எல்லோரையும்
நனைக்கும்
உன்னை மட்டும்
அபிஷேகம்
பண்ணுகிறது...
உன்னில்
விழுந்த
மழைத்துளி
கலந்தபோது
புனிதமானது
சாக்கடை
நீ
குடைபிடித்துப்
போனால்
உன்
குடையில்
விழுந்து
தற்கொலை
செய்கிறது...
மழை
மழை
மண்ணில் விழுந்தால்
மண் வாசம்
உன்னில் விழுந்தால்
உன்வாசம்
உன்னில்
விழும்போது
ஆணாகிப் போகிறது
மழை...
உன் மேக்கப்
எல்லாம்
கலைத்து விட்டாலும்
உன் அழகைக்
கொஞ்சம் கூடக்
குறைத்துவிடுவதில்லை
மழை...
உன்னில்
மழைவிழுகையில்
நீ வெட்கப்படுவதில்
புரிந்துவிட்டது
மழைக்கும்
இருக்கிறது
என் கை..