1.31.2010

அனுதாபம்

பக்கத்து
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது

No comments: