தான்......

நட்புடன் ஜமால் said...

\\எல்லாவற்றையும்
பேசப் பழக்கிய
நீ
எப்போது
பேசப் போகிறாய் !\\


அருமை.

மயாதி said...

நன்றி ஜீவா அண்ணா மற்றும் ஜமால் அண்ணா ..

ப்ரியமுடன் வசந்த் said...

//அழகி
என்று
மட்டுமே
முகவரியிடப்பட்ட
கடிதங்களையும்
உன்வீட்டில்
சேர்த்து
விடுகிறான்
தபால்காரன்//

தபூசங்கர் பாதிப்பு.......

மயாதி said...

ohh

மயாதி said...
This comment has been removed by the author.
ப்ரியமுடன் வசந்த் said...

பாதிப்புன்னுதான் சொன்னேன் பதிப்புன்னு சொல்லல்யே........

மத்தபடி நல்லாயிருக்குங்க கவிதை

இதுமாதிரியே எழுதுங்க.....

இது மாதிரி கவிதைகள் காதலர்களுக்கு மிகவும் பிடிக்கும் என எண்ணுகிறேன்

பதிவினிது said...

ரசிக்கத்தகுந்த ரசனை மிகுந்த கவிதைகள்.

Anonymous said...

அசத்தல் அனைத்து கவிதைகளும்......அப்பப்பா காதல் எதையெல்லாம் பேசவைக்கிறது...காதல் அழவைத்தாலும் அழகான விஷயம் தாங்க......

மயாதி said...

நன்றி பதிவினிது,
எப்படி இப்படி பெயர் எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க ?

மயாதி said...

அழ வைப்பதுதானே இந்த காதலின் முக்கிய வேலையே..
நன்றி தமிழரசி.