Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

11.01.2010

ம் ....


நீ
பேசாமல் போனாய்
புரிந்துகொண்டேன்
பேசிவிட்டுப் போனாய்
குழம்பிப் போனேன்


எல்லோருக்கும்
பேசுவதற்கு ஒரு
மொழி தேவைப்படும்
உனக்கு மட்டும்
பேசாமல்
இருப்பதற்கு
ஒரு மொழி
தேவைப்படுகிறது...


உன்னிடமிருந்து
ஏதாவது
தவறி விழும்
போதெல்லாம்
ஒரு கவிதை
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது...

நீயே
தவறிவிழும்
போது...
என் மனது
விழுந்து
தற்கொலை
செய்துகொள்கிறது

உன்னோடு
வாழ்வதற்கான
இறுதி முயற்சி
மரணம்

10.10.2010

மௌனம்



நீயும் நானும்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதைப்பார்த்து
நமக்கிடையே
என்ன பிரச்சினை
என்கிறார்கள்...
காதலைவிட
பெரிய பிரச்சினை
என்ன
இருந்துவிடப்போகிறது...

10.06.2010

உன் வெட்கம் பேசுகிறது





வெட்கம்
இதுவரை
கவிஞர்களுக்கு
மட்டுமே
பயன்பட்டது
நீ
வெட்கப்படும்போதுதான்
முதன்முதலாய்
வெட்கப்படுவதற்கும்
பயன்படுகிறது


உன் பிறந்தநாளை
மட்டும்
பத்திரப்படுத்திவிடத்
துடிக்கிறது
கலண்டர்...

நீ
பிறக்காத
364 நாட்களையும்
தண்டிக்கிறது
காலம்.

உனக்காகக்
காத்திருக்கும்போது
என்
கடிகாரத்திற்கும்
கண்முளைக்கிறது

நீ வந்து
பேசப்போகிற
வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறது
தமிழ்


நீ
வந்தாலும்
ஏதும்
பேசப்போவதில்லை...
இருந்தாலும்
நீ கடந்துபோகிற
கணங்கள்
கவிதையாகிப்போகும்

அழகிப்போட்டியில்
வெறும்
அழகிகள் மட்டுமே
இருக்கிறார்கள்
உன்னில்
மட்டும்தான்
அழகே
இருக்கிறது

உனக்காகக்
காத்திருக்கும்
பொழுதுகளில்
நீ
வராவிட்டாலும்
எப்படியோ
வார்த்தைகளை
அனுப்பிவிடுகிறாய்
என்
கவிதைகளுக்கு

நீ
பேசப்பேசத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர்வருகிறது
தமிழுக்கும்
எனக்கும்

உன்னைபார்க்கும்வரை
வாழவதற்கென
இருந்தவாழ்க்கை
இப்போது
காதலிப்பதற்கென
மாறிவிட்டது


நல்லவேளை
உன்னைப்
பார்த்துவிட்டேன்
இல்லாவிட்டால்
உலகம் என்ற
சின்ன
இடத்திலேயே என்
வாழ்க்கை
முடிந்துபோயிருக்கும்....

என்
கல்லறையின்
வாசகமாக
உன் மௌனத்தை
எழுதவேண்டும்

எதற்காக
என்னைக்
காதலிக்கிறீர்கள்
என்று
கேட்கிறாய்...
வாழவதற்காக!



10.04.2010

மௌனம்



நீண்டநாளாய்
ஒருவார்த்தையைத்
தொலைத்துவிட்டு
தேடியலைந்தேன்...

எங்கெல்லாம்
தேடியும்
கிடைக்காத
அந்த
வார்த்தையை
இறுதியில்
உன்
மௌனத்தில்
கண்டுபிடித்தேன்...

இன்னும்
எனது
வார்த்தையை
பேசிவிடாமல்
கவனமாகப்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய்

உன்
மௌனம்
என் மீதான
அக்கறை...

................................................

பேசும்போது
ஒரு
அர்த்தம்தான்
கிடைக்கிறது
பேசாமல்
இருக்கும்போதுதான்
நிறைய
அர்த்தங்கள்
கிடைக்கின்றன
வார்த்தைகளுக்கு...

10.01.2010

காதல் வ(லி)ரி !





தேவலோகத்தில்
படைக்க வேண்டிய
உன்னை
தவறுதலாக
பூலோகத்தில்
படைத்துவிட்டான்
பிரமன்...

எனக்குள் இருக்கும்
உன்னையெல்லாம்
வெளியே எடுத்துப்
பார்த்தேன்
மிச்சமாக
எனக்குள்
நான்கூட
இல்லை....

நாங்கள்
கோயிலுக்குப்போனால்
எங்களுக்கு
மன அமைதி
நீ கோயிலுக்குப்
போனால்
சாமிக்கு
மன அமைதி



கவிதைகளை
நான்
எழுதிக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்தபோது
ஒரு கவிதை
என்னை
எழுதத் தொடங்கியது...



உனக்கே தெரியாமல்
எனக்குள்
இருக்கிறாய்
நீ

உன்னால்தான்
உயர்திணையாகிறது
நான்

என்னைவிட்டுப் போ
என்கிறாய்
எனக்குள் இருக்கும்
உன்னை
எடுத்துவிடு
போகிறேன்....

வீட்டுக்குள்
போய்
கதவை மூடிக்கொண்டாய்
வெளியே
சிறைப்பட்டுப் போனேன்

இறப்பதில்
ஒன்றும் கஷ்டமில்லை
இறந்தபின்பும்
உன்னை
மறக்காதபடி
ஒரு
மரணம்
வேண்டும்

கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாது
என்று
இருந்தவனை
நீ வந்து
திருத்திவிட்டாய்

நீ
காதலிக்காவிட்டாலும்
நான்
காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும்
தொடர்ந்து
சாமியை
வணங்கும்
பக்தனைப்போல ...

எல்லாச் செடியிலும்
பூக்கள்தான்
பூக்கும்
உன் ரோஜாச்
செடியில் மட்டும்
நீயே
பூக்கிறாயே


நீ
பிடிக்கவில்லை
என்று சொல்லும்
ஒவ்வொரு பொழுதிலும்
செத்துப்பிறக்கிறேன்
உனக்குப்
பிடித்தவனாய்ப்
பிறப்பதற்கு ...


6.20.2010

மௌனத்தில் கொட்டிக் கிடக்கும் வார்த்தைகள் .....

உதடுகள்
மௌனமானாலும்
உடம்பு முழுவதும்
வாய்
முளைக்கும்
காதலுக்கு

........................................

என்
ரகசியங்களை
சேமித்து வைக்கின்றேன்
உன்
மௌனத்தில்...

................................................


உன்
மௌனத்தை
கொஞ்சம்
கட்டி வையேன்
இப்படி
வார்த்ததைகள்
வந்து
கொட்டுகின்றனவே!

................................................

நீ
மௌனிக்கும்
போதுதான்
புரிந்துகொண்டேன்
மௌனத்திற்கு
பூக்கத்தான்
தெரியும்
பேசத் தெரியாது...

.........................................

உலகத்தில்
அதிகம்
பேசப்படும்
மொழி
எதுவென
ஆசிரியர்
கேட்டார்
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைச் சொல்ல
நீ மட்டும்
மௌனமாய்
இருந்தாய்
சரியென்பதைப் போல
ஆசிரியரும்
விட்டு விட்டு
வேறுபாடம்
நடத்தத்
தொடங்கினார்...

..............................................

உன் வார்த்தைகளை
ரசிக்கலாம்
மௌனத்தை
அனுபவிக்கலாம்...


..................................................