10.08.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

நான்
பிறந்ததைத்தான்
ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியவில்லை
மரணத்தையாவது
ஞாபகம்
வைத்துக்கொள்ள
வேண்டும்...

இல்லாவிட்டால்
அடுத்தபிறப்பில்
மீண்டும்
முதலிலிருந்து
வாழ்ப்பழக
வேண்டுமே!


....................................................

எனக்குமுன்னமே
நான்
பிறந்திருந்தால்
ஒருவேளை
இந்நேரமாவது
என்னைத்
தெரிந்து
கொண்டிருக்கலாமோ?

...................................................

ஊர்வலம்
கோயிலை
நெருங்க நெருங்க
சாமிக்குக்
கிலி பிடித்தது
ஐயோ
மீண்டும்
கோயிலுக்குள்
அடைத்துவிடப்
போகிறார்களே

........................................

இறந்தவரின்
சொந்தக்காரர்களையே
கோயிலுக்குப்
போக
வேண்டாம்
என்கிறார்கள்
அப்போ
இறந்தவர்
கட்டாயம்
சாமி
இல்லாத
நரகத்துக்குத்தான்
போவாரோ!


0 கருத்துக்கள்: