10.16.2009

பிணத்தோடு உறவு கொண்டுவிட்டு......

1.
ஒரு மணிநேரம்தான்
பேரம்.
அந்த ஒரு
மணிநேரம்
தற்காலிகமாக
செத்துப்போனாள்!
பிணத்தோடு
உறவுகொண்டுவிட்டு
பணத்தைக்
கொடுத்துவிட்டு
புறப்பட்டான்....
போனதும்
அவள்
அவசரமாய்
உயிர்த்தெழுந்தாள் ...
பசியோடு
வீட்டில்
பலபேர்.



************************************

2.

முடிந்து
போய் விட்டாள்.
கொடுத்த
பணத்திற்கான
இன்பம்
இப்போது
அவனிடம்
இல்லை.


*********************************

3.

சின்ன வீட்டுக்கு
இல்லை
ஒரு வீடு

6 comments:

Rekha raghavan said...

மூன்று கவிதைகளும் அருமை. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.
http://anbesivam2009.blogspot.com/

Anonymous said...

கவிதைகள் பாராட்டப்பட வேண்டியவையா யோசிக்கபட வேண்டியவையா? எத்தனை பொருள் கூறுகிறது இந்த சில வரிகள்...

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமை.

வால்பையன் said...

யோசிக்க வைக்கும் கவிதைகள்!

Anonymous said...

supper

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சூப்பர் மயாதி.கவிதை சிந்திக்க வைக்கிறது.