10.06.2010

உன் வெட்கம் பேசுகிறது





வெட்கம்
இதுவரை
கவிஞர்களுக்கு
மட்டுமே
பயன்பட்டது
நீ
வெட்கப்படும்போதுதான்
முதன்முதலாய்
வெட்கப்படுவதற்கும்
பயன்படுகிறது


உன் பிறந்தநாளை
மட்டும்
பத்திரப்படுத்திவிடத்
துடிக்கிறது
கலண்டர்...

நீ
பிறக்காத
364 நாட்களையும்
தண்டிக்கிறது
காலம்.

உனக்காகக்
காத்திருக்கும்போது
என்
கடிகாரத்திற்கும்
கண்முளைக்கிறது

நீ வந்து
பேசப்போகிற
வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறது
தமிழ்


நீ
வந்தாலும்
ஏதும்
பேசப்போவதில்லை...
இருந்தாலும்
நீ கடந்துபோகிற
கணங்கள்
கவிதையாகிப்போகும்

அழகிப்போட்டியில்
வெறும்
அழகிகள் மட்டுமே
இருக்கிறார்கள்
உன்னில்
மட்டும்தான்
அழகே
இருக்கிறது

உனக்காகக்
காத்திருக்கும்
பொழுதுகளில்
நீ
வராவிட்டாலும்
எப்படியோ
வார்த்தைகளை
அனுப்பிவிடுகிறாய்
என்
கவிதைகளுக்கு

நீ
பேசப்பேசத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்வருகிறது
தமிழுக்கும்
எனக்கும்

உன்னைபார்க்கும்வரை
வாழவதற்கென
இருந்தவாழ்க்கை
இப்போது
காதலிப்பதற்கென
மாறிவிட்டது


நல்லவேளை
உன்னைப்
பார்த்துவிட்டேன்
இல்லாவிட்டால்
உலகம் என்ற
சின்ன
இடத்திலேயே என்
வாழ்க்கை
முடிந்துபோயிருக்கும்....

என்
கல்லறையின்
வாசகமாக
உன் மௌனத்தை
எழுதவேண்டும்

எதற்காக
என்னைக்
காதலிக்கிறீர்கள்
என்று
கேட்கிறாய்...
வாழவதற்காக!



2 comments:

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க..

மயாதி said...

"உழவன்" "Uzhavan" said...
நல்லாருக்குங்க..

October 7, 2010 4:12 அம//



நன்றிங்க