10.14.2009

ஒரு குழந்தையை சந்தோசப்படுத்த வாருங்கள்

ஆபத்து வந்தாலோ அல்லது தாங்க முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ `` கடவுளே என்றுதான் ஆத்திகர்கள் அழைப்பார்கள். நாத்திகர்கள் எப்படி அழைப்பார்கள்? நானும் கடவுளைத்தான் துணைக்கழைப்பது வழக்கம். ஆனாலும் சிலவேளைகளில் கடவுளோடு ஆத்திரம் ஏற்படும் பொழுதுகளில், என்னடா இந்தக்கடவுள் என்று அழுத்துக் கொள்ளும் பொழுதுகளில் உதவியாக இருக்குமே , அதுதான் கேட்கிறேன் என் நாத்திக நண்பர்களே !
ஆபத்து வேளைகளில் யாரை அழைக்கிறீர்கள்.

..........................................................................................................................................................................
கடவுளும் சாதாரண மனிதர்களைப்போல தவறு விடுகிறானே என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

ஒரு குழந்தை வயது வெறும் 12 .
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை சாதாரண ஒரு பிள்ளையாக , சுட்டியாக இருந்தது. திடீரென தன் கேட்கும் திறனை இழந்தது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வைத்தியர்களுக்கே சவாலாக அமைந்தது அந்தக் குழந்தையின் நோய்.

என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தர்கள், குழந்தையோ கொஞ்சம் கொஞ்சமாக தன் புலன்களை இழந்தது.கேட்கும் திறனைத்தொடர்ந்து பார்க்கும் திறனும் குறையத் தொடங்கியது.

அப்போதுதான் குழந்தைக்கு உலகத்திலேயே வெறும் சில நூறு பேர்களுக்கே ஏற்பட்டு இருக்கும் ஒரு அரிதான நோய் ஏற்பட்டு இருப்பதை வைத்தியர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். இருந்தும் என்ன பயன் எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத அந்த நோய் குழந்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொள்வதை கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இங்கே கடவுள் யாரைத் தண்டிக்கிறான்

அந்தக் குழந்தையையா?

அந்தக் குழந்தையின் உறவினர்களையா?

யாரென்றே தெரியாத அந்தக் குழந்தைக்காக கவலைப் படும் உங்களையா?

*******************************************************************************

சில காலங்களுக்கு முன் ஓடியாடித்திரிந்த அந்தக் குழந்தை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தன் திறன்களை இழந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் தன் உணவை விழுங்கும் திறனையும் இழந்து போனது. பசித்தால் வாய்திறந்து சொல்ல முடியாது, வயிற்றைத் தட்டிக் காட்டும். வாயினால் விழுங்க முடியாது, மூக்கின் ஊடாக வயிற்றுக்குள் செலுத்தப்பட்டிருக்கும் ஒரு குழாயின் ஊடாக திரவ சாப்பாடுகளை மட்டுமே வழங்க முடியும் .

மூக்கின் உள்ளே ஒரு தும்பு போனாலே படும் அவஸ்தைகள் நாம் அறிவோம். இந்தக்க் குழந்தைக்கோ மூக்கின் ஊடான ஒரு தடித்த குழாய்தான் சாப்பாடு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று வயிற்றின் ஊடாக ஒரு குழாயை செலுத்தி நிரந்தரமாக அக்குழாயின் ஊடாக சாப்பாடு வழங்குவதற்கான ஒரு சத்திர சிகிச்சை நடைபெறப்போகிறது.

அதற்கு முன்பு, நேற்று அந்தக் குழந்தை தன் குறைந்து போன பார்வைப்புலத்தோடு வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.

இதை நான் இன்டர் நெட்டில் போடவா எல்லோரும் பார்ப்பார்கள் என்று எழுத்தின் மூலமாக கேட்டேன் . அந்த நேரத்தில் பூரிப்படைந்த அந்த பிஞ்சு மனசு உடனடியாக மேலும் மூன்று படங்களை வரைந்து கொடுத்தது சில மணி நேரங்களில். அப்போது அந்தப் படங்கள் அழகாக இருக்கிறது என்று சைகையிலே சொன்னேன் , தன் நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாத அந்தப் பிள்ளை அந்தப் படங்களை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டது .

அந்தப் படங்களை நீங்களும் பாருங்கள். அழகாக இருக்கிறது என்று ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள். சத்திர சிகிச்சை முடிந்து வலியோடு வருகின்ற அந்த குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் ஒரு துளி சந்தோசத்தையாவ்து கொடுக்கும்.

அந்தக் குழந்தையால் தமிழை வாசிக்க முடியாது, ஆகவே தயவு செய்து ஆங்கிலத்திலே சிறு குறிப்பாக இந்த ஓவியங்கள் ``அழகாக இருக்கிறது `` போன்று சிறிய வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போங்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு அந்தக் குழந்தையால் பார்க்க முடியும் என்று சொல்ல முடியாது , அதுவரை அது இப்படி சந்தோசம் தரும் சிறு சிறு விடயங்களையாவது பார்க்கட்டும்.

அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையின் உறவினர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் ஒரு துளி சந்தோசத்தையாவது கொடுக்கும்.

















20 comments:

Anonymous said...

The pictures are not only wonderful but beautiful like the person who draw. Keep up the good work.

தருமி said...

LOVELY PICTURES. GREAT.

Robin said...

Very beutiful pictures.

May God heals that baby.

கவி அழகன் said...

உள்ளத்தை உருக்கிவிடது

அன்புடன் அருணா said...

Superb drawings kuttimmaa!
My wishes for your speedy recovery.

அன்புடன் அருணா said...

Draw more pictures dear.....

S.A. நவாஸுதீன் said...

The Sweet girl who sketched those drawings should be an Angel. Draw more like this sweetie.

S.A. நவாஸுதீன் said...

Excellent Drawings. I love it

தீப்பெட்டி said...

I LOVE THOSE PICTURES..
REALLY SUPERB..
DRAW MORE FOR ME

தகடூர் கோபி(Gopi) said...

Wonderful drawings!!!

Especially in the Pet dog drawing, I like the brown shades in the front leg, body and ears. That shows the depth of the drawing skill the kid has.

Very very nice!!!!

Keep it up and keep drawing. You will do even more wonderful drawings.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Your pictures are great. Well done.
My prayers are with you.

Arunkumar Selvam said...

Nice pictures!. May the Almighty give him/her all the power back.

//Arun

Anonymous said...

i love your picture my dear.....
and i love you too... keep up

Anonymous said...

Hi puppy'ma...all pictures are really very cute...like you

மயாதி said...

வாழ்த்துச் சொன்ன நல்ல உள்ளங்களுக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!

துளசி said...

beautiful Pictures baby. Your drawings made me happy.

Ranjith said...

The pictures are really nice..That bay ll become a very good artist like RAVI VARMA>> all the best

Anonymous said...

your pictures are really nice ya... my hearty wishes u will have a long, prosperous and happiest life.. take care

SUFFIX said...

She is blessed with brilliant talents, Kudos to her!! We should appreciate her courage and have such an interest to draw beautiful drawings. May God bless her and the parents.