4.10.2011

என் காதலியிடம் பேச நினைப்பவை...

உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென என்ன வரம்
வேண்டும் என்ற கடவுளிடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க
வேண்டும் மறைந்துபோ என்றேன்.
இப்போதுதான் யோசிக்கிறேன் வரம்தரும் சாக்கில் உன்னைப்
பார்க்கத்தான் வந்திருப்பாரோ?


இதுதான் என் முதல் ஜென்மமாக இருந்துவிடவேண்டும்.
இன்னும் ஆறு ஜென்மங்கள் மிச்சம் இருக்குமே உன்னோடு வாழ்வதற்கு!


நான் எத்தனை கவிதை எழுதினாலும் எனக்காக எழுதப்பட்ட ஒரே கவிதை நீ .


நீ கனவில் வருவாய் என்பதற்காகவே விழித்துக்கொண்டிருக்கிறது தூக்கம்.....

உன்னை மறக்கமுடியாமல் இறக்கப்போனேன். எமன் சொன்னான் உன்னை மட்டும்தான்
கொள்ளமுடியும் உனக்குள் இருக்கும் அவளை வெளியேற்றிவிட்டு வா.
அதைவிட இறக்காமலேயே இருந்துவிடலாம் ....


இந்த நிமிடத்தோடு உன்னை மறந்துவிடுவதென்று முடிவெடுத்தேன்அடுத்தநிமிடம்
வரவேயில்லை.


உன்னை அளவுக்கதிகமாக காதலித்து அதுதான் நஞ்சாகி என்னைக் கொன்றுவிட்டது..
வாழும்போது முழுமையடையாத வாழ்க்கை உனக்காக சாகும்போது முழுமையடைந்து
விட்டது ..


எந்த வேற்று மொழியின்கலப்பும் இல்லாமல் இருக்கும் ஒரே மொழி மௌனம் .
மௌனம் பேசுவதற்காக அல்ல புரிய வைப்பதற்காக ....




2 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//உன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென என்ன வரம்
வேண்டும் என்ற கடவுளிடம் இப்படியே பேசிக்கொண்டே இருக்க
வேண்டும் மறைந்துபோ என்றேன்.
இப்போதுதான் யோசிக்கிறேன் வரம்தரும் சாக்கில் உன்னைப்
பார்க்கத்தான் வந்திருப்பாரோ?//
Super para. Shows your jealousy.

மணி said...

arumaiaka kavithai varikal