Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

11.10.2010

வெட்கத்தின் வார்த்தைகள்..

நீ வரமாட்டாய்
என்று
தெரிந்தும்
காத்துக் கொண்டிருக்கிறேன்
இந்த ஏமாற்றத்தையாவது
எனக்காகத்
தருகிறாயே
என்ற
சந்தோசத்தோடு...

என்ன
வரம்
வேண்டும்
என்ற
கடவுளிடம்
உன்னைக் கேட்டேன்
மன்னித்துக்கொள்
வரம் மட்டுமே
தர முடியும்
தேவதையைத்
தரமுடியாது
என்று சொல்லி
மறைந்துவிட்டான்
கடவுள்


ஆண்கள்
கற்பழிப்பதைப்
போன்றதுதான்
பெண்கள்
காதலை
மறுப்பதும் ...

நீ
வெட்கத்தில்
முகத்தை மூடிய
பின்னும்
வெளியில்
தெரிந்துகொண்டேதான்
இருக்கிறது
வெட்கம்..

மௌனம்
உன் வெட்கத்தின்
வார்த்தைகள் ...

கடந்துபோகும்
அந்த
அவகாசத்தில்
எப்படி
என்னைக் கடத்திப்
போகிறாய்...

என் இதயத்தின்
நீ இருக்கும்
அறையைவிட்டு விட்டு
மற்ற
மூன்று அறைகளையும்
மூடிவிட்டேன்....
கோயிலுக்கு
ஒரு கர்ப்பக்
கிரகம்தான்
இருக்கவேண்டும்...


எனக்கு
இன்னும் நிறைய
உயிர் வேண்டும்
உனக்காக
விடுவதற்காக


11.03.2010

தீபாவளிச் சிறப்புக் கவிதைகள்


நீ
வாழ்த்துச்
சொல்லாத
தீபாவளி
சாதாரண
நாளாகிப்
போனது
நீ
வாழ்த்துச்
சொன்ன
சாதாரண
நாள்
தீபாவளியாகிப்
போனது..


நீ
தீபம் ஏற்றும்
வரைக்
காத்துக்
கொண்டிருக்கும்
தீபாவளி
தன்னைக்
கொண்டாட


சனங்களுக்கு
ஒருநாள்
தீபாவளி
தினங்களுக்கு
நீ
வரும்நாள்
எல்லாம்
தீபாவளி




நீ போட்ட
தீபாவளிக்
கோலத்தைக்
கலைத்துவிட
முடியாமல்
ரசித்துக்
கொண்டிருக்கின்றன
எறும்புகள்...

நீ என்னைச்
சேரும் வரை
காத்துக்கொண்டிருக்கும்
எனது தீபாவளி
கொண்டாடப்படுவதற்காக

10.29.2010

மழையின் சில்மிஷங்கள்

மழை
எல்லோரையும்
நனைக்கும்
உன்னை மட்டும்
அபிஷேகம்
பண்ணுகிறது...


உன்னில்
விழுந்த
மழைத்துளி
கலந்தபோது
புனிதமானது
சாக்கடை


நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை


மழை
மண்ணில் விழுந்தால்
மண் வாசம்
உன்னில் விழுந்தால்
உன்வாசம்


உன்னில்
விழும்போது
ஆணாகிப் போகிறது
மழை...


உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை...


உன்னில்
மழைவிழுகையில்
நீ வெட்கப்படுவதில்
புரிந்துவிட்டது
மழைக்கும்
இருக்கிறது
என் கை..

10.19.2010

கவிதைகளின் காதலி

எல்லோருக்கும்
அழகை
வர்ணிக்க
கவிதை
தேவைப்படும்
எனக்கு மட்டும்
கவிதையை
வர்ணிக்க
நீ தேவைப்படுகிறாய்.....


என்
கவிதைகளின்
அட்ஷயபாத்திரம்
நீ...


முத்தங்களுக்கான
என் தேவையை
குறைத்துவிடுகிறாய்
கவிதைகள் மூலம் ...


நீ
தூரம்போகும்
போதுதான்
என் கவிதைகள்
நிரம்புவதற்கு
நிறைய இடம்
கிடைக்கிறது

நீ
இல்லையென்ற
சோகத்தில்
ஒரு கவிதை
எழுதினேன்
இருந்தாய்
நீ
அந்தக்
கவிதையில்..

பொறாமைப்பட்டுக்
கொள்கிறேன்
நீ என்
காதலியா
கவிதைகளின்
காதலியா?


சொல்லிவிடு
நான்
உன் காதலனா
கவிஞனா?

10.18.2010

கொஞ்சமாவது பேசிவிடு


நீ
என்னைவிடத்
தூரத்தில்
இருந்தாலும்
நான்
உன்
அருகில்தான்
இருக்கிறேன்..

நீ
விட்டுவிட்டுப்
போகின்ற
எல்லாம்
கவிதையா
நான் மட்டும்
கவிஞன்
ஆகிறேன்...

கவிதை
எழுத
வார்த்தைகள்
மட்டும்
போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது..

நீ
அழுவதைப்
பார்த்து
அழுவதா
ரசிப்பதா?
அடிக்கடி
குழம்பிப்போகிறேன்...
.................................................
ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு

10.12.2010

கனவில் வாழ்தல்



நிஜத்தைவிட
கனவில்
நீ
நேரத்துக்கு
வருகிறாய்...

நிஜத்தைப்போல
அல்ல
கனவில் நீ
அதிகம்
பேசுகிறாய்

நிஜத்தைபோல
அல்ல
கனவில்
நான் கேட்காமலேயே
முத்தங்கள்கூடத்
தருகிறாய்

எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

இப்போது
நான்
நிஜத்தில்
இறந்து
கனவில்
பிறந்துவிட்டேன்...

மரணத்தின் பின்

அலைந்துகொண்டே
திரிகிறது
என் ஆத்மா

என் இறப்புக்காக
நீ
சிந்தும்
ஒரு சொட்டு
கண்ணீரில்தானே
அது சாந்தி
அடையும்....

10.11.2010

மிட்டாய் விற்கும் சிறுவன்

மிட்டாய்
விற்கும்
சிறுவனுக்குப்
பாவப்பட்டு
ஒருமிட்டாய்
வாங்கி
அவனுக்கே
கொடுத்துவிட்டு
வந்தேன்
இப்போது
அவன் அதை
சாப்பிட்டுக்கொண்டிருப்பானா
விற்றுக் கொண்டிருப்பானா ?

....................................................................

மிட்டாய் விற்கும்
சிறுவனுக்கு
பள்ளிக்குப்போகாமல்
மிட்டாய் விற்பது
தப்பு என்று
அறிவுரைகூறும்
சிலருக்கு
அவனிடம்
ஒரு மிட்டாய்யேனும்
வாங்கும்
மனசில்லை

....................................................

மிட்டாய் விற்கும்
சிறுவர்களைப்பார்த்து
சின்னவயசில்
பொறாமைப்பட்டு
இருக்கிறேன்
இவர்களிடம்
இவ்வளவு
மிட்டாய்கள்
இருக்கிறதே என்று..
எவ்வளவு
சின்ன
பிள்ளைத்தனமாய்
இருந்திருக்கிறேன்

................................................

ஏனப்பா இந்த
வயதில்
மிட்டாய்
விற்கிறாய்
அப்பா அம்மா
இல்லையா என்று
கேட்டேன்
அவங்க
பெரியாளா ஆகிட்டாங்க
மிட்டாய் யெல்லாம்
விற்கமுடியாது
சார் என்றுவிட்டு
போனான்
என்ன ஒரு
வியாபார யுக்தி!

............................................
மிட்டாய்
விற்கிறாயே
பள்ளிக்குப்
போறதில்லையா
என்றேன்..
போகணும் சார்
இடைவேளையிலதான்
பிசினஸ் போகும்
அதுக்கு
இன்னும் நேரம்
இருக்கு சார்
என்றுவிட்டுப்
போனான் .

10.09.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

ஏதோவொரு
ரகசியத்தில்
தொலைந்துபோகின்றன
நிறைய
உண்மைகள்...

....................................................
பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

....................................................
மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

10.08.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

நான்
பிறந்ததைத்தான்
ஞாபகம்
வைத்துக்கொள்ள
முடியவில்லை
மரணத்தையாவது
ஞாபகம்
வைத்துக்கொள்ள
வேண்டும்...

இல்லாவிட்டால்
அடுத்தபிறப்பில்
மீண்டும்
முதலிலிருந்து
வாழ்ப்பழக
வேண்டுமே!


....................................................

எனக்குமுன்னமே
நான்
பிறந்திருந்தால்
ஒருவேளை
இந்நேரமாவது
என்னைத்
தெரிந்து
கொண்டிருக்கலாமோ?

...................................................

ஊர்வலம்
கோயிலை
நெருங்க நெருங்க
சாமிக்குக்
கிலி பிடித்தது
ஐயோ
மீண்டும்
கோயிலுக்குள்
அடைத்துவிடப்
போகிறார்களே

........................................

இறந்தவரின்
சொந்தக்காரர்களையே
கோயிலுக்குப்
போக
வேண்டாம்
என்கிறார்கள்
அப்போ
இறந்தவர்
கட்டாயம்
சாமி
இல்லாத
நரகத்துக்குத்தான்
போவாரோ!


11.30.2009

sms கவிதைகள்

வெட்கத்தில் தொலைந்தேன்
கொஞ்சம் கூட
வெட்கம் இல்லாமல்



நீ என்
ஞாபகமல்ல
மறந்துவிட...
ஞானம்



எனக்குள்
இருந்துகொண்டு
என்னைவிட்டுப்
போ என்கின்றாய்...



ஏதாவது பேசிவிடு
மௌனத்தின் பாரத்தை
தாங்காது
உன் மனசு...



முதன் முதலாய்
என் கை
பிடித்து நடக்கிறாய்
நடக்கப் பழகுகிறது
காதல்...



காதலாகிக் கசிந்து
கவிதையாகிப்
போனது மனசு...




11.28.2009

சுடுகாட்டில் இருந்து எழுதியவை !

சுடுகாட்டில்
பூக்கும்
பூக்களிலும்
வாசம் ....

****************

மயான
அமைதியில்
திடீரென
கேட்டன
ஒப்பாரிகள்...
ஒரு
பேய்
இறந்து போய்
இருந்தது...

*******************

ஒரு
உடல்
எரிந்துகொண்டிருந்தது
கொஞ்சம்
கொஞ்சமாய்
வெளியேறியது
ஒரு பேய்


**********************

பிறந்தநாள்
கொண்டாடியது
ஒரு பேய்...
அதன் கல்லறையில்
அன்றையதினம்
குறிக்கப்பட்டிருந்தது
`இறந்த திகதி`


*************************`
ஒவ்வொருவரினுள்ளும்
ஒரு பேய்
இருக்கிறது
உயிரைச்சுவாசித்துக்
கொண்டு...
உயிர்பிரியும்
போது
அதுவும்
பிரிந்து
போகிறது....

********************
சுடலை
வைரவரை
வணங்கிவிட்டு
ஊருக்குள்
நுழைந்தது
ஒரு பேய்...
வைரவருக்கு
சடங்கு வைத்துக்
கொண்டிருந்தார்கள்
மனிதர்கள்...

பேயை
விரட்டச்சொல்லி


************************

படுகொலை
செய்யப்பட்ட
நிறையத் தமிழர்கள்
புதைக்கப் பட்டார்கள்
ஒரு குழிக்குள்...

ஒரு சிறிய
அகதிமுகாமில்
நிறையப்பேரை
அடைத்துவைத்து
பயிற்சிதந்தது
இதற்குத்தானா ...


***********************

உடலே
கிடைக்காமல்
சிதறிச்
செத்துப்போன
ஒரு உயிர்
தேடி அழைகிறது
தன் கல்லறையை




*************************

உலகம்
நிரம்பி
விட்டதால்
அடுத்த
பிறவிக்கான
வெயிட்டிங் லிஸ்டில்
நிறையப்
பேய்கள்...


தொடரும்....


முந்திய பேய்க்கவிதைகள்!

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8587.html

http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_8604.html

http://konjumkavithai.blogspot.com/2009/10/blog-post_19.html

11.17.2009

விபரீதமான சில கவிதைகள்




வன்முறை


ரசிப்பதற்காய்
அடைத்து
வைத்த
குருவியின்
குஞ்சுகள்
அனாதைகள்....


விர()க்தி

குடம்
குடமாய்
பால்
ஊற்றினார்கள்
சாமி
அழுதுகொண்டிருந்தது
பசியோடு
கன்றுகள்


அபலைகள்

அனாதை
இல்லத்தில்
அம்மாக்களும்
அப்பாக்களும்
இல்லாத
குழந்தைகள்....

முதியோர்
இல்லத்தில்
பிள்ளைகள்'
இருக்கும்
அம்மாக்களும்
அப்பாக்களும்



விபச்சாரியின் வேண்டுகோள் !

கொடுக்கிற
காசிற்கு
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்
மார்பினை மட்டும்
கசக்கி விடாதே
குழந்தைக்காக
சேர்த்து
வைத்திருக்கிற
சில துளி
பாலையும்
வீணாக்கி விடாதே!



அழுக்கு

உங்கள்
கண்களில்
இருக்கும்
அழுக்கினை
அகற்றி
விடுங்கள்
எல்லோரும்
அழகுதான்


மூட நம்பிக்கை

ஆத்திகத்திற்கும்
நாத்திகத்திற்கும்
இடையே
ஒரே ஒரு
வேறுபாடுதான்
கற்களை
கடவுளாக்கிப்
பார்ப்பது
ஆத்திகம்
கடவுளை
கற்களாக்கிப்
பார்ப்பது
நாத்திகம்...



கடவுளுக்கு
நான்
கொடுத்த
நேர்த்திக்
கடன்தான்
வாழ்க்கையில்
நான் கொடுத்த
முதல்
லஞ்சம்


ஆதிக்கம்

அப்பன்
பெயர் தெரியாத
குழந்தைகள்
என்று
குழந்தைகள்
தண்டிக்கப்பட
அப்பாக்கள்
தப்பித்து
விடுகிறார்கள்


சேமிப்பு

என்னை
அறியாமல்
தூங்கிப்
போனாலும்
விடியும் போது
நான்
இருக்கிறேன்
நானாக..


வாழ்க்கை

நான்
வாழ்ந்து
முடிக்கும்
முன்பே
என்
வாழ் நாளின்
ஒவ்வொரு
நாட்களும்
முடிந்து
போகிறது



முகவரி

அகதி முகாமில்
பிறக்கும்
குழந்தைக்கு
வீடு
அகதி முகாம்


பாசம்

பசியில்
அழுகின்ற
குழந்தையின்
வாயில்
வேறு
வழியில்லாமல்
வெற்றுச்
சூப்பியை
வைக்கும் போது
தூங்கிப் போன
குழந்தைகள்
சிலவேளை
நடிக்கலாம்
தூங்குவதைப் போல..
அம்மாக்கள்
கவலைப் படக்கூடாது
என்பதற்காக


11.08.2009

சின்னதா சில கவிதைகள்

ஒரு விபச்சாரியின் நியாயம்

கற்பின்
விலையைத்
தீர்மானிக்கும்
பசி


கற்பை
புனிதமாக்கி
பக்தனாக
இருந்தாலும்
பசிக்கு
அடிமையாகத்தான்
இருக்க
வேண்டும்

**********************


ஒரு காதல் கவிதை

கடவுள்
எத்தனை
அழகான
கவிதைகளை
படைத்திருந்தாலும்
எழுத்துப் பிழை
இல்லாமல்
எழுதிய
முதல் கவிதை
நீ.....

*************************


சின்னதா ஒரு கற்பனை

ஒரு துளியையேனும்
வீணாக்காமல்
குடித்துக் கொண்டிருந்தது
மண்
பெய்து கொண்டிருந்து
மழை ....


**************************

திருவிழா]

பண்டிகையில்
மிஞ்சியதை
அடுத்தநாள்
குப்பையில்
கொட்டினார்கள்...
பிறந்தது
தெருவோரக்
குழந்தைகளுக்குப்
பண்டிகை



********************




6.23.2009

அழகு நிரம்பி வழிகிறது

யோசிக்காமலேயே
வருகின்றன
நிறைய கவிதைகள்
உன்னைப் பற்றி
நினைக்க நினைக்க .....


ஒரு கவிதைக்கான
கரு எப்படி
சிதறிக் கிடக்கிறது
பாருங்கள்...
அவள் உடைத்துப்
போட்ட....
கச்சான் கோதுகள்


உன்னைச்
சூடிக்கொள்வதால்
என் கவிதைகளில்
கூட...
வாசம்.



உன் அழகு
பொத்தி
வைக்கப்பட முடியாமல்
நிரம்பி
வழிகிறது
என் கவிதைகளில்...






