10.03.2009

அழகு நிரம்பி வழிகிறது கவிதையாய்...

அழகு
நிரம்பி
வழிகிறது
கவிதையாய்...

நீ என்ன
அழகின்
அட்சய பாத்திரமா
இத்தனை
கவிதைகள்
நிரம்பி
வழிகிறதே....

மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....



தெரியாத
தூரத்தில்
நீ இருந்தாலும்
தெரிவித்து
விடுகின்றன
கவிதைகள்....

என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...








9 comments:

Kavinaya said...

//என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...//

ச்வீட்! :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...//

அருமையான பதிவு

வாழ்தல் வேறு, காதல் வேறு

S.A. நவாஸுதீன் said...

என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...

க்ளாஸ் மயாதி

ஷாகுல் said...

கவிதை நல்ல இருக்குங்க!

ஏன் நீங்கள் இப்போதெல்லாம் அதிகமாக எழுதுவது இல்லை.

sakthi said...

மயிலிறகு
குட்டி போடுகிறதோ
இல்லையோ
உன் நினைவுகள்
குட்டி போடுகின்றன
கவிதைகளாக....

nice lines

அன்புடன் அருணா said...

கலக்கல்ஸ் மயாதி!

Anonymous said...

நம்
// பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...//

இதான் காதலின் சிறப்பு

இன்னும் என் பிறந்த நாள் கவிதைக்கு உனக்கு நான் நன்றி சொல்லவில்லை

மயாதி said...

நன்றி

கவிநயா
சுரேஷ்
ஷகுல்
நவாஸ் அண்ணா
ஷக்தி
தமிழரசி அக்கா
அருணா

அன்புடன் நான் said...

என் பிறப்புக்கும்
இறப்புக்கும்
இடையே
வாழ்தல்
இருக்கிறதோ
இல்லையோ
காதல்
இருக்கிறது...//

மிக‌ அருமை.