வாசிக்கப்பட்டுவிட்டது...
சட்டபூர்வமாக 
செயலிழக்கச் 
செய்யப்பட்டது 
திருமணம்
குழந்தைக்கும் 
அவளுக்கும் 
ஜீவனாபாயமும் 
அறிவிக்கப்பட்டது 
இனி அவள் 
திருமதி என்று 
போட்டுக்கொள்ள 
முடியாது 
ஆனால் 
விட்டுப்போனவன் 
குழந்தையின் 
பெயரின் முன்னாலும் 
அவன் பெயரை 
நீக்கமுடியாதப்டி 
விட்டுச் சென்றிருந்தான்... 
ஆணாய்
இருப்பது எப்பவும் 
மவுசுதான் 
வழக்கு 
முடிந்தபின் 
அவனைக் கூட்டிச் 
செல்ல 
அவனது புது 
மனைவி 
வந்திருந்தாள் 
அவளை அழைத்துச் 
செல்ல 
செல்லமா மாமி 
மட்டுமே 
வந்திருந்தாள்
செல்லமா மாமி 
வேறுயாருமில்லை ...
சுமங்கலிகள் 
நடத்திவைத்த 
அவள் திருமணத்திற்கு 
அனுமதிக்கப்படாத 
விதவை...
 
 