6.22.2009

காதல் வழிகிறது




பட்டினி கிடந்தே
மெலிந்து போன
ஈழத்துக்
குழந்தைகள் போல...
உன் பார்வையின்றி
மெலிந்து
கிடக்கிறது
காதல்



கல்லில்
சாமியை
வணக்குவது போல்
உன்னில்
காதலை
வணங்குகிறேன்..



இனி
உன்னை
கண்ணாடியில்
பார்க்காதே
என்
கவிதைகளில்
பார்...



ஓசோன்
படையில்
ஓட்டை போட்டு
உன்னை ரசிக்கிறது
சூரியன்..



அகதி முகாமில்
அடைபட்ட
அகதிக்கு
நிவாரணம் தாங்கி
வரும் லொறி
போல...
எனக்கு
நீ காதலை
தாங்கி
வருகிறாய்...

காதலைத் தொலைத்தவர்களுக்காக மட்டும் (கட்டாயமல்ல )

காதலில்
தொலையலாம்
யாரும் காதலை
தொலைக்க
முடியாது...


காதல்
புனிதமானது ....
காதலிப்பவர்
விட்டுப் போனாலும்
காதல்
யாரையும்
விட்டுப்போகாது


காதலுக்காக
தற்கொலை
செய்பவர்கள்
தங்களை
மட்டுமல்ல
காதலையும்
கொலை
செய்கிறார்கள்...
சாக வைப்பதல்ல
உயிர்ப்பிப்பதே
காதல்...


நீங்கள் காதலை
தொலைத்தவர்களா?
இல்லை ...
உங்களைத்
தொலைத்தவர்கள்....
உங்களைக்
கண்டுபிடியுங்கள்
உள்ளேயே
ஒட்டிக் கொண்டிருக்கிறது
இன்னும் காதல்




வெட்கத்தில் தொலைந்தவன்




கர்ப்பத்தைப்

போலதான்...
எப்படித்தான்
பொத்தி வைத்தாலும்
கடைசியில்
உன்னைப்
பார்த்ததும் ...
பிறந்து விட்டது
காதல்


நீ கோயிலுக்குப்
போனாய்..
சாமி
சந்நியானத்தில்
இருந்த
பூக்கள் எல்லாம்
பொறாமைப்
பட்டுக் கொண்டன
உன் கூந்தல்
பூவைப் பார்த்து


எப்போதாவது
என் காதில்
விழுகின்ற நீ
பேசுகிற
ஒவ்வொரு
வார்த்தையையும்
ஒவ்வொரு நோட்டுப்
புத்தகத்தில்
எழுதி வைக்கிறேன்
ஒவ்வொன்றும்
கவிதைப் புத்தகம்


ஒரே பூ
திரும்பத் திரும்ப
பூக்கின்றது ....
உன் வெட்கம்


நிறையப்
பெண்கள்
வெட்கத்தைத்
தொலைத்து
விட்டார்கள்
நான் உன்
வெட்கத்தில்
தொலைந்து
விட்டேன்...

பாடப் புத்தகத்தை
எத்தனை முறை
படித்தாலும்
ஏறாத இந்த
மரமண்டைக்கு
ஒரே பார்வையில்
காதலிக்கக்
கற்றுக் கொடுத்துவிட்டு
போகிறாய்...






6.21.2009

துளிக் காதல்


அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சாம்
கவனம்
அழகு விஷமாகப்
போகிறது உனக்கு


..........................
கோயில்
அன்னதானத்தில்
பரிமாறத்
தொடங்கினாய்....
சாமி வந்து
உட்கார்ந்துகொண்டது
ஒரு பந்தியில்


...........................
நீ எத்தனை
முறை மறுத்தாலும்
உன்னை விட்டு
வெளியேற
விருப்பமில்லை
காதலுக்கு


...................................
மூச்சை
அடக்கும்
அளவுக்குக்
கூட
காதலை
அடக்க முடியாமல்
கஷ்டப்படுகிறது
மனசு...

காதலுக்காக பேசுகிறேன்


காதலை
எதிர்க்கும்
ஒவ்வொருவருக்குள்ளும்
கட்டாயம் ஒரு
காதல் இருக்கும்



தோற்றுப் போன
காதலுக்காக
தற்கொலை
செய்பவனை விட
தோற்றுப் போன
காதலை தாங்கி
வாழ்பவர்களால்தான்
காதல் இன்னும்
உயிர் வாழ்கிறது