1.12.2011

மழையே உனக்கு மனசே இல்லையா?



மழையே உனக்கு
மனசே இல்லையா?

பெய்யத்தானே சொன்னோம்
நீயோ பேயாட்டம்
போடுகிறாய்

.......................................................

உனக்குத்தானே
இருக்கிறது
கடல்,ஆறு ,குளம்
என நிறைய
இடங்கள்
எதற்காக எங்கள்
வீடுகளுக்குள்ளேயும்
வருகிறாய்

......................................................

ஆக்கக் கடவுள்
என்று நினைத்துத்தானே
உன்னை ரசித்தோம்
பூசித்தோம்
நீயோ அழித்தல்க்
கடவுளாய்
ஆகிப்போனாயே....

....................................................

நாங்கள்
ஏற்கனவே சொந்த
நாட்டுக்குள்
அகதியாகிப்போனோம்
நீ சொந்த
வீட்டுக்குள்
அகதியாக்கிவிட்டாய்..

......................................................

அவசரப்பட்டு
இப்படிக் கொட்டித்
தீர்க்கிறாயே
அடுத்தவருடம்
முழுவதும்
காயப்போடவா?

.......................................................

வேண்டாம் நீ
போய்விடு
உன் தூறல்களைக்
கண்டால்கூட
பயமாயிருக்கிறது
இப்போது....

...........................................................................
.எங்க ஊரில் இன்னும் பெய்துகொண்டே இருக்கிறது மழை. இப்படியே போனால் ஒட்டுமொத்த ஊரே அகதி முகமாகிவிடும் .

3 comments:

THOPPITHOPPI said...

//மழையே உனக்கு மனசே இல்லையா? //

மழைக்கு கண்கள் மட்டுமே உண்டு

அழுவதற்கு

Anonymous said...

very sad to hear

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

I have seen the damage through your photos. Is it some sort of curse on our people?