6.29.2010

உதிர்ந்தவை


வானத்தை
அளந்தது
தூரம்....

...........................................

சிறகொடிந்தது
தெரியாமல்
பறக்கும் குருவிக்கு
சிறகு
கொடுக்கிறது
காற்று...

..........................................


எத்தனை
கடிகார முள்
குத்தியும்
காயப்படாமல்
இருக்கிறது
காலம்...

............................................

செருப்பில்லாத
குழந்தையின்
காலை குத்திவிடாமல்
முறிந்து விழுந்தன
முட்கள்...

...............................................


நிமிடங்களாக
செலவழிப்பதால்
இன்னும் பெரிதாக
ஒரு முள் .....
மணித்தியாலயங்களாக
செலவழிப்பதால்
சிறிதாகிப்போனது
மறு முள் .....










1 comment:

மதுரை சரவணன் said...

//செருப்பில்லாத
குழந்தையின்
காலை குத்திவிடாமல்
முறிந்து விழுந்தன
முட்கள்...//

அருமை. வாழ்த்துக்கள்