10.01.2010

காதல் வ(லி)ரி !





தேவலோகத்தில்
படைக்க வேண்டிய
உன்னை
தவறுதலாக
பூலோகத்தில்
படைத்துவிட்டான்
பிரமன்...

எனக்குள் இருக்கும்
உன்னையெல்லாம்
வெளியே எடுத்துப்
பார்த்தேன்
மிச்சமாக
எனக்குள்
நான்கூட
இல்லை....

நாங்கள்
கோயிலுக்குப்போனால்
எங்களுக்கு
மன அமைதி
நீ கோயிலுக்குப்
போனால்
சாமிக்கு
மன அமைதி



கவிதைகளை
நான்
எழுதிக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்தபோது
ஒரு கவிதை
என்னை
எழுதத் தொடங்கியது...



உனக்கே தெரியாமல்
எனக்குள்
இருக்கிறாய்
நீ

உன்னால்தான்
உயர்திணையாகிறது
நான்

என்னைவிட்டுப் போ
என்கிறாய்
எனக்குள் இருக்கும்
உன்னை
எடுத்துவிடு
போகிறேன்....

வீட்டுக்குள்
போய்
கதவை மூடிக்கொண்டாய்
வெளியே
சிறைப்பட்டுப் போனேன்

இறப்பதில்
ஒன்றும் கஷ்டமில்லை
இறந்தபின்பும்
உன்னை
மறக்காதபடி
ஒரு
மரணம்
வேண்டும்

கடவுளே வந்தாலும்
திருத்தமுடியாது
என்று
இருந்தவனை
நீ வந்து
திருத்திவிட்டாய்

நீ
காதலிக்காவிட்டாலும்
நான்
காதலித்துக்கொண்டே இருப்பேன்
வரம் தராவிட்டாலும்
தொடர்ந்து
சாமியை
வணங்கும்
பக்தனைப்போல ...

எல்லாச் செடியிலும்
பூக்கள்தான்
பூக்கும்
உன் ரோஜாச்
செடியில் மட்டும்
நீயே
பூக்கிறாயே


நீ
பிடிக்கவில்லை
என்று சொல்லும்
ஒவ்வொரு பொழுதிலும்
செத்துப்பிறக்கிறேன்
உனக்குப்
பிடித்தவனாய்ப்
பிறப்பதற்கு ...


No comments: