2.25.2010

இரண்டுவரிக் கதை ( அல்லது எதோ என்று? )

தந்திரம்

பயந்தோடுவதாய் ஆவியைப் பார்த்துச் சிரித்தது
நெருப்பு- ஆவி ஒடுங்கி நீராகும்வரை...



ஆண்டு 2025

குடித்துக் குடித்தே வாழ்ந்தவன்
செத்துப்போனான் குடிக்க நீரில்லாமல்.


திருமணம்

?
முதிர்கன்னி



தண்டனை

கண்ணாடி பார்க்கும்போதெல்லாம் ஞாபகப்படுத்துகிறது
நெற்றி ! இறந்து போனவனை.




பசி

அம்மா தாயென்று எல்லோரையும் அழைக்கும்
உரிமை அனாதைக்கும் கிடைத்தது பிச்சையேடுக்கும்போது



பூச்சாண்டி

சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை
அதற்குப்பின்னும் சாட்சி கேட்டார் நீதிபதி



பசி

வெறுமையான வயிறு நிரம்ப
பசி


இப்படியானதொரு முன்னைய எனது பதிவு..


வரிக்கதை

தலைப்பு - கைபேசி
கதை- இருந்தும் என்ன பயன் நீ பேசாமல் .

தலைப்பு - நிஜம்
கதை - யாவும் கற்பனை சில கதைகளின் முடிவில்

தலைப்பு- மூன்று பொய்
கதை- நான் சொல்லுவதெல்லாம் உண்மை நீதிமன்றத்தில்

தலைப்பு-இரு சொல் கதை
கதை- கற்பனை செய்துகொள்

தலைப்பு - ஜனநாயகம்
கதை- எல்லோரும் பேசலாம் எழுதிக்கொடுபபத்தை மட்டும்

தலைப்பு- கலர் டீ வி
கதை - ஓட்டுக்கு லஞ்சம்

தலைப்பு- ஒருசொல் கதை
கதை- முற்றும்





4 comments:

மதுரை சரவணன் said...

arumai.

thiyaa said...

நல்லாருக்கு

தமிழ் said...

அருமை

தமிழ் said...

அத்தனையும் அற்புதம் நண்பரே

வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்