8.10.2010

சும்மா !!!!!!

காற்றடிக்கும்
போதெல்லாம்
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
தண்ணியில் ....

காற்று
இல்லாமலேயே
ஆடிக்கொண்டிருந்தது
நிலவு
அவன்
தண்ணியில்...

..........................................................

வேலைக்குப்
போகும் அவசரத்தில்
கிளம்பவேண்டியிருக்கிறது
வீட்டில்
நிறைய வேலைகளை
விட்டுவிட்டு....


...............................................................

அவளும்
நண்பர்கள் என்று
நிறையப் பேரை
அறிமுகப்படுத்திவிட்டாள்

நானும் நண்பிகள்
என்று
நிறையப்பேரை
அறிமுகப்படுத்தி விட்டேன் !

அவர்களில்
ஒருவனையேனும்
காதலித்திருக்கமாட்டாலோ
என்று நான்
நினைத்ததைப்போல

இவள்களில்
ஒருத்தியையேனும்
காதலித்திருக்கமாட்டாரோ
என்று
அவளும்
ஒருவேளை
நினைத்திருப்பாளோ.....!

.............................................................


கவிதை
எழுதத் தெரிந்தவன்
கவிதையெழுதி
தப்பித்துக்கொள்கிறான்
தெரியாதவன்
காதலித்து
மாட்டிக்கொள்கிறான்....

6.29.2010

உதிர்ந்தவை


வானத்தை
அளந்தது
தூரம்....

...........................................

சிறகொடிந்தது
தெரியாமல்
பறக்கும் குருவிக்கு
சிறகு
கொடுக்கிறது
காற்று...

..........................................


எத்தனை
கடிகார முள்
குத்தியும்
காயப்படாமல்
இருக்கிறது
காலம்...

............................................

செருப்பில்லாத
குழந்தையின்
காலை குத்திவிடாமல்
முறிந்து விழுந்தன
முட்கள்...

...............................................


நிமிடங்களாக
செலவழிப்பதால்
இன்னும் பெரிதாக
ஒரு முள் .....
மணித்தியாலயங்களாக
செலவழிப்பதால்
சிறிதாகிப்போனது
மறு முள் .....










6.20.2010

மௌனத்தில் கொட்டிக் கிடக்கும் வார்த்தைகள் .....

உதடுகள்
மௌனமானாலும்
உடம்பு முழுவதும்
வாய்
முளைக்கும்
காதலுக்கு

........................................

என்
ரகசியங்களை
சேமித்து வைக்கின்றேன்
உன்
மௌனத்தில்...

................................................


உன்
மௌனத்தை
கொஞ்சம்
கட்டி வையேன்
இப்படி
வார்த்ததைகள்
வந்து
கொட்டுகின்றனவே!

................................................

நீ
மௌனிக்கும்
போதுதான்
புரிந்துகொண்டேன்
மௌனத்திற்கு
பூக்கத்தான்
தெரியும்
பேசத் தெரியாது...

.........................................

உலகத்தில்
அதிகம்
பேசப்படும்
மொழி
எதுவென
ஆசிரியர்
கேட்டார்
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைச் சொல்ல
நீ மட்டும்
மௌனமாய்
இருந்தாய்
சரியென்பதைப் போல
ஆசிரியரும்
விட்டு விட்டு
வேறுபாடம்
நடத்தத்
தொடங்கினார்...

..............................................

உன் வார்த்தைகளை
ரசிக்கலாம்
மௌனத்தை
அனுபவிக்கலாம்...


..................................................






5.27.2010

வாழ்க்கை நிறையக் கவிதை

நன்றி நிறையக்
கவிதை நிரம்பி
இருக்கிறது
தெரியாத ஒரு
அழகான பொண்ணு
சொல்லும்
`தங் யூ `வில் ..
................................................

பக்கத்து
வீட்டுப் பையன்
மோட்டார் பைக்கில்
போவதைப் பார்த்து
எனக்கும் வாங்கிக்
கொடுக்க
வசதியில்லையே
எனக் கவலைப்படும்
அப்பா அம்மாவைப்
பார்த்துச்
சந்தோசப்பட்டுக்
கொண்டேன்
கொடுத்து
வைத்திருக்க வேண்டும்
இப்படி
அம்மா அப்பா
கிடைக்க...


.............................................................


பிள்ளைகள்
வளர்ந்து விட்டதால்
பிள்ளைகள் மீது
அப்பா கோபப்படுவதை
அம்மா தடுத்து நிறுத்துவதாய்
முடிந்து விடுகிறது
இருவருக்குமிடையான
சில்மிஷம் ...


விபச்சாரியின் கணக்கு

விபச்சாரியின்
வரவு செலவுக்
கணக்கிலும்
காசு மட்டுமே
இருந்தது
வந்து போனவன்கள்
இல்லை....