10.04.2010

மௌனம்



நீண்டநாளாய்
ஒருவார்த்தையைத்
தொலைத்துவிட்டு
தேடியலைந்தேன்...

எங்கெல்லாம்
தேடியும்
கிடைக்காத
அந்த
வார்த்தையை
இறுதியில்
உன்
மௌனத்தில்
கண்டுபிடித்தேன்...

இன்னும்
எனது
வார்த்தையை
பேசிவிடாமல்
கவனமாகப்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய்

உன்
மௌனம்
என் மீதான
அக்கறை...

................................................

பேசும்போது
ஒரு
அர்த்தம்தான்
கிடைக்கிறது
பேசாமல்
இருக்கும்போதுதான்
நிறைய
அர்த்தங்கள்
கிடைக்கின்றன
வார்த்தைகளுக்கு...

No comments: