பார்ப்பதற்கு வேண்டுமானால் 
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும்தான் 
நினைப்பதற்கே 
அழகாய் இருக்கிறாய்
நினைப்பதும் ஒரு 
பசிதான் 
என்ன எவ்வளவு 
நினைத்தாலும் 
அது அடங்குவதில்லை
சாமியை நினைத்தால் 
தியானம் 
உன்னை நினைத்தால் 
ஞானம் 
காதலிப்பதைப் போல 
இலகுவான வேலை 
இல்லை 
காதலிக்க வைப்பதைப்போல 
கடினமான 
வேலையும் இல்லை 
எனக்கு வாழ்வதில் 
எந்தக் கஷ்டமும் 
இல்லை 
உன்னை நினைத்தாலே 
போதும் 
அதேபோல் 
சாவதிலும் எந்த 
கஷ்டமும் இல்லை 
உன்னை 
மறந்தாலே போதும் 
நான் எப்போதும் 
தற்கொலை 
செய்ய நினைத்ததே 
இல்லை -உன்னை 
எனக்குக் 
காட்டிய 
இந்த வாழ்க்கையை 
எப்படி என்னால் 
கொலை செய்ய 
முடியும் ...
 
 
