வயதுக்கு வர முன்
அம்மாவும் அப்பாவும்தான்
என்னைக் கவனித்துக்
கொள்வார்கள்
நான் வயதுக்கு
வந்ததை ஊருக்கே
சொல்லிக் கொண்டாடினார்கள்
சந்தோஷோசமாகவே
இருந்தது
என்னோடு சிறு
வயதிலிருந்தே
விளையாடும் பக்கத்து
வீட்டுப் பையனோடு
பேசிக்கொண்டே பள்ளிக்குப்
போகும்போது
எனக்கு யாரென்றே
தெரியாத ஒருவர்
`பாரு வயசுக்கு வந்த
பொண்ணு வெட்கமேயில்லாமல்
ஒரு பையனோடு
கதைத்துக் கொண்டு
போறதை `என்று
சொல்லிக்கொண்டு
போனார் ....
இப்போது
அம்மா அப்பாவோடு
ஊரும் என்னை
கவனித்துக்
கொள்ளுக்கிறது
இதற்குத்தான்
ஊருக்கே சொன்னார்களோ ?
1 comment:
உலகம் இப்படித்தான்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
Post a Comment