5.12.2009

சில நிஜங்கள் .....

பக்கத்து வீட்டுப்
பிள்ளை
பசியில்
அழும் சத்தம்
கேட்டும் ...
மிஞ்சிய
சோற்றை
குளிர்சாதனப்பெட்டியில்
சேமித்துவிட்டு
கோயிலுக்குப்
போகிறார்கள்
மனிதர்கள்...


வீட்டில் ....
மனிதர்களும்
வளர்ப்பு நாயும்!
புதுச்சோறு
சாப்பிட....
பழைய சோறு
பத்திரமாய்
இருக்கிறது
வரப்போகும்
பிச்சைக்காரனை
எதிர்பார்த்து ....


அளவுக்கதிகமான
அலங்காரத்தில்
அவர்களை
அழகுபடுத்தி ...
வாழ்க்கையை
அசிங்கமாக்கி
விடுகிறார்கள்
மனிதர்கள் ....

மனிதனை விட
கேவலமான
மிருகம் இல்லை
அதுதான்
மிருகத்தை
வதை செய்வதாய்
மனிதனை
கைது
செய்யும்
சட்டம்
மனிதனை
வதை செய்வதாய்
எந்த
மிருகத்தையும்
கைது
செய்வதில்லை


தன்னை
நல்லவனாக
காட்டிக்கொள்ள
ஒவ்வொரு
மனிதனும்
நிறைய
கெட்ட வேலைகள்
செய்யவேண்டியிருக்கிறது ....

1 comment:

தமிழ் said...

உண்மை தான்