1.13.2013

ரிஷானா ! மார்க்கத்தின் தண்டையா? மூர்க்கத்தின் தண்டனையா?


ரிஷானா !
உனக்காக ஒரு சில நிமிடங்கள் மௌன அஞ்சலியோ அல்லது ஒரு
இரங்கல் கடிதமோ /கவிதையோ எழுதிவிட்டு சாதாரண வேலையை
தொடரும் சாமான்னியந்தான் நான். இருந்தாலும் என்ன செய்ய
அது எங்கள் இயலாமையின் உச்சக்கட்டம் .

கடவுள் என்பது மூட நம்பிக்கையில்லை ஆனாலும் மனிதனை மூடனாக்கும்
கடவுள் என்பது மூட நம்பிக்கைதான்.

இன்று அரபு தேசம் தங்கள் கடவுள் நம்பிக்கையின் உக்கிரத்தை வெளி உலகுக்குக்
காட்ட உன் உயிரைப் பறித்தெ டுத்திருக்கின்றது .

  அப்போது உனக்கு வயது பதினேழு தானாம். 19வயதுக்கு முன்பு குழந்தை பெற்றுக்
 கொள்வது உகந்ததல்ல என்று மருத்துவம் கூறுகின்றது.அவ்வாறு ஒரு பெண்
அதற்கு முன்பு கருத்தரித்தால் அது ஆபத்துக் கூடிய கருவாகக் கருவாகக் கருதப்பட்டு
விஷேட கவனம் செலுத்துவது மருத்துவத்தின் வழக்கமாகும்.

அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அந்த வயதில் ஒரு குழந்தையை
கவனிக்கும் அளவுக்கு ஒரு பெண் முதிர்ச்சி நிலையை அடைந்து விடவில்லை
என்பதுமாகும்.


 ஆக அப்போது உன் வயது , உனக்கு சொந்தமாகப் பிறந்த குழந்தையைக் கூட
கவனிக்க முடியாத வயது.
வீட்டு வேலைக்கு எனச் சென்ற உன்னை , வீட்டு வேலை (கழுவுதல் /சமையல்) என்று
அனைத்து வேலைகளுடனும் மூன்று குழந்தைகளையும் பார்க்கச் சொல்லிச் சொன்ன
அந்தத் எஜமானிதான் அந்தக் குழந்தையின் இறப்புக்குக் காரணம்.

வீட்டு வேலைக்கென அழைத்து இப்படி அடிமை போல வேலை கொடுப்பதற்கு ஷா ரி யா
சட்டத்தில் எந்த தண்டனையும் இல்லையா?

என்ன செய்ய றிஷானா ?
ஷாரியா மட்டுமல்ல  எந்தச் சட்டமும் இப்போது அதிகார வர்கத்தின் இருப்புக்காகவே
மாற்றிய மைக்கப் படுவதே வழக்காகிப்போனது.


உன் மார்க்கத்தின் மீது உன் சகோதரர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு கண்டு
வியக்கின்றேன். உங்கள் சகோதரர்களில் ஒருவன் சொல்லுகின்றான்
உங்கள் மார்க்கத்தின் படி ஒரு பெண் தனியே வெளிநாடு செல்வது தண்டனைக்குரிய
குற்றமாம் .அதற்கான தண்டனை இந்த உலகத்தில் அல்லாவிட்டாலும் மேல் உலகத்திலாவது
கிடைக்குமாம். நான் நினைக்கின்றேன் இன்னும் உன் சகோதரர்கள் நீ வெளிநாட்டுக்கு சுற்றுலா
செல்வதற்காக சென்றதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல?

போஸ்ட் மாட்டர்ம் கூட செய்யாமல் கொலையை தீர்மானிக்கும் ஒரு  பிற்போக்கான
சமூகத்தில் நீ வாழ நேர்ந்தது உன் கொடுமைதான். இருந்தாலும் உன் சகோதர்களில் ஒருவன்
கடவுளிடம் நல்ல பெயர் எடுக்க ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறி உன்னைக் கொலை
காரியாக சித்தரிக்க முயல்கின்றான்.
அதற்கு அவன் கூறிய காரணமானது நீ கொடுத்த பாலிலே கண்ணாடித் துகள்களை அரைத்துக் கொடுத்தாயாம்?

அவர் ஒரு மருத்துவ மாணவராம். பாவம்! அவர் milk aspiration காரணமாக எத்தனையோ குழந்தைகளின் இறப்பை
பார்க்க வேண்டி வரும் .அப்போதெல்லாம் அந்த குழந்தைகளின் தாய் எல்லோரையும் கொலைகாரி
என்றுதானே அவர் முத்திரை குத்துவார்.
 மருத்துவ பீட குழந்தை நல பிரிவு போதனையாளர்கள் இது பற்றி கொஞ்சம் கவனமெடுப்பது நன்று.

றிஷானா ! இறுதியாக இன்று வாசித்த செய்தி இன்னும் என்னை கலங்க வைத்தது.
இதுவரைகாலமும் கொலை காரர்கள் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த உன் அம்மாவே
இன்று உன் தண்டனையை ஏற்றுக் கொள்வதாக கூறி உன்னைக் கொலை காரியாக்கி இருக்கிறார்..
அவரின் இந்தத் திடீர் மாற்றம் ,மார்க்கப் பற்று எதற்காக? இதுவரை காலமும் தன குழந்தை தப்பே
செய்திருக்க மாட்டாள் என்று சொன்ன தாய் திடீரென உன்னை கொலை காரி என்று கூற என்ன காரணம்?

ஆக  றிஷானா!
நீ இருந்த போதும் ஏமாற்றப்பட்டு விட்டாய்
இறந்தபோதும் ஏமாற்றப்பட்டு விட்டாய்
உன் சகோதரர்களும் ,உறவினர்களுமே உன்னைக் கொலை காரியாக முத்திரை குத்தும்
போது  எங்களால் என்ன செய்ய முடியும்?

ஆனால் எங்களுக்காக உன்னிடம் ஒன்று கேட்கின்றேன்!
எல்லாம் வல்ல உன் இறைவனை சந்திக்க நேர்ந்தால் , உன் சகோதரர்களுக்கு நல்ல அறிவை
வழங்கும்படி வேண்டிக்கொள் .


1 comment:

வேகநரி said...

அரேபிய மத கொடுமையையால் கொலைசெய்யபட்ட ரிஷானா பற்றி சிறப்பான பதிவு.