5.03.2009

(அ)தர்மம்

கோயில்
வாசல் முன்
பிச்சைக்காரன்
மற்றும்
கோயில் உண்டியல்


பணம்
போடப்படுகிறது
அவன்
தட்டிலும்
உண்டியலிலும்


கோயில்
பெரிதாக
கட்டப்பட்டுக்
கொண்டேயிருக்கிறது
அவன்
இன்னும்
கட்டத்தொடங்கவேயில்லை
தன்
வீட்டை

No comments: