11.23.2009

தலைப்பை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்

தீ
சாப்பிட்டுக்
கொண்டிருந்தது
மெழுகுவர்த்தியை...

எவரின்
உதவியும்
இல்லாததால்
தன்னைத்தானே
அழித்து
திரியை
சின்னதாக்கி
தீயோடு
சண்டை
போட்டுக்கொண்டிருந்தது
மெழுகுவர்த்தி

கடைசியில்
மெழுகுவர்த்தி
வென்று விடும்
தீ
செத்துவிடும்

மெழுகுவர்த்தியின்
இறந்துபோன
எச்சங்களாவது
கிடக்கும்
சிதறல்களாக

எச்சமே
இல்லாமல்
இறந்து போயிருக்கும்
தீ.......

3 comments:

S.A. நவாஸுதீன் said...

”தீ”ர்ந்தது

அன்புடன் அருணா said...

அட! பூங்கொத்து!

ஷாகுல் said...

கவிதை நல்லாருக்கு