5.05.2009

கொஞ்ச(சு)ம் கவிதை! நிறைய காதல் ..

மன்னித்துவிடு
உன்னைக்
கேட்காமலேயே
உன்னை
பாவித்து
விடுகிறேன்
என்
கவிதைகளுக்காக...


கறுப்புப்
பூனை
கடந்து
போனதால்
பயந்து கொண்டே
பயணத்தைத்
தொடங்கினேன் ...
இடையில்
உன்னைக்
கண்டேன் ...
யார்
சொன்னது
கறுப்புப்
பூனை
கெட்ட
சகுனம்
என்று ...




தற்கொலை
செய்வதற்காக
இருவரும்
விஷம்
குடித்து
நீண்ட
நாட்களாகி
விட்டது...
இன்னும்
இறக்கவில்லை

நீ
தந்தது
எப்படி
விஷமாகும்!



மற்றப்பெண்களைப்
போலல்ல...
உன்னால்
எந்த
ரகசியத்தையும்
காப்பாற்ற
முடியாது!

நீ
பேசுவது
வாயால்
மட்டுமில்லை...



நீ
ஓடி வருவதை
பார்த்ததும்
என்
மூச்சையெல்லாம்
சேமிக்கத்
தொடங்கிவிட்டேன்...

ஓடி
வந்த
களைப்பில்
நீ
மூச்சு
வாங்கும்போது
தரவேண்டுமல்லவா!




ஒவ்வொரு
அழகான
பெண்ணைப்
பார்க்கும்
போதும்
இவளைவிட
அழகானவள்
கிடைப்பாளென
இலகுவாக
தப்பித்துக்கொல்லும்
எனக்கு
உன்னைப்
பார்க்கும்போது
மட்டும்
அப்படி
முடிவதில்லை...




நீ வரும்
வரை
உனக்காக...
காத்திருக்கிறேன்
நீ வ்ந்த
பிறகும்
காத்திருக்கிறேன்
முத்தத்திற்காக...

1 comment:

Paheerathan said...

/*
மன்னித்துவிடு
உன்னைக்
கேட்காமலேயே
உன்னை
பாவித்து
விடுகிறேன்
என்
கவிதைகளுக்காக...
*/


யாருடா அது?