11.18.2009

ஒரு காதல் கவிதை

உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...


......................................

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !

**********************

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......

***********************


நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது


***********************

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...


**********************



4 comments:

Anonymous said...

காதல் கசிந்து உருகுகிறது கவிதையில்...

S.A. நவாஸுதீன் said...

அனைத்தும் அருமை

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு பாஸ்.

அன்புடன் நான் said...

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது//

சிந்த‌னை மிக‌ அருமைங்க‌....... ந‌ல்லா தூங்குங்க‌!