11.22.2009

பசியின் சிதறல்கள்

எனக்குப்
பசியில்லாததால்
பழுதாகிக்
கொண்டிருந்தது
பையிலிருந்த
சாப்பாடு...
பக்கத்திலிருப்பவனுக்கோ
பசி


*********************************

குழந்தையின்
பசியைப் போக்க
அம்மா பால்
கொடுத்தாள்
அம்மாவின்
பசியைப் போக்க
குழந்தை
சிரித்தது....

*************************
பசியை
வெளிப்படுத்தும்
குழந்தையின்
மொழி
அழுகை

மனிதனுக்கு
அழக் கற்றுக்
கற்றுக்
கொடுகிறது
பசி

அதுதான்
சிரிக்கும்
விலங்கு
மனிதன்
என்றாலும்
எல்லா
மனிதர்களாலும்
சிரிக்க
முடியாது
ஆனால்
அழ முடியும்..


*******************************

முகூர்த்த
நேரத்திற்காக
ஆவலோடு
காத்திருந்தார்கள்
தாலி
கட்டும்போது
வாழ்த்துவதற்காகல்ல
அதற்குப்பிறகுதான்
சாப்பாடு


***************************

1 comment:

இளவட்டம் said...

முதல் கவிதை அருமை.