2.13.2010

காதலர் தின சிறப்புக்கவிதை... ரெண்டு

பீச்
பூங்கா என்று
அலையாமல்
காதலர்
தினத்தைக்
கொண்டாட
கோயிலுக்குப்
போனோம்

விலையுயர்ந்த
ஐஸ் கிரீமோ
சிக்கன் 65 வோ
இல்லை ..

எனக்கு நீயும்
உனக்கு நானும்
இட்டுக்கொண்ட
திருநீறும்
சந்தனப்பொட்டும்
காதலை
பரிமாற வைத்தன

மற்ற
திருவிழாக்களைப்
போலல்ல
கோயிலில்
கூட்டம்
குறைவாகத்தான்
இருந்தது
காதலர்
தினத்தன்று



***********************
கூடப்படிக்கும்
பொண்ணு போடும்
வளையல்

பக்கத்துவீட்டுப்
பொண்ணு
கட்டும் சேலை

இப்படி இன்னும்
பல ..
என்று உன்
விருப்பப் பட்டியல்
தெரிந்திருந்தும்..

வாங்கித்தர
வசதியில்லாமல்....

நிலவைப்
பிடித்துத்
தருவேன்...
நட்ஷத்திரத்தை
பரிசளிப்பேன்
என்று
கவிதை எழுதி
சமாளிக்கும்
போது...

நீ சந்தோசப்
படுகிறாயா
அல்லது
நான்
கவலைப்படக்
கூடாது
என்பதற்காக
சந்தோசப்படுவதாய்
நடிக்கிறாயா?


2.08.2010

அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு

1.31.2010

கவிதை

எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

பகுத்தறிவு

அறிவாளி
என்று
தப்பட்டம்
அடித்துக்கொள்பவனுக்கும்
முட்டாளுக்கும்
மொத்தம் இருக்கிறது
ஆறு அறிவுதான்...

ஆறாவது அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு