Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts
Showing posts with label குட்டிக் கவிதை. Show all posts

5.27.2010

விபச்சாரியின் கணக்கு

விபச்சாரியின்
வரவு செலவுக்
கணக்கிலும்
காசு மட்டுமே
இருந்தது
வந்து போனவன்கள்
இல்லை....

1.31.2010

கவிதை

எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

பகுத்தறிவு

அறிவாளி
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...

ஆறாவது அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு

வெளி

உனக்கும்
எனக்கும்
இடையே
எதுவும்
இல்லை
காதலைத்
தவிர ...

அனுதாபம்

பக்கத்து
வீட்டுப் பிள்ளைக்கு
காய்ச்சல்
என்றவுடன்
அனுதாபப் பட
உதவும்
அதே மனதுதான்
அந்தப்பிள்ளையை
வைத்திய சாலைக்கு
அழைத்துச் செல்ல
காரைக் கடன்
கேட்கும்போது
பெற்றோல்
முடிந்துவிட்டது என்று
பொய் சொல்லவும்
உதவுகிறது

தேடல்

எதைப்பற்றி
கவிதை எழுதலாம்
என்று
தேடித் தேடிக்
களைத்த பின்பு
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
தேடல்

விட்டில் பூச்சி

என் விளக்கின்
வெளிச்சத்திற்கு
விட்டில் பூச்சிகள்
வந்துவிடும்
என்ற
அச்சத்தில்
ஜன்னல் கதவுகள்
எல்லாவற்றையும்
மூடிவைத்துவிட்டு
கவிதை
எழுதத்தொடங்கினேன்
தலைப்பு
விட்டில் பூச்சி!

வெளிச்சம்
கிடைக்காததால்
இருபத்திநாலு
மணிநேரத்திற்கு
முன்னமே இறந்து
விழுந்தன
விட்டில்
பூச்சிகள்...

மரணத்தின் உண்மை

மரணம் பற்றிய
என்
சந்தேகங்கள்
தீர்ந்தது
நான்
மரணித்தபோது...

அழகான கவிதை

கழிப்பறையில்
இருந்து
யோசிக்கும்போதும்
கிடைக்கிறது
அழகான
கவிதை....