தமிழன் -நான் அதனாலேயே தலை குனிந்து போகவேண்டியவன் நான்...
குண்டுச் சத்தமே தாலாட்டு என்றெண்ணிய எங்கள் குழந்தைகள் தாயின் தாலாட்டை நிராகரிக்கின்றன...
வீடு கட்டி விளையாடச் சொன்னால் இல்லை இல்லை அகதிமுகாம் கட்டியே விளையாடுவோம் என்றே... அடம் பிடிக்கின்றன எங்கள் குழந்தைகள்... அகதி முகாமிலேயே வாழப் பழகிய எங்கள் குழந்தைகளுக்கு அந்நியமாகிப் போனது வீடு
சிரிப்பது என்றால் என்ன அம்மா? என்கிறது .... மூன்று வயதாகியும் இன்னும் சிரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காத ஒரு குழந்தை...
மூன்று வேளையும் சாப்பாட்டுக்குப் பிறகு.. என்று வைத்தியர் கொடுத்த மருந்தை ஒருவேளை மட்டுமே சாப்பிடும் குழந்தைக்கு எப்படிக் கொடுப்பதாம் ...?
பாலே இல்லாமல் செத்துப் போன குழந்தைகளுக்கு பால் ஊற்றுவது எப்படி..
எட்டு வயதைக்கூட எட்டிப் பிடிக்க முடியாமல் எங்கள் குழந்தைகள் செத்துப் போக சிலபேர்.. வெட்கமில்லாமல் எண்பத்தாறு வயதையும்.... பார்ட்டி போட்டு கொண்டாடுகிறார்கள்..
போட்ட குண்டுச் சத்தம் போதாதென்று... சிலர் வெற்றியை பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டாடுகிறார்கள்....
மரணத்தின் அவசரம் புரியாமல் தொலைபேசி இருக்க கடிதமும் தந்தியும் அனுப்பிய... முட்டாள்கள் நாங்கள்...
மிருகக்காட்சி சாலைக்குள் இருக்கும் மிருகங்கள் கூட சிலவேளைகளில் வெளியே வரும்.... முட்கம்பிக்குள் இருக்கும் எங்கள் மக்கள் எப்போது வெளியே வருவார்கள்....?
நான் திரட்டிகளில் அறிமுகம் ஆகி ரெண்டு வாரம் கூட ஆகாதா போது, எனக்குக் கிடைத்த இந்த அறிமுகம் , ஒரு மாதத்திலேயே சராசரி ஹிட்ஸ் 300 எட்டிப் பிடிக்க உதவியது.
முகம் தெரியாத நண்பி ஷக்திக்கும் நன்றி...
இதே போல் என்னை எதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பட்டாம் பூச்சி பிடித்துத் தந்த நண்பி ஜெஸ்வந்திக்கும், முப்பத்திரெண்டு கேள்வித்தொடரில் மாட்டிவிட்ட நண்பி நாணலுக்கும் நன்றி.
*********************************************************************************** இதுவரை எனக்கு அதிக பின்னூட்டங்கள் வழங்கிஉள்ளவர் S.A. நவாஸுதீன் அண்ணா , அடுத்ததாக ஜமால் அண்ணா.
இவர்களுக்கும் நன்றி.
( தயவுசெய்து தொடர்ந்து நிறைய பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள் ! எல்லோரின் பெயரையும் போட்டால் அதற்கு தனி இடுகை வேண்டுமே!)
பெயர் குறிப்பிடாத , தொடர்ந்து பின்னூட்டம் போடுபவர்களுக்கும்,மற்றும் அனானி நண்பர்களுக்கும், நன்றிகள்.
பொய்யாகத்தான் சிரிக்கிறார்கள் என்று தெரிந்தும் பதிலுக்கு சிரித்து விட்டுத்தான் போக வேண்டியிருக்கிறது!
மேலதிகமாக வேலை செய்து வரும் மேலதிக சம்பளத்திற்கு மேலதிகமாக ஏதாவது செலவு... வந்துவிடுகிறது ஒவ்வொரு மாதமும்!
மதுப்போத்தல் வாங்கும் போது அழுத்துக்கொல்வதை விட.... அதிகமாக அழுத்துக்கொல்கிறது மனசு பிள்ளைக்கு பால் போத்தல் வாங்கும் போது! விலைவாசி ஏறிவிட்டதே என்று....
வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்கும் போது சந்தோசப்படுகிறது மனசு... இன்னுமொருமுறை நம்பிக் கடன் தருவார் என்று...
மரண வீட்டில் அறிமுகமானவர்களை பார்த்து வழமைபோல் சிரிக்கலாமா இல்லையா என்று இத்தனை வயசாகியும் தெரியவில்லை எனககு
சிக்கெரெட் வாசத்தை விட அதை மறைப்பதற்காக பூசும் வாசத்தை வைத்தே கண்டுபிடித்து விடுகிறாள் மனைவி நான் சிக்கெரெட் பிடித்திருப்பதை ....
சிதறிக்கிடந்த என் அறையின் பொருட்களை ஒழுங்காக்கியபின் தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது எனககு தேவையான போருட்களை....
நான் சின்ன வயசில் செய்ததாக சொல்லும் சாகசங்களை மனைவி பொய் என்று அறிந்து விட்டதால் பிள்ளைகளிடமே சொல்லிக் கொண்டிருக்கிறேன் இன்னும் கொஞ்ச நாளில் பேரப்பிள்ளைகளிடம் தான் சொல்லவேண்டியிருக்கும் .......
எல்லோருக்கும் தெரிந்த என் முதல் காதலை விட... எனக்கு மட்டும் தெரிந்த முதல் காதலே அதிகம் சுவாரசியமாக இருக்கிறது...
கையில் கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தாலே ! பக்கத்தில் வருபவர்கள் எல்லோரையும் திருடனாகத்தான் பார்க்கிறது மனசு...
பழைய காதலை மறைப்பதற்காக மனைவியை அதிகம் காதல் செய்யவேண்டியிருக்கிறது இப்போது ...
விடுமுறை என்றாலே வெளியேதான் செல்லத் துடிக்கிறது மனசு..... வீட்டிலே காத்துக்கிடக்கின்றன நிறைய வேலைகள்....
மயானத்தை கடக்கும் போது மட்டும் வாழ்க்கையில் அமைதி இல்லை என்று நினைக்க தோன்றுவதில்லை மனசுக்கு ...
வாசலில் கொண்டுவந்து தரும் மரக்கறி வியாபாரியிடம் சண்டைபோட்டு மிச்சம் பிடிப்பதை விட அதிகமாக உபரிப்பணம் (Tips) கொடுக்கிறாள் மனைவி ! மேசை அருகே பீசா கொண்டுவருபவனுக்கு ...
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு இடுகையை பதிவிட்டு சற்று நேரத்திலேயே நீக்கினேன். அந்த இடுகையை மீண்டும் இங்கே இடுகிறேன்! இது எந்தளவிற்கு ஒரு எழுத்தை பின்னூட்டம் வலுப்படுத்தும் என்பதைக் காட்டுவதற்காக.
அந்தபின்னூட்டம் ... தமிழரசி said...
சூப்பர்.... - செருப்பு
இதை நீக்கிடுங்கள்..இந்த எண்ணம் உங்களுக்கு மட்டுமே தோன்றியது தான்...ஆனால் கண்டிப்பா பதிவர்கள் மனம் வருந்தும் நீங்கள் வளர்ந்து வரும் ஒர் நல்ல பதிவர்..இதை உங்கள் பால் அக்கறையில் மட்டும் சொல்கிறேன்....
நண்பர்வசந்த் இதே கோரிக்கையை மெயிலில்கேட்டிருந்தார் .... ( இந்த இடத்தில் ஒரு உதாரணத்திற்காக இந்த இடுகையை போடுவது யாரையும் காயப்படுத்தாது என்று நம்புகிறேன்)
(ஏதோ போட்டி நடக்குதாமே , அதற்காக எழுதினதுதான் , ஆனால் பரிசு சொக்கனுக்கு இல்லை ) இதற்குகிடைத்தபின்னூட்டம்குறைவுஎன்பதால்கொஞ்சம்கவலைதான். நீங்கள்இப்போதுகூடஅந்தக்கதையைவாசித்து , ஏதோகதைபோலதான்இருக்கு? என்றுஒருவார்த்தைசொன்னால், இதுபோலஇன்னும்நிறையஎழுதிஉங்கள்கழுத்தைஅறுப்பேன்.
உண்மை தான்