7.29.2011

காதலில் அடிக்கடி சொல்லப்படும் பொய்கள்

சொல்லொன்னாத்
துயரம்
நீ
இல்லையென்று
சொல்லிய
வார்த்தை ....

சொல்லிய துயரம்
நான்
கவிதையில்
சொல்லிடும்
வார்த்தை ..

உன் புன்னைகை
முழுவதும்
பொய்களின் வாசம்

நீ பேசிடும்
பொய்களில்
கவிதையின் வாசம்

உனக்கென
இருக்குது என்
உயிரெல்லாம்
நேசம்

உனக்குள்ளே
இல்லை
என் மீது
ஒரு துளி
பாசம் ..

உன் பார்வையில்
தெரியுது
பல பல
மாற்றம்
ஆனால்
எவற்றிலும் இல்லை
எனக்கான
தோற்றம் ..

துடிப்பதற்கு
மட்டுமில்லை
காதலில்
வலிப்பதற்கும்
தேவையொரு
இதயம்..

எத்தனை முறை
செத்தாலும்
நீ இருக்கும்
இந்த உலகத்தை
விட்டுப் போக
மனமில்லை
எனக்கு..

காதலிக்கும்
போது
மட்டும்தான்
மரணம் வரும்
முன்னே
வாழ்க்கை வரும்
பின்னே ...

என் மீது
இரக்கம்
தேவை இல்லை
கொஞ்சம்
விருப்பம் வை
போதும்...

கொஞ்சம்
புன்னகை
கொஞ்சம்
மௌனம்
நிறையக்
காதல்
சேர்த்துச் செய்த
கலவை
என் மரணம் ..