12.19.2010

கொல்லாமல் விடு

கொஞ்சம் மௌனம்
கொஞ்சம் புன்னகை
போதும்
ஒரு உயிர்
செய்துவிடுகிறாய்
இறந்துவிடும்
எனக்காக

தூரங்களால்
நிர்ணயிக்க
முடியாது
பிரிவை
அன்பு இருக்கும்
உள்ளத்திற்கு
இருப்பதில்லை
பிரிவு..

நீ
என்பதில்
நீ மட்டுமில்லை
நானும்
இருக்கிறேன்

நீ எல்லோரையும்
கடந்து
செல்கிறாய்
என்னை மட்டும்
கடத்திச்
செல்கிறாய்

உன்
பெயரை
உச்சரித்துப் பார்
முன்பை விட
கனமாய் இருக்கும்
அதில்
நானும்
கலந்து விட்டேனே !

நான்
வாழ்வதற்கு
நீர் கூட
வேண்டாம்
நீ
வேண்டும்

சொர்க்கமோ
நரகமோ
உன்
சொல்லில்தான்
இருக்கிறது

நீ
சொல்லாமல்
விட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கொல்லாமல் விடு

உன்னை
நினைத்துக்கொண்டு
வாழ்வதற்காகவேனும்
வேண்டும்
இந்த உயிர்

5 comments:

Anonymous said...

good wording

Meena said...

Very nice. Write more of this kind

தமிழ் said...

அருமை

நேர‌ம் கிடைக்கும் பொழுது எல்லாம் இன்னும் எழுதுங்க‌ள்

sulthanonline said...

நீ
சொல்லாமல்
விட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கொல்லாமல் விடு
þó¾ Å¡¢¸û Á¢¸×õ ¿ýÈ¡¸ þÕó¾Ð. ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û Å¡úòÐì¸û.

sulthanonline said...

நீ
சொல்லாமல்
விட்டாலும்
பரவாயில்லை
என்னைக்
கொல்லாமல் விடு
þó¾ Å¡¢¸û Á¢¸×õ ¿ýÈ¡¸ þÕó¾Ð. ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û Å¡úòÐì¸û.